search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration rice"

    • பெண் கைது
    • வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் இவரது மனைவி சென்னம்மாள் (வயது 36).

    இவர் வீட்டில் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்தி ற்கு கடத்தி வருவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா சப்- இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சென்னம்மாள் வீட்டிற்கு சென்று சோதனை செய்து பார்த்த போது 50 கிலோ எடை கொண்ட 154 மூட்டைகள் என மொத்தம் 7,550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னம்மாளை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பின் பிரிட்ஜ் மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் கந்தசுப்பிரமணியன்:-

    பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் சாலையில் சவலாப்பேரி ஊருக்கு மேற்கு பகுதியில் ஹரிஹரன் என்பவர் தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வெள்ளானகோட்டை கீழத்தெருவை சேர்ந்த உச்சிமாகாளி(வயது 40) என்பவரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரிசி மூட்டைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஏற்பாட்டில் உச்சிமாகாளி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து 3 டன் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா மாநிலத்துக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டி அய்யன் ஆகியோர் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வானத்தை சோதனை செய்தபோது அதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பி அன்ட் டி காலனியை சேர்ந்த காந்திசங்கரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த அஜித்குமாருடன் சேர்ந்து பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அஜித்குமாரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • கன்டெய்னர் பறிமுதல்
    • நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் நாட்டறம்பள்ளி போலீசார் பணி ஆண்ட பட்டுபள்ளி வாலூர் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கன்டெய்னர் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் போலீசாரை கண்டதும் கன்டெய்னரில் இருந்த டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை சோதனை செய்தனர்.

    அதில் மூட்டை மூட்டையாக 10 டன் ரேசன் அரிசி இருந்தது.

    அதனை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் ரேசன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
    • பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சோதனை செய்தனர்.
    • 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுப்படி திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும்கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

    அந்த வழியாக வந்த மொபட்டை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 450 கிலோ பதுக்கி வைத்துஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் செல்லம் நகரைசேர்ந்த அன்புமணி (வயது 23) என்பதும் இவர் நொச்சிபாளையம், வீரபாண்டி பகுதிகளில்உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை பதுக்கி வைத்துவட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்புமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர்.

    • துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
    • சரவணன் என்பவர் ரேஷன் அட்டைதாரர்களிடம் ரேஷன் அரிசி, குருணை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பஸ் ஸ்டாப் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி, 450 கிலோ குருணை அரிசி என மொத்தம் 950 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாப்பாநாட்டை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவர் ரேஷன் அட்டைதாரர்களிடம் ரேஷன் அரிசி, குருணை விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலா 450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    • அந்த வழியாக மூட்டைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.
    • அவரிடமிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான காவல் துறையினா் திருநீலகண்டபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மூட்டைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இது தொடா்பாக திருநீலகண்டபுரத்தை சோ்ந்த காா்த்திக் (வயது 32) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். 

    • உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் கேரளாவிற்கு கடத்த முயல்வதாக 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    • தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கடத்த முயல்வதாக கூறி 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

    தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் உவரியில் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    ரேஷன் அரிசி பறிமுதல்

    இதையடுத்து லாரியில் இருந்த 37 மூட்டை ரேஷன் அரிசியை லாரியுடன் போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த களியக்காவிளை பாடசாலையை சேர்ந்த சரத் (வயது 29), அருண்(36), அரிபிரசாத் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    • விருதுநகரில் 750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது சம்பந்தமாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது, 750 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய கோவில்பட்டியை சேர்ந்த கொம்பையா, மந்திரமூர்த்தி, டிரைவர் செல்லத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மதுரை மாநகரில் 21 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியதாக 12 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடோனில், டன் கணக்கில் ரேஷன் அரிசிகள் பதுக்கப்பட்டு இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்திரன் (அவனியாபுரம்) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது தனியார் பள்ளிக்கூடம் அருகில் உள்ள ஒரு குடோனில் 20-க்கும் மேற்பட்டோர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும், தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் விரட்டிச்சென்று 12 பேரை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கீரைத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, கொரில்லா முத்து (வயது 45), வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, சரலைப்பள்ளி ராம்கி (33), வலையங்குளம், பெருமாள் நகர் அருணாசலம் (28), வில்லாபுரம், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, மாயழகு மகன் மணிகண்டன் (24), திருப்பரங்குன்றம், திருமலையூர் முருகன் மகன் அர்ஜுன் (24), கீரைத்துறை, பசும்பொன் நகர், ரமேஷ் மகன் விக்னேஷ் 22), கீரைத்துறை, பிள்ளையார் கோவில் சந்து முருகன் மகன் அருண்பாண்டி (23), கீரைத்துறை மலைச்சாமி மகன் சேதுபதி (22), செல்லூர், மணவாளநகர், பாண்டித்துரை மகன் நவீன்குமார் (21), வலையங்குளம், பெருமாள் நகர், முத்துலிங்கம் மகன் சக்திவேல் (20), மேல அனுப்பானடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, தமிழரசன் (25) என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளில், டன் கணக்கில் தூத்துக்குடிக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அங்கு உள்ள மில்லில் இவை பாலிஷ் செய்யப்படுகின்றன. அதன்பிறகு ரேஷன் அரிசி மூட்டைகள், பெங்களூரு, திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு இருந்து மேற்கண்ட அரிசி மூட்டைகள், “கர்நாடகா பொன்னி’ என்ற பெயரில் மீண்டும் தமிழகத்திற்கே விற்பனை கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    முன்னதாக தனிப்படை போலீசார் குறிப்பிட்ட குடோனில் அதிரடியாக சோதனை செய்து பார்த்தனர். அப்போது அங்கு 47 கிலோ எடை உள்ள 450 அரிசி மூட்டைகளில் மொத்தம் 21 ஆயிரத்து 150 கிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை மதுரை மண்டல ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மதுரை மாநகரில் 21 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியதாக 12 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    விருதுநகரில் ரைஸ்மில்லில் 2800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிைமயாளர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    அண்மைகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. 


    பொதுமக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கும் கடத்தல்காரர்கள் அதனை அரிசி ஆலைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. 

    இதனை தடுக்க மாவட்ட  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்ெகாண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ரைஸ்மில்லில் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீசார் அந்த ஆலையில் சோதனை நடத்தினர்.


    அப்போது அங்கு 56 மூடைகளில் 2800 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்துள்ளனர். ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஆலை உரிமையாளர் முனியசாமியை கைது செய்தனர்.
    கடத்துவதற்கு வைத்திருந்த 900 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் ஆர்.ஐ. பிரவீனுக்கு தகவல் கிடைத்தது. 

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு ரேசன் அரிசி மூட்டை ஒன்றுக்கு 50 கிலோ வீதம் 18 மூட்டைகள்  தயார் நிலையில் கட்டி கடத்துவதற்காக  வைக்கப்பட்டு இருந்தன. 

    அவைகளை பறிமுதல் செய்து திருச்செங்கோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார்  செய்யப்பட்டது.

    புகரின் பேரில், ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் யார்? என்பதை குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    ×