search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery"

    • பொன்னமராவதி அம்மன்குறிச்சியில் ஜல்லிகட்டு காளை கிணற்றில் தவறி விழுந்தது
    • தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டனர்

    புதுக்கோட்டை,

    பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியை சேர்ந்தவர் சின்னு. இவரது 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையா என்பவரின் ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி காளையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    • தவுட்டுபாளையம் ஆற்றில் உயிருக்கு போராடிய மாணவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
    • 8 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உடற் கல்வியியல் கல்லூரியில் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அஜித் குமார்( 21), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் கணேஷ்(18), அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கமலேஷ் (18), சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தீபன்ராஜ் (20), அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் பெரியமலை (18 ), மலையன் மகன் அரவிந்த் (18 ),ராமர் மகன் அண்ணாமலை( 20 ),தென்காசி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் விமல்ராஜ் (18) ஆகிய 8 பேரும் பயின்று வருகின்றனர். இவர்கள் புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் 8 பேரும் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக மதியம் சுமார் 1.30 மணி அள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி ஆற்று பாலம் அருகே காவிரி ஆற்று தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விமல்ராஜ் என்பவர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது அவரை தண்ணீர்இழுத்துச் சென்றது. அவரைக் காப்பாற்றுவதற்காக கமலேஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது மூன்று பேரும் கரைக்கு வர முடியாமல் ஆழமான தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதை பார்த்த அந்தப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு விரைந்து சென்று தண்ணீரில் சிக்கிக் கொண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமல்ராஜ், கமலேஷ்,அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.
    • 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    சென்னை அம்பத்தூர் கலைவாணர் நகரை சேர்ந்த மூதாட்டி மல்லிகா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து மல்லிகாவின் மகன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பினர். இந்த தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் புனே சென்று மல்லிகா மீட்டு நாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரை நாகப்பட்டினத்திற்கு அழைத்து மல்லிகாவை ஒப்படைத்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    இவ்வாறு திறம்பட செயல்பட்ட நாகை மாவட்ட போலீசாரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பாராட்டியதுடன் காணாமல் போன மூதாட்டியையும் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

    • கழிவு நீர் தொட்டியில் விழுந்த கன்று மீட்கப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் உதவியுடன் மீட்டனர்

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ரவி என்பவருக்கு சொந்தமான பசுங்கன்று ஒன்று அருகில் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்தது.ரவி கொடுத்த தகவலின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய காவலர்கள் விரைந்து சென்று பசுங்கன்றை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் செப்டிக் தேங்காய் பாதுகாப்பாகமூடி வைக்க அறிவுறுத்தினர்.

    • அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின்படி ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
    • 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது.

    களக்காடு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் சில இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின் படி ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

    கோவில் நிலம்மீட்பு

    அந்த வகையில் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை யினருக்கு புகார்கள் வந்தது.

    இதனைதொடர்ந்து நெல்லை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரி யதர்ஷினி வழிகாட்டுதலின் பேரில் உதவி ஆணையர் கவிதா தலைமையில் கோவில்கள் தனிப்பிரிவு தாசில்தார் இந்திரா காந்தி முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் முருகன் சரக ஆய்வாளர் லதா மற்றும் கோவல் பணியாளர்கள் சிங்கிகுளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை பார்வையிட்டு, அதனை அளவையர்கள் மூலம் அளவீடு செய்து கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

    அதிகரிக்க நடவடிக்கை

    அதன் பின்னர் 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. மீதமுள்ள 28 ஏக்கர் நிலமானது கோவிலின் நேரடி சுவாதீனத்திற்கு எடுக்கப்பட்டு மீண்டும் மறு பொது ஏலத்திற்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    இதுபோல ஏர்வாடி திருவழுதீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அதன் தொகுப்பு கோவில்கள் அனைத்திற்கும் துறை நில அளவையர்கள் மூலம் 150 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டு அதில் சுமார் 65 ஏக்கர் வரை பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மேலும் தொடர்ந்து கோவில் நிலங்கள் ஏலம் விடப்பட்டு கோவில் நிலங்களின் மூலம் கோவிலுக்கு வரும் வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    • காதல் திருமணம் செய்த மனைவியை கடத்தி மாந்திரீக பூஜை செய்த சைகோ கணவர்
    • சென்னையில் அடைத்து வைக்கப்பட்டவரை போலீசார் அதிரடியாக மீட்டனர்

    திருச்சி,

    புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்தபின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது த ாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்து ள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடாந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்ததார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பாப்பாங்குளம் கிராமத்தில்சேற்றுக் குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
    • தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் பசுமை நகரில் வசிக்கும் கண்ணன் ரேவதி என்பவர் அவருடைய பசு மாடு அருகில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட தண்ணீர் உள்ள பில்லர் குழியில் தவறி விழுந்தது. உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமாவளவன் செந்தில்குமார் மணிகண்டன் ராஜா பார்த்திபன் ரவிச்சந்திரன் மணிவண்ணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து பில்லர் குழியில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அந்த பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் பணித்துறை யினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.

    பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் கிராமத்தில் தாங்கல் நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இது குறித்து வருவாய் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, நில அளவையர் சுமன், ஊராட்சித் தலைவர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர்.

    • 3 நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருந்தது.
    • ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பை கொண்டு விட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் இந்துமதி.

    இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நல்லபாம்பு வேலி ஓரம் கிடந்தது.

    பாம்பு சென்று விடும் என இருந்த இந்துமதி குடும்பத்தினர் மூன்று நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அருகே சென்று பார்த்தனர்.

    அப்போது நல்ல பாம்பின் தலையில் சிறிய பெயிண்ட்டப்பா மாட்டிக்கொண்டதும்,

    இதனால் இந்தப் பாம்பு அந்த இடத்தினை விட்டு செல்ல முடியாமல் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் புளிச்சக்காடு தினேஷ் என்பவருக்கு இந்துமதி குடும்பத்தினர் தகவல் அளித்தனர்.

    இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற தினேஷ் பெயிண்ட்டப்பாவில் தலை சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பினை லாவகமாக பிடித்து, சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பு தலையில் இருந்த டப்பாவினை லாவகமாக காயம் ஏற்படாதவாறு அறுத்து அகற்றினார்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பினை கொண்டு விட்டார்.

    இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த 4-ந் தேதி மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் கடத்தப்பட்ட வடமாநில வாலிபரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    சேலம்:

    சேலம் பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாதாரம் (வயது 52) ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் கடந்த 3  ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). நேற்று முன்தினம் காலை நேரம் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

     அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6:45 அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

     இது குறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஜெயராமை கடத்தி சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாபேட்டை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது அதன்படி பணத்தைச் செலுத்திய பிறகு ஜாமீனில் வெளிவந்த வந்தனர்.

    இதன் பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்த பிரான்ஸ் போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு போலீசார் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

    ஜாமினில் வெளி வந்த இவர் கடந்த 20 நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் கையெழுத்துப் போட்டு வந்தார். ஆனால் நேற்று இவர் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

    இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கடத்தல் நடத்தி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    மேலும்  போலீசாரிடம் பிடிபட்ட  லாரி உரிமையாளரான சுரேஷ் அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கிடையில் மர்மநபர்கள் ஜெயராம் பெங்களூருக்கு கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. போலீசார் நெருக்கடி காரணமாக ஜெயராமனை ஒப்படைத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது. 

    ஆனாலும் ஜெயராம் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. போலீசார்  தொடர்ந்து பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    ஆழ்வார்குறிச்சியில் பகுதியில் மரநாய் மற்றும் நல்லபாம்பு ஆகியவற்றை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
    கடையம்:

    ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி பகுதியில் மரநாய் ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின்படி, அப்பதிக்கு வனத்துறையினர் சென்று மர நாயைமீட்டனர். மேலும் பங்களா குடியிருப்பு ராமர் கோவிலை சேர்ந்த முருகன் என்பவருடைய வீட்டில் நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின்படி, வனத்துறையினர் உடனடியாக சென்று நல்ல பாம்பை பிடித்தனர்.

     மேலும் ஆழ்வார்குறிச்சி செட்டிகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முப்பிடாதி என்பவருடைய வீட்டில் உடும்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடும்பை பத்திரமாக மீட்டனர் .

    மீட்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.
    ×