search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranveer Singh"

    • மும்பை திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங்.
    • இவர் தற்போது ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கியுள்ளார்.

    இந்தி திரையுலகில் 2010-ம் ஆண்டு அறிமுகமான ரன்வீர் சிங், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இதன்மூலம் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். தற்போது நடிகர் ரன்வீர் சிங் மும்பையில் ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார்.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    இந்த குடியிருப்பு மும்பை பாந்திரா பகுதியில் பேண்ட்ஸ்டான்டில் உள்ளது. அங்கு கடலை நோக்கி அமைந்திருக்கும் சாகரஷேம் என்ற சூப்பர் பிரிமீயம் குடியிருப்பின் 16, 17, 18 மற்றும் 19-வது தளங்களில் உள்ள குடியிருப்புகளை நடிகர் ரன்வீர் சிங் மொத்தமாக வாங்கி உள்ளார்.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    இது 11 ஆயிரத்து 266 சதுர அடி கார்பெட் ஏரியாவும், 1300 அடி பிரத்தியேக மொட்டை மாடியுடனும் உள்ளது. அதோடு 19 கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியாவையும் வாங்கி உள்ளார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பை பதிவு செய்வதற்காக நடிகர் ரன்வீர் சிங் முத்திரை கட்டணமாக மட்டும் ரூ.7.13 கோடி செலுத்தி உள்ளார். மும்பையில் சமீபத்தில் பத்திர பதிவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கபீர்கான் இயக்கத்தில் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் 83 படத்திற்காக ஜீவாவுக்கு கபில்தேவ் பயிற்சியளித்து வருகிறார். #83TheMovie #Jiiva #Kabildev
    கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

    இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிர்மானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    கபீர்கான் இயக்கும் இந்த படம் தோனி படத்தைபோல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட வேலைகள் தொடங்கி உள்ளன. லண்டனில் தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.



    நடிகர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கபில்தேவ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

    மும்பையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கபில்தேவ் கலந்துகொண்ட கபில்தேவை நடிகர் ஜீவா சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #83TheMovie #Jiiva #Kabildev

    1983-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை மையப்படுத்தி உருவாகும் ‘1983’ படத்தில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Jiiva #Srikanth
    1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘1983’ என்ற தலைப்பில் இந்தியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

    கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. முதலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின் விஜய் தேவரகொண்டா நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின.



    ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று எண்ணிய இயக்குனர் கபீர் கான் நடிகர் ஜீவாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக ஜீவா தினமும் இரண்டு மணிநேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். #Jiiva #Srikanth

    சமீபத்தில் தீபிகாவை திருமணம் செய்துக் கொண்ட ரன்வீர் சிங், தற்போது ஒரு விழாவில் அவரைப் பற்றி பேசி கண் கலங்க வைத்துள்ளார். #DeepikaPadukone
    மும்பையில் ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் சார்பாக ‘பத்மாவத்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது. விழாவுக்கு ரன்வீரும் தீபிகா படுகோனும் வந்திருந்தனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ரன்வீரின் பேச்சை கேட்க ரசிகர்கள் காத்திருந்தனர். 

    அப்போது பேசிய ரன்வீர், ‘’என்னுடைய ராணி ‘பத்மாவத்’ படத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் என் ராணியை அடைந்துவிட்டேன். உன்னை நேசிக்கிறேன் தீபிகா. இந்த ஆறு வருடத்தில் நான் எதையாவது சாதித்திருந்தால் அதற்கு நீதான் காரணம். 



    என்னைச் செதுக்கியது நீதான். எனக்கு நீ அளித்த எல்லாவற்றுக்கும் நன்றி. ஐ லவ் யூ தீபிகா’’ என்றார். இதைக் கேட்ட தீபிகா கண் கலங்கினார். கண்ணீர்த் துளிகள் உருண்டு கன்னத்தில் விழுந்தன. எனினும் கண்களில் நிறைந்த நீருடன் சமாளித்துக் கொண்டு சிரித்தார் தீபிகா. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    பெங்களூருவில் நடைபெற்ற தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #DeepVeerReception #DeepVeer
    இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இத்தாலியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 

    நேற்று நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 



    அடுத்ததாக வரும் 27-ஆம் தேதி, ரன்வீர் சிங் குடும்பத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மும்பையில் நடைபெறுகிறது. #DeepVeerReception #DeepVeer 

    இத்தாலியில் திருமணத்தை முடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி, தற்போது மும்பை திரும்பியுள்ளனர். #DeepikaPadukone #RanveerSingh
    இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். 

    15ம் தேதி லேக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினர் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 



    வருகிற 21ம் தேதி பெங்களூருவிலும், 28ம் தேதி மும்பையிலும் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh 
    பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. #DeepikaPadukone #RanveerSingh
    இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். 

    அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து லோக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபீகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.



    திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களின் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. திருமணம் நடக்கும் இடம் ஏரி ஓரத்தில் இருப்பதால் படகில் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டனர். திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

    திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadukone #RanveerSingh 

    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை அறிவித்துள்ளார். #DeepikaPadukonemarriage #RanveerSinghmarriage #DeepikaPadukone #RanveerSingh #DeepikaRanveermarriage
    மும்பை:

    ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத் படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலிப்பதாக மும்பை திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

    இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில்  தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

    திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

    இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேஎன்’ என தீபிகா படுகோனே குறிப்பிட்டுள்ளார். #DeepikaPadukonemarriage #RanveerSinghmarriage  #DeepikaPadukone #RanveerSingh #DeepikaRanveermarriage
    பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவுக்கும்ம், ரன்வீர் சிங்குக்கும் இத்தாலியில் வைத்து வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone
    பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் மேக்கப் போடாமல் சென்ற இருவரையும் இந்திய பெண் ஒருவர் அடையாளம் கண்டு வீடியோ எடுத்ததை தீபிகா படுகோனே கண்டித்து அந்த பெண்ணை தாக்கியதாகவும் தகவல்கள் வந்தன. தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

    இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 20-ந் தேதி இத்தாலியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும், இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமான சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



    எளிமையான முறையில் திருமணத்தை நடத்திவிட்டு, இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #DeepikaPadukone #RanveerSingh 

    இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வரும் நிலையில், இருவரும் ஒன்றாக ஊர்சுற்றி வருவதை ரசிகை ஒருவர் வீடியோ எடுத்ததால், தீபிகா படுகோனை அவரை தாக்கியுள்ளாராம். #DeepikaPadukone
    இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். பத்மாவத் படத்துக்கு பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்றும், நவம்பர் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

    இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்கு யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க மேக்கப் போடாமல் சுற்றி வந்தனர்.

    புளோரிடாவில் உள்ள டிஸ்னி லேண்டுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த இந்தியர்கள் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இதனால் சுதந்திரமாக நடமாடி வந்த அவர்களை ஜனாப் என்ற இந்திய பெண் ரசிகை ஒருவர் கண்டுபிடித்து விட்டார். அவர்கள் முன்னால் சென்று வீடியோ எடுத்தார். மேலும் அவர்களை அழைத்து சிரிக்கச் சொல்லியும் கேட்டிருக்கிறார்.



    இதை எதிர்பார்க்காத தீபிகா படுகோனே அதிர்ச்சி அடைந்தார். கோபத்தோடு அந்த பெண் அருகில் சென்று அவரை தாக்கி அவரிடம் இருந்த படங்களை அழித்து விட்டு சென்றாராம். இந்த தகவலை ஜனாப் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தீபிகா படுகோனேயை வீடியோ எடுத்தற்காக அவர் என்னை தாக்கினார். அவமரியாதையாக நடந்து கொண்டார்’’ என்று கூறியுள்ளார். இதனால் தீபிகா படுகோனேவை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர். #DeepikaPadukone #RanveerSingh 

    இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் வெளிநாட்டில் ஊர் சுற்றி வருவதை வீடியோ எடுத்த ரசிகையை தீபிகா தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #DeepikaPadukone
    இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து வருகிறார்கள். இருவரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பத்மாவத் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது.

    இந்த படத்துக்கு பிறகு மேலும் நெருக்கமானார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் நவம்பர் 19–ந்தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க மேக்கப் போடாமல் சுற்றி வந்தனர்.

    புளோரிடாவில் உள்ள டிஸ்னிலெண்டுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த இந்தியர்கள் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இதனால் சுதந்திரமாக நடமாடினார்கள். ஆனால் ஜனாப் என்ற இந்திய பெண் மட்டும் கண்டுபிடித்து விட்டார். அவர்கள் முன்னால் சென்று வீடியோ எடுத்தார்.



    இதை எதிர்பார்க்காத தீபிகா படுகோனே அதிர்ச்சி அடைந்தார். கோபத்தோடு அந்த பெண் அருகில் சென்று அவரை தாக்கி வீடியோவை பறித்து படங்களை அழித்து விட்டு சென்றார். இந்த தகவலை ஜனாப் டுவிட்டரில் வெளியிட்டு, ‘‘தீபிகா படுகோனேயை வீடியோ எடுத்தற்காக அவர் என்னை தாக்கினார். அவமரியாதையாக நடந்து கொண்டார்’’ என்று கூறியுள்ளார். இதனால் தீபிகா படுகோனேவை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
    பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே காதலித்து வரும் நிலையில், அவர்களது திருமண ஏற்பாட்டில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone
    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் - தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், திருமண ஏற்பாடுகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் திருமண பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் அச்சடித்தல், திருமணத்துக்கு அழைக்க வேண்டியவர்கள் பட்டியல் தயாரித்தல், வரவேற்புகளை கவனித்தல், ஓட்டலில் தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட ஒவ்வொரு பணிக்கும் ஆட்களை நியமித்து வருகிறார்கள். இத்தாலியில் இவர்களது திருமணம் நடக்கிறது.

    விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்ட அதே ஓட்டலில், ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணமும் நடக்க உள்ளது.



    மும்பையில் இருந்து இருவீட்டாரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனி விமானம் மூலம் இத்தாலிக்கு செல்கிறார்கள். திருமணத்துக்கு முன்பாக இருவரும் கைவசம் இருக்கும் படங்களை விரைவாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

    இவர்களது நடிப்பில் கடைசியாக வெளியான பத்மாவத் படம் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadukone #RanveerSingh

    ×