search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
    X

    குழியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

    • பாப்பாங்குளம் கிராமத்தில்சேற்றுக் குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
    • தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் பசுமை நகரில் வசிக்கும் கண்ணன் ரேவதி என்பவர் அவருடைய பசு மாடு அருகில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட தண்ணீர் உள்ள பில்லர் குழியில் தவறி விழுந்தது. உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமாவளவன் செந்தில்குமார் மணிகண்டன் ராஜா பார்த்திபன் ரவிச்சந்திரன் மணிவண்ணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து பில்லர் குழியில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அந்த பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் பணித்துறை யினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×