என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
புலி திரும்பி வந்து விட்டது: சஞ்சய் ராவத் விடுதலை குறித்து உத்தவ் கட்சி கருத்து
- மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது.
- உண்மை வெற்றி பெற்றுள்ளது.
மும்பை :
பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டபோது, "கோர்ட்டுக்கு நன்றி" என்று கூறினார்.
இதையடுத்து அவர் சிவாஜிபார்க்கில் உள்ள பால்தாக்கரே சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது பற்றி கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) செய்தி தொடர்பாளர் சுஷ்மா அந்தரே நிருபர்களிடம் கூறுகையில், "புலி திரும்பி வந்துவிட்டது. சஞ்சய் ராவத் போன்ற தலைவர்கள் இருக்கும் வரை கட்சி பயப்பட வேண்டியதில்லை" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரோஹித் பவார், கூண்டில் இருந்து புலி விடுவிக்கப்பட்ட வீடியோவை டுவீட் செய்து, ராவத்துக்கு டேக் செய்தார். உண்மை வென்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சய் ராவத்தின் சகோதரரும், விக்ரோலி எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் கூறுகையில், "மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது. சட்டசபையில் காவிக்கொடி ஏற்றப்படுவதை காண அவர் மீண்டும் கட்சிக்காக பணியாற்ற தொடங்குவார். உண்மை வெற்றி பெற்றுள்ளது" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்