search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Enfield"

    • சமீபத்தில் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகின.
    • ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவல் அந்நிறுவனத்தின் கடந்த ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் தெரியவந்தது. இந்த முறை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத்தின் வெளியீடு பற்றிய தகவல் அம்பலமாகி இருக்கிறது.

    முதல் காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது, முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்து இருக்கிறார். அதன்படி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கான திட்டத்தின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் சில ப்ரோடோடைப்களும் தயாராகி இருக்கின்றன. தற்போது பொறியாளர்கள் இந்த ப்ரோடோடைப்களை ஓட்டுகின்றனர். பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த பிளாட்பார்ம் சந்தையில் தனித்துவம் மிக்க இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த மாடலில் பெரிய பேட்டரி பேக் மற்றும் டாப் என்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று தெரியவந்தது. இந்த கான்செப்ட்-ஐ கொண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ந்து வரும் பிரிவில் ராயல் என்பீல்டு பயணம் குறித்த விவரங்களை வழங்கும் என்று தெரிகிறது.

    • ராயல் என்பீல்டு ஹன்டர் 350 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் உலகளவில் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹன்டர் 350 இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது.

    பிப்ரவரி 2023 மாதம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையான நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்கள் வெறும் ஐந்து மாதங்களில் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் ஹன்டர் 350 விற்பனை அதிகளவு வளர்ச்சி பெற்று இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

     

    இந்தியா மட்டுமின்றி ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடல் இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதன் விற்பனை பிரேசில் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹன்டர் 350 மாடல் டிவிஎஸ் ரோனின், ஜாவா 42 மற்றும் ஹோன்டா ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் ஜெ சீரிஸ் என்ஜினுடன் அறிமுகமாகிறது.
    • புதிய புல்லட் 350 மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய புல்லட் 350 மாடல் ஆகஸ்ட் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய புல்லட் 350 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    அதன்படி புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலில் ஜெ சீரிஸ் 349சிசி, சிங்கில் சிலின்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதே என்ஜின் தற்போதைய கிளாசிக் 350, மீடியோர் 350 மற்றும் ஹன்டர் 350 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய புல்லட் 350 மாடலின் ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி, சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

     

    புதிய மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியர்-டிராப் வடிவம் கொண்ட பியூவல் டேன்க் மற்றும் 2-பீஸ் சீட் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹார்டுவேரிலும் மாற்றங்கள் இன்றி டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஷாக்குகள் வழங்கப்படுகின்றன.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் மற்றும் ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய புல்லட் 350 மாடலில் ஸ்போக் வீல்கள், ரோட்-பயஸ்டு டயர்கள், ஸ்பீடுமீட்டர், ஒடோமீட்டர், சிறிய டிஜிட்டல் இன்செட் கொண்ட எளிமையான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் 650 சிசி கிளாசிக் மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.
    • புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய கிளாசிக் 650 மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகி உள்ளது. புகைப்படங்கள் அதிக தெளிவற்ற நிலையிலேயே காட்சியளிக்கின்றன. எனினும், புதிய கிளாசிக் 650 மாசலின் ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் டிசைன் அம்சங்கள் தெரியவந்துள்ளது.

    ஸ்பை படங்களில் உள்ள மாடலில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஃபோர்க் கவர்கள், கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்ற ஹெட்லேம்ப் கேசிங் உள்ளது. இத்துடன் வயர்-ஸ்போக் வீல்கள், நீண்ட மட்கார்டுகள், ஸ்ப்லிட் சீட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மாடலில் பீஷூட்டர் எக்சாஸ்ட்கள் உள்ளன. இது பைக்கின் ஒட்டுமொத்த டிசைனுடன் ஒற்றுப் போகும் வகையில் உள்ளது.

     

    Photo Courtesy: Bikewale

    Photo Courtesy: Bikewale

    இந்த மாடலில் சென்டர்-செட் ஃபூட்பெக், அப்ரைட் ஹேன்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கிளாசிக் 650 மாடல் சூப்பர் மீடியோர் 650 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்பதால், இந்த மாடலில் 648சிசி, ஆயில் கூல்டு, டுவின் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மாடல் 2025 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடலின் விலை இன்டர்செப்டார் 650 மற்றும் சூப்பர் மீடியோர் 650 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில், இதன் விலை ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்படலாம்.

    • இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350.
    • ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் இந்தியாவில் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றி இருக்கிறது. இதில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கிளாசிக் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 080 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விலை விவரங்கள்:

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரெடிட்ச் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1 லட்சத்து 95 ஆயிரத்து 191

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 2 லட்சத்து 02 ஆயிரத்து 094

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 852

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 டார்க் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 285

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350 க்ரோம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 755

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விலை தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பல்பு-டைப் பைலட் லேம்ப்கள், வளைவான ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ரக சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் உள்ள 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

    • இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்படும் மிடில்வெயிட் மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும்.
    • ஷெர்பா மாடல் இண்டர்செப்டார் 650 பைக்கின் ஆஃப் ரோடு வெர்ஷன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிள் விவரங்கள் காப்புரிமை விண்ணப்பத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் "இண்டர்செப்டார் பியர் 650" எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்படும் மிடில்வெயிட் மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும் என்று தெரிகிறது.

    பியர் எனும் பெயரைக் கொண்டு இது இண்டர்செப்டார் 650 மாடலின் ஆஃப் ரோடு வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷெர்பா மாடல் இண்டர்செப்டார் 650 பைக்கின் ஆஃப் ரோடு வெர்ஷன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், டிரேட்மார்க் விவரங்களில் ஷெர்மா மாடலில் இண்டர்செப்டார் பிராண்டிங் வழங்கப்படவில்லை.

     

    அந்த வகையில் புதிய பியர் வேரியண்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக இருக்கும் என்றும் இதில் ஸ்பெஷல் பெயிண்ட் மற்றும் கூடுதல் அக்சஸரீக்கள் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.

    அந்த வகையில், இந்த மாடல் 648சிசி பேரலல் டுவின், ஏர்/ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய வேரியண்ட் பண்டிகை காலக்கட்டம் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடவில் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்கும் என தகவல்.
    • இதுதவிர ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 450 மோட்டார்சைக்கிளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஹிமாலயன் 450 மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    450சிசி பிரிவில் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 450சிசி மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் சூப்பர் மீடியோர் 650 மாடலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர், புதிய தலைமுறை புல்லட் 350 மற்றும் ஹிமாலயன் 450 போன்ற மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    இந்த வரிசையில் 450சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகபட்சம் ஐந்து புதிய 450 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு 450சிசி மோட்டார்சைக்கிளில் முற்றிலும் புதிய 450சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 40 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    • ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
    • பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட 350 சிசி சீரிஸ் மாடல்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட கிளாசிக் 350, மீடியோர் 350 மற்றும் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.

    இவைதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மேலும் சில மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இவை புல்லட் 350 மற்றும் கிளாசிக் 350 பாபர் பெயர்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

     

    ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் பாபர் 350 மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் கிளாசிக் 350-ஐ தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், இதில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

    இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பாபர் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய கிளாசிக் 350 பாபர் மாடலின் டிசைன் மற்றும் பாடி பேனல்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய மாடல் கிளாசிக் 350 போன்ற ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இவைதவிர புதிய கிளாசிக் 350 பாபர் மாடலில் கருப்பு நிறத்தில் சற்றே பிரமாண்ட எக்சாஸ்ட், உயரமான ஹேண்டில்பார், பிளாக் நிற ORVMகள், வயர் ஸ்போக் ரிம்கள், டியல் நிற வால் கொண்ட டயர்கள், ரியல் டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளன. சூப்பர் மீடியோர் மாடலில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட் இந்த மாடலிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Photo Courtesy : rushlane

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டின் செய்யாறு பகுதியில் புதிய உற்பத்தி ஆலை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் எலெக்ட்ரிக் மாடல்களும் அடங்கும். பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் களமிறக்கி வரும் ராயல் என்பீல்டு, எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன், எலெக்ட்ரிக் ஹிமாலயன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இது தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பொருத்தவரை முதலில் அதிக விலை கொண்ட மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

     

    பின் இதைத் தொடர்ந்து பிரத்யேக மோட்டார்சைக்கிள், இறுதியில் குறைந்த விலை பைக் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இவை வரும் ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகமாகும். தற்போது இருக்கும் ராயல் என்பீல்டு மாடல்களின் அடிப்படையில், இந்த திட்டம் நிறுவன மாடல்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு உருவாக்கி வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் L1A எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் மற்றொரு பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த பிளாட்ஃபார்ம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை.

    கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான ஸ்டார்க்-இல் ராயல் என்பீல்டு நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இந்த திட்டம் அமலுக்கு வர அதிக காலம் ஆகும் என்றே தெரிகிறது.

    Photo Courtesy: Autocar 

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய புதிய ஆலையை கட்டமைக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டில் புதிதாக உற்பத்தி மையம் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வாகன உற்பத்தி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரால் என்பீல்டு நிறுவனம் சென்னையை அடுத்த செய்யாறு பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

    அடுத்த 12 முதல் 24 மாதங்களில் ரூ. 1000 முதல் ரூ. 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தி திறனுக்கு ஏற்ப இந்த தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிகிறது. இந்த ஆலையில் ஐசி என்ஜின் உற்பத்தி பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

     

    வாகனங்கள் அறிமுகத்தை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சமீபத்தில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மற்றும் இண்டர்செப்டார் / காண்டினென்டல் ஜிடி 650 மாடல்களின் அலாய் வீல் வெர்ஷனை மாடலை அறிமுகம் செய்தது.

    இந்த வரிசையில், ஷாட்கன் 650 மற்றும் ஹிமாலயன் 450 மாடல்கள் விரைவில் இணையும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் யூனிட் வல்லம் வடகால் ஆலையில் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. செய்யாறில் உருவாகும் ஆலையை பயன்படுத்தி பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு படிப்படியாக மாற ராயல் என்பீல்டு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த நிதியாண்டில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • உள்நாடு மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதியும் முதல் முறையாக 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2022-2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 895 யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது. முன்னதாக 2018-19 வாக்கில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 492 யூனிட்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு தனது முந்தைய விற்பனையை முறியடித்து இருக்கிறது.

    2022 ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6 லட்சத்து 02 ஆயிரத்து 268 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு விற்பனையில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சிறந்த விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

     

    2023 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் 7 லட்சத்து 34 ஆயிரத்து 840 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 41 சதவீதம் அதிகம் ஆகும். ஏற்றுமதியை பொருத்தவரை 2022 நிதியாண்டில் 81 ஆயிரத்து 032 யூனிட்களில் இருந்து, கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 55 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

    "இந்த ஆண்டு ராயல் என்பீல்டு விற்பனை வளர்ச்சியில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. இந்த முறை விற்பனையில் புதிய எல்லையை கடந்து இருக்கிறோம். முதல் முறையாக எங்களின் ஏற்றுமதி ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஹண்டர் 350 மற்றும் சூப்பர் மீடியோர் 650 போன்ற மாடல்கள் எங்களின் எதிர்பார்ப்புகளை கடந்து, புதிய வாடிக்கையாளர்களை பெற்று தந்துள்ளது," என்று ராயல் என்பீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி பி. கோவிந்தராஜன் தெரிவித்தார்.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் நீண்ட காலமாக ஹண்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது.
    • இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.

    ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு மீடியோர் 350 பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    எனினும், இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய ஹண்டர் மாடல் பற்றி ஏராளமான விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடல் என்றும் இதன் ஃபியூவல் டேன்க் டியர்-டிராப் வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் நீண்ட ஒற்றை இருக்கை, வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், டர்ன் இண்டிகேட்டர்கள், ரியர் வியூ மிரர்கள் மற்றும் சற்றே உயர்ந்த பின்புறம் கொண்டிருக்கிறது.


    மேலும் இந்த மாடலில் அகலமான ஹேண்டில் பார்கள், மிட்-செட் ஃபூட் பெக், மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட ஸ்போர்ட் தர அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருப்பது, ஸ்கிராம்ப்ளர் போன்ற ஸ்டைலிங் உள்ளிட்ட அம்சங்களை வைத்து பார்க்கும் போது இது மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட குறைந்த எடையில் உருவாகி இருக்கும் என தெரிகிறது.

    புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளிலும் 349சிசி என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: Bikewale

    ×