search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூடைகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூடைகள்.

    ரைஸ்மில்லில் 2,800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    விருதுநகரில் ரைஸ்மில்லில் 2800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிைமயாளர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    அண்மைகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. 


    பொதுமக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கும் கடத்தல்காரர்கள் அதனை அரிசி ஆலைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. 

    இதனை தடுக்க மாவட்ட  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்ெகாண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ரைஸ்மில்லில் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீசார் அந்த ஆலையில் சோதனை நடத்தினர்.


    அப்போது அங்கு 56 மூடைகளில் 2800 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்துள்ளனர். ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஆலை உரிமையாளர் முனியசாமியை கைது செய்தனர்.
    Next Story
    ×