search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sam CS"

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘அயோக்யா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ayogya #Vishal
    ‘சண்டக்கோழி 2’  படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயோக்யா’.

    வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. போஸ்டரின் மூலம் படம் அடுத்த ஆண்டு ஜனவரி ரிலீசாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்.
    இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை நீக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

    ‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #Ayogya #Vishal #RashiKhanna

    கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna
    `டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

    இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
    அடங்கமறு ரிலீசாகும் அதே வாரத்தில் தனுஷின் மாரி 2, விஜய் சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna

    கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்க மறு’ படம் நவம்பரில் ரிலீசாக இருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna
    `டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.
    இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் கடைசி வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna

    மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சிபி, சாந்தினி, அனிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் விமர்சனம். #VanjagarUlagamReview #GuruSomasundaram
    கணவன், மனைவியான சாந்தினி - ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இடையே சரியான புரிதல் இல்லை. இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் நாயகன் சிபி சந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். 

    இந்த நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் எழுப்புகின்றனர். சாந்தினி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை கைது செய்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரின் உதவியுடன் சிபியை வெளியே வருகிறார்.



    இதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனம் அந்த கொலை குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது. போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

    கடைசியில் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சிபி சந்திரனின் கதாபாத்திரமே வித்தியாசமானது. போதையுடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தில் சிபி ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்க்கிறார். இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சாந்தினிக்கு இந்த படத்திலும் தீனிபோடும் கதாபாத்திரமே. அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாராக அனிஷா ஆம்ப்ரூஸ் கவர்கிறார்.

    மற்றபடி ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.



    மாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவும், இசையில் சிறப்பாக வந்திருந்தாலும், படத்துடன் நம்மால் பயணிக்க முடியாத சூழல் உருவாகிறது. முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணமும், சோர்வும் உருவாகிறது. படத்தின் நீளமும், காட்சியின் நீளமுமே அதற்கு காரணம் என்று கூறலாம். அதேபோல் காட்சிகளில் தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். 

    சாம்.சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `வஞ்சகர் உலகம்' ரொம்ப நீளமானது. #VanjagarUlagamReview #GuruSomasundaram

    மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசந்தரம், சாந்தினி, அனிஷா ஆம்ரோஸ் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் முன்னோட்டம். #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan
    லைப்ரந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரித்துள்ள படம் வஞ்சகர் உலகம்.

    புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராட்ரிகோ டெல் ரியோ, இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், படத்தொகுப்பு - ஆண்டனி எல்.ரூபன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், கலை இயக்குநர் - ஏ.ராஜேஷ், எழுத்து - மனோஜ் பீதா, விநாயக் வயாஸ், இயக்கம் - மனோஜ் பீதா. 



    இவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குநர் மனோஜ் பேசும் போது,

    முதல் படமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் த்ரில்லர் கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் கலந்த திரில்லர் படம். எனவே ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். மேற்கத்திய படமொன்றை பார்த்த அனுபவம் இருக்கும். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம்.சி.எஸ்க்கு பேசும்படியான படமாக இது இருக்கும் என்றார். 

    படம் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan

    ‘சண்டக்கோழி 2’ படத்தை தொடர்ந்து வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், விஷால் இன்று படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். #Ayogya #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சண்டக்கோழி 2’  சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி நடித்துள்ளனர்.

    விஷால் அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் இணைந்த நிலையில், இன்று படப்பிடிப்பில் இணைவதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
    சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்கிறார். #Ayogya #Vishal #RashiKhanna

    வைகரை பாலன் இயக்கத்தில் கிஷோர் - ஷெரின் பில்லக்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடிகார மனிதர்கள்' படத்தின் விமர்சனம். #KadikaraManithargalReview
    பிழைப்புக்காக ஊரில் இருந்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சென்னை வருகிறார் கிஷோர். ஊரில் வாழ வழியில்லாத இவருக்கு, சென்னையிலும் தங்க வீடு கிடைக்காமல் அல்லப்படுகிறார். கடைசியாக குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருப்பதாக கூறி, தனது கடைசி மகனை பெட்டிக்குள் வைத்து மறைத்து ஒரு வீட்டில் குடிபோகிறார்.

    பன் சப்ளை தொழில் செய்து வரும் கிஷோர், தனது மகனை வீட்டு உரிமையாளரான பாலா சிங்குக்கு தெரியாமல் பன் பெட்டியில் வைத்து, பள்ளிக்கு கூட்டிச் செல்கிறார். கிஷோர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கருணாகரன் பாட்டி ஒருவருடன் வசித்து வருகிறார். கருணாகரனுக்கும் வீட்டு உரிமையாளரின் மகளான நாயகி ஷெரின் பில்லக்களுக்கும் காதல் மலர்கிறது. 



    இந்த நிலையில், பாலா சிங் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை துவங்குகிறார். அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நாயகி ஷெரின் கருணாகரன் வீட்டில் தங்குகிறார். ஆனால் தனது மகள் ஓடிப்போனதாக கருதி ஷெரினை தேடி வருகிறார். இந்த நிலையில் கிஷோரின் கடைசி மகனும் காணாமல் போகிறார்.

    கடைசியில் கிஷோரின் மகன் கிடைத்தானா? கருணாகரன் - ஷெரின் இணைந்தார்களா? பாலா சிங்குக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

    கிஷோர் ஒரு நடுத்தர வீட்டு குடும்பஸ்தராக கடிகார மனிதனாக தினசரி வேலையை கவனித்து வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கருணாகரன் காமெடியில் சிரிக்க வைக்கிறார். ஷெரினுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி பாலாசிங், பிரதீப் ஜோஷ், ஷீலா கோபி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை முழுமையடைய வைத்திருக்கின்றனர். 



    சென்னையில் வீடு தேடுவதில் இருக்கும் சிக்கல், வீடு கிடைக்காமல் கஷ்டப்படும் குடும்பங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை கதைக்களமாக கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார் வைகரை பாலன். அடுத்தடுத்த காட்சிகள் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். 

    சாம்.சி.எஸ் பின்னணி இசை ஓரளவுக்கு வலுகூட்டியிருக்கிறது. உமா சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `கடிகார மனிதர்கள்' போராட்டம். #KadikaraManithargalReview

    சாம் சிஸ் இசையில் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கும் ஒரு பாடலை நடிகர் மாதவன் வெளியிட இருக்கிறார். #Madhavan
    ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே, அந்த வரிசையில் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர்.

    இவரது இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘வஞ்சகர் உலகம்’. இப்படம் வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.



    யுவனும் அதற்கு ஓகே சொல்ல, அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். இந்த பாடலை நடிகர் மாதவன் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் மூலம் பிரபலமான சாம் சி.எஸ். இசையில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார். #SamCS #Yuvan
    ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே, அந்த வரிசையில் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர்.

    இவரது இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘வஞ்சகர் உலகம்’. இப்படம் வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.



    யுவனும் அதற்கு ஓகே சொல்ல, அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika
    `டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக, அதர்வாவை வைத்து த்ரில்லர் படமொன்றை இயக்கியிருக்கிறார். `100' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 

    விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக இயக்குநர் சாம் ஆன்டன் தெரிவித்துள்ளார். விரைவில் ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை துவங்குவார் என்றும், அருமையான பாடல்களை கொடுத்துள்ள சாம்.சி.எஸ்.க்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 



    அதர்வா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `பூமராங்' அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. #Atharvaa #Hansika

    ஜே.கே. இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #VaralakshmiSarathkumar
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் மிஸ்டர். சந்திரமௌலி படம் வருகிற வெள்ளியன்று ரிலீசாக இருக்கிறது.

    வரலட்சுமி நடிப்பில் அடுத்ததாக சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என படங்கள் வரிசைக்கட்டி வருகின்றன. 



    இந்த நிலையில், வரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி வரலட்சுமி அடுத்ததாக ஜே.கே. என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. சாய் சமரத் மூவிஸ் சார்பில் ஜெயப்பிரகாசா, பவித்ரா கே.ஜெயராம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மேத்யூ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். #VaralakshmiSarathkumar

    மனோஜ் பீதா இயக்கத்தில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படம் வழக்கமான கேங்ஸ்டர் படமாக இருக்காது என்று படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனிஷா ஆம்ப்ரோஸ் தெரிவித்திருக்கிறார். #VanjagarUlagam
    எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்'. காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். 

    நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் அனிஷா ஆம்ப்ரோஸ் வஞ்சகர் உலகம் குறித்து பேசும் போது,

    "செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில்  நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது தான் என் கதாபாத்திரம் என சொல்லும் அனிஷா, வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.



    இந்திய பார்வையாளர்களுக்கு 'கேங்க்ஸ்டர்' கதைகளும் சலித்து போயிருக்கின்றனவா? என்று கேட்டதற்கு வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகுமுறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று".

    ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #VanjagarUlagam #AnishaAmbrose

    ×