search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reliance Jio"

    • 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது.
    • ஜியோ நிறுவனம் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தார் பயணம் செய்ய திட்டமிடுவோருக்கு இந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா பயணம் செய்ய இருக்கும் கால்பந்து ரசிகர்களுக்காக இந்த ரோமிங் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு ஏற்ப சிறந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வாங்கிடலாம்.

    புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளின் விலை ரூ. 1,122 என துவங்குகிறது. ஜியோ ரூ. 1122 ரோமிங் சலுகை ஐந்து நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும், டேட்டாவுக்கான கட்டணம் மாறிவிடும்.

    ஜியோ ரூ. 1599 சலுகை 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 150 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், இன்கமிங் அழைப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறிவிடும்.

    ஜியோ ரூ. 3 ஆயிரத்து 999 ரோமிங் சலுகையில், 250 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான வாய்ஸ் கால், 250 நிமிடங்கள் இன்கமிங் அழைப்புகள், 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 5 ஆயிரத்து 122 சலுகையில் 5 ஜிபி டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    ரூ. 6 ஆயிரத்து 799 ஜியோ ரோமிங் சலுகையில் 500 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், 500 நிமிடங்களுக்கு இன்கமிங் அழைப்புகள், 5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறி விடும். 

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அவ்வப்போது சலுகைகளை மாற்றி வருகிறது.
    • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளிலும் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை முழுமையாக நீக்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை நீக்க துவங்கியது. இதில் முதற்கட்டமாக ரூ. 499 மற்றும் ரூ. 601 சலுகைகள் நீக்கப்பட்டன.

    இதை அடுத்து இரு சலுகைகளில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த இரு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இரு சலுகைகளும் ரிலையன்ஸ் ஜியோ வலைதளத்தில் காணப்படவில்லை. இவை மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் தளங்களிலும் பட்டியலிடப்படவிவல்லை.

    அந்த வகையில், இரு சலுகைகளும் சத்தமின்றி நீக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 399, ரூ. 419, ரூ. 499, ரூ. 583, ரூ. 601, ரூ. 783, ரூ. 799, ரூ. 1099 மற்றும் ரூ. 1199 விலை சலுகைகளை நீக்கியது. இவை அனைத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவுக்கு போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) தொடர்ந்து இந்த சேவைகள் அடங்கிய சலுகைகளை வழங்கும் நிலையில், ஜியோ ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தற்போதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சேவைகள் வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகின்றன.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான வியாகாம் 18 கைப்பற்றி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப முடியாது என்பதால், ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.

    • இந்திய டெலிகாம் சந்தையில் புதிய தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி வெளியிடப்பட்டு வருகின்றன.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

    இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக வி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி வி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என எட்டு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் அதிவேக 5ஜி நெட்வொர்கில் இணைந்து கொள்ள முடியும். எனினும், இதற்கு மைஜியோ செயலியில் இன்வைட் பெற்று இருப்பது அவசியம் ஆகும்.

    டிசம்பர் 2023-க்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது. ஜியோ பயனர்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். புதிய தலைமுறை 5ஜி சேவைகளை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிறப்பு அறிமுக சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு 5ஜி சேவையை 500Mbps முதல் 1Gbps வேகத்தில் பயன்படுத்த முடியும்.

    மைஜியோ செயலியில் 5ஜி-யை பயன்படுத்துவதற்கான நோட்டிபிகேஷன் வைத்திருப்பவர்கள், தங்களின் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    - முதலில் ஸ்மார்ட்போனின் "செட்டிங்ஸ்" செல்ல வேண்டும்

    - அடுத்து "மொபைல் நெட்வொர்க்" அல்லது இதே போன்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இனி ஜியோ சிம் ஆப்ஷனில் "பிரெஃபர்டு நெட்வொர்க் டைப்" ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இதில் 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதில் 5ஜி-யை தேர்வு செய்ய வேண்டும்.

    ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்-இல் 5ஜி நெட்வொர்க்-ஐ தேர்வு செய்ததும், ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும். இனி வழக்கம் போல் மொபைல் டேட்டாவில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற புது சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய 4ஜி சிம் கொண்டு புதிய நெட்வொர்க்கில் இணைய முடியும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக நாட்டின் நான்கு நகரங்களில் ஜியோ 5ஜி பீட்டா டிரையல் துவங்கி நடைபெற்று வந்தது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டிரையல் துவங்கப்பட்டது. தற்போது இன்வைட் செய்யப்பட்ட ஜியோ பயனர்கள் சென்னையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

    இத்துடன் 5ஜி சார்ந்து இயங்கும் வைபை சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகள் நத்வாரா மற்றும் ராஜஸ்தானில் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவைகள் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தளங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக மையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சீராக கிடைக்கும்.

    ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் பயனர்கள் இந்த சேவையை தற்போது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 5ஜி வைபை சேவைகள் ஜியோ சேவையை பயன்படுத்தாத பயனர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் அதிவேக இணைய சேவையை பயன்படுத்திய பிறகு ஜியோ சேவையில் இணைந்து கொள்ளலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.

    "ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று 5ஜி சேவை தேர்வு செய்யப்பட்ட சிலருக்கோ அல்லது பெரும் நகரங்களில் வசிப்போருக்கு மட்டும் பிரத்யேகமானதாக இருக்கக் கூடாது. இந்த சேவை ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வீடு மற்றும் வியாபாரத்திலும் இந்தியா முழுக்க கிடைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஜியோட்ரூ5ஜி வழங்குவதற்கான பயணம் தான் இது," என ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவன தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்தார்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டின் வருவாய் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
    • இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர லாபம் 28 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ. 4 ஆயிரத்து 518 கோடி லாபம் ஈட்டியது. புதிய வாடிக்கையாளர்கள் இணைந்தது மற்றும் வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் அதிகரித்து உள்ளிட்டவை லாபம் அதிகரிக்க காரணங்களாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஜியோ லாபம் ரூ. 3 ஆயிரத்து 528 கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மூலம் கிடைக்கும் லாபம் 20.2 சதவீதம் அதிகரித்து ரூ. 22 ஆயிரத்து 521 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 18 ஆயிரத்து 735 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ மும்முரம் காட்டி வரும் நிலையில், இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய தலைமுறை தொழில்நுட்பம் அதிவேக இணைய வசதி, சீரான இணைப்பு கொண்டிருக்கும். உலகளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. முதலிடத்தில் சீனா இருக்கிறது.

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 4 ஆயிரத்து 729 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டு வாக்கில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் ரூ. 3 ஆயிரத்து 728 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் வருவாய் 22.7 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 24 ஆயிரத்து 275 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 19 ஆயிரத்து 777 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • முன்னதாக இந்த லேப்டாப் விற்பனை அரசு ஊழியர்களுக்காக மட்டும் GeM வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ, தனது முதல் லேப்டாப் மாடல் விற்பனையை துவங்கி இருக்கிறது. 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஜியோபுக் லேப்டாப்பை தற்போது அனைவரும் வாங்கிட முடியும். இந்தியாவில் ஜியோபோன் பெற்ற வெற்றி ஜியோபுக் லேப்டாப்பிலும் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் 64 பிட், 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிபியு உடன் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் கூலிங் ஃபேன் எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் அதிகபட்ச மெமரி 128 ஜிபி ஆகும்.

    இந்த லேப்டாப் 32 ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது. இத்துடன் ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. புதிய ஜியோபுக் மாடலை பல்வேறு இந்திய மொழிகளில் இயக்க முடியும். இத்துடன் ஏராளமான ஜியோ செயலிகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 சேவைகள் இந்த லேப்டாப்பில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஜியோபுக் லேப்டாப் ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைதளத்தில் ரூ. 15 ஆயிரத்து 799 எனும் விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த தளத்தில் எத்தனை யூனிட்களுக்கான ஸ்டாக் இருப்பில் உள்ளது என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. மேலும் இந்த லேப்டாப் விற்பனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபுக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • புதிய ஜியோபுக் லேப்டாப் எல்இடி டிஸ்ப்ளே மற்றும் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப் போவதாக கடந்த பல மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இவற்றை உண்மையாக்கும் வகையில், இந்தியாவில் ஜியோபுக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜியோபுக் மாடல் குறைந்த விலையில் கிடைக்கிறது. அரசு ஆன்லைன் வலைதளமான GeM-இல் ஜியோபுக் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில் GeM வலைதள விவரங்களின் படி புதிய ஜியோபுக் ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே பின்புறம் உள்ள மூடியில் ஜியோ லோகோ இடம்பெற்று இருக்கிறது. சற்றே தடிமனான பெசல்களை கொண்டிருக்கும் ஜியோபுக்-இல் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெமரியை பொருத்தவரை ஜியோபுக் மாடலில் 2 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் HD வெப் கேமரா சப்போர்ட் உள்ளது. இந்த லேப்டாப்பில் 55.1 வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பயன்படுத்த வழி செய்கிறது.

    இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத் 5 போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன. புதிய ஜியோபுக் மாடலில் ஒற்றை யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், HDMI போர்ட், காம்போ போர்ட், SD கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மல்டி-ஜெஸ்ட்யுர் வசதி கொண்ட டச்பேட், டூயல் ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜியோபுக் மாடல் ஜியோ ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 19 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த லேப்டாப் அரசு ஊழியர்களுக்காக GeM வலைதளத்தில் கிடைக்கிறது. அனைவருக்கான விற்பனை தீபாவளி வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக கேமிங் பிளாட்பார்ம் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த தளம் கேமிங் ப்ரியர்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோகேம்ஸ் சார்பில் ஜியோகேம்ஸ்வாட்ச் ஸ்டிரீமிங் பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டிரீமிங் வலைதளம் கேமிங் சார்ந்த அனைத்து தளங்களையும் பார்க்க வழி செய்கிறது. இதில் கேம்பிளே, வீடியோ ஆன் டிமாண்ட் உள்ளிட்டவைகளை நேரலையில் பார்க்க முடியும்.


    2019 வாக்கில் துவங்கப்பட்ட ஜியோகேம்ஸ் தளம் கேம் வெளியிடுவோர், ஆன்லைன் கேம் டெவலப்பர்கள், போட்டிகள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் சேவை வழங்கும் ஒற்றை மென்பொருள் சேவை ஆகும். ஜியோகேம்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது கேம்களை நேரலை செய்வதற்காகவே ஜியோகேம்ஸ்வாட்ச் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தளம் கொண்டு கேமர்கள் அவரவர் பயன்படுத்தும் எந்த விதமான சாதனத்தை கொண்டும் மிக குறைந்த லேடன்சியில் அதிக தரமுள்ள தரவுகளை பல லட்சம் பேருக்கு கொண்டு சேர்க்க முடியும். இதோடு மட்டுமின்றி வீடியோ பார்ப்பவர்களை தொடர்பில் இருக்க செய்ய கருத்து கணிப்பு மற்றும் எமோட்ஸ் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது

    • இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற்று முடிந்து விட்டது.
    • இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது.

    5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ. 88 ஆயிரத்து 078 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் மிகப் பெரிய 5ஜி நெட்வொர்க் கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி உள்ளது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 085 கோடி செலவிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் 2 ஆயிரத்து 668 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 18 ஆயிரத்து 784 கோடிக்கு வாங்கி இருக்கிறது.


    டெலிகாம் நிறுவனங்கள் மட்டும் இன்றி அதானி குழுமம் சார்பில் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் 400 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 212 கோடி ஆகும். இந்தியாவின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி மதிப்பிலான தொகை ஈட்டப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 71 சதவீத 5ஜி ஏர்வேவ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஏலத்தில் மொத்தம் 72 ஆயிரத்து 098 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 51 ஆயிரத்து 236 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஏலத்தின் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 22 வட்டாரங்களிலும் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் உரிமத்தை பெற்று இருக்கிறது. இதன் மூலம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.
    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியை முகேஷ் அம்பானி ராஜினாமா செய்தார்.

    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை சேர்த்தது என டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.

    இதற்கிடையே, ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    ஆனால், அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் சொந்தமான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார்.

    இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனராகவும் ஆகாஷ் அம்பானி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ போன் பெரும்பாலான இந்தியர்களை 2ஜி சேவையில் இருந்து 4ஜிக்கு அழைத்துச் செல்லும் ஒரு புரட்சிகரமான சாதனமாக மாறியது. இந்த போன் புரட்சிக்கு பின்புலம் ஆக ஆகாஷ் இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது.
    • அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், வெளியிட்டுள்ள அறிக்கையின் படி. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

    அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய்யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. 35.5 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்திலும், 31.61 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 22.68 சதவீதத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.


    ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

    புதிதாக 16.82 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 40.5 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணியில் உள்ளது. புதிதாக 8.1 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ஏர்டெல் நிறுவனம் 36.11 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுபுறம் 15.68 லட்சம் பயனர்களை இழந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்துள்ளது.

    பிராட்பேண்ட் சேவைகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 3.31 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 71 ஆயிரத்து 297 பிராட்பேண்ட் பயனர்களை பெற்றுள்ளது. பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 25.85 சதவீதமாகவும், ஏர்டெல் 23.54 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லைன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.51 கோடி அதிகரித்துள்ளது. 

    ×