search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranveer Singh"

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்.
    • காரின் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

    பிரபல இந்தி நடிகரான ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர். இதற்கிடையே ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் வெளியாகியும் எதிர்ப்புக்கு உள்ளானார்.

     

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    இந்நிலையில் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டியதாக ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தனது ஆடம்பர ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு காரை ஓட்டி வருகிறார். காரின் விலை ரூ.3 கோடியே 90 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாகவும் அதை புதுப்பிக்காமல் காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

     

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    அதற்கு பதில் அளித்துள்ள மும்பை போலீசார் ''இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளனர். புகார் கூறியவரை ரன்வீர் சிங் ரசிகர்கள் வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

    • ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
    • தற்போது தான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


    ரன்வீர் சிங்

    இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இந்நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில் தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.


    ரன்வீர் சிங்

    அதில், நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
    • இந்த நிர்வாண புகைப்பட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டும் என இந்தி நடிகர் ரன்வீர் சிங் போலீசாரிடம் கேட்டுள்ளார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

     

    அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக செம்பூர் போலீசார் கடந்த 12-ந் தேதி ரன்வீர் சிங் வீட்டுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீசில் 22-ந் தேதி (இன்று) நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

     

    இந்தநிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு ஆஜராக ரன்வீர் சிங் கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

    • பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர் மீது புகார்.
    • ரன்வீர் மும்பை திரும்பியவுடன் நேரில் ஆஜராகும்படி சம்மன்.

    பாலிவுட் பட உலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில், ரன்வீர் சிங் பேப்பர் பததிரிக்கைக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.

    அவரது நிர்வாணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 509, 292 மற்றும் 294 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஏ ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர்சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.

    தற்போது ரன்வீர்சிங் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார். அதனால் அவருக்கு இன்னுன் சம்மன் அனுப்பப்பட வில்லை. அவர் மும்பை திரும்பியவுடன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மும்பை காவல்துறை முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
    • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.


    ரன்வீர் சிங்

    அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் நடத்தியது. மேலும், இவரது நிர்வாணப் புகைப்படத்திற்கு பலர் ஆதரவும்  தெரிவித்தனர்.


    இந்நிலையில், ரன்வீர் சிங்கிடம் பிரபல நிறுவனம் மீண்டும் நிர்வாணமாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, பீட்டா அமைப்பு தங்கள் பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
    • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.


    அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளது. அங்குள்ள சாலை ஓரத்தில் மேசை மீது ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்தை ஒட்டிய பெட்டி வைத்துள்ளனர். அந்த பெட்டிக்குள் பலர் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் நன்கொடை வழங்கும் விதமாக பழைய பேண்ட், சட்டை, பனியன், டீசர்ட் போன்ற துணிமணிகளை கொண்டு வந்து போடுகிறார்கள். ஆடை நன்கொடை வழங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
    • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனின் கணவர். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    ரன்வீர் சிங்

    அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினார். இவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


    ஆலியா பட் - ரன்வீர் சிங்

    இந்நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "டார்லிங்ஸ்" திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,  "நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிரான எதையும் நான் கேட்க விரும்பவில்லை. என்னுடைய சக நடிகர் ரன்வீர் மீது வைக்கப்படும் புகார்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதளவில் அனைவராலும் விரும்பப்படுபவர். அவர் திரைப்படங்களின் மூலம் நமக்காக நிறைய செய்துள்ளார். நாம் அவருக்கு அன்பை மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
    • சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனின் கணவர். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.


    இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினார். இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங், எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

    இந்த நிலையில், ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, நடிகர் ரன்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்.
    • இவரின் புகைப்படத்திற்கு தற்போது எதிர்ப்பும் பாராட்டுக்களும் கிளம்பியுள்ளது.

    இந்தி திரையுலகில் 2010-ம் ஆண்டு அறிமுகமான ரன்வீர் சிங், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இதன்மூலம் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். பாலிவுட்டில் இப்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் பிரபலம் ரன்வீர் சிங். ஒரு பிரபல வார இதழுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். சிலர் ரன்வீர் சிங்கிற்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    ஆனால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, லில்லி சிங், மசாபா குப்தா, தியா மிர்சா, பானி ஜட்ஜ், மஹீப் கபூர், மனிஷ் மல்ஹோத்ரா உட்பட பலரும் இது துணிச்சலான முடிவு என்றும், இதை செய்வதற்கு தைரியம் வேண்டும் என்றும் குறிப்பிட்டு ரன் வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

    சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் நிர்வாண புகைப்படத்தைப் பார்த்து சமந்தா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங்.
    • இவர் தற்போது ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கியுள்ளார்.

    இந்தி திரையுலகில் 2010-ம் ஆண்டு அறிமுகமான ரன்வீர் சிங், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இதன்மூலம் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். தற்போது நடிகர் ரன்வீர் சிங் மும்பையில் ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார்.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    இந்த குடியிருப்பு மும்பை பாந்திரா பகுதியில் பேண்ட்ஸ்டான்டில் உள்ளது. அங்கு கடலை நோக்கி அமைந்திருக்கும் சாகரஷேம் என்ற சூப்பர் பிரிமீயம் குடியிருப்பின் 16, 17, 18 மற்றும் 19-வது தளங்களில் உள்ள குடியிருப்புகளை நடிகர் ரன்வீர் சிங் மொத்தமாக வாங்கி உள்ளார்.

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    இது 11 ஆயிரத்து 266 சதுர அடி கார்பெட் ஏரியாவும், 1300 அடி பிரத்தியேக மொட்டை மாடியுடனும் உள்ளது. அதோடு 19 கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியாவையும் வாங்கி உள்ளார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பை பதிவு செய்வதற்காக நடிகர் ரன்வீர் சிங் முத்திரை கட்டணமாக மட்டும் ரூ.7.13 கோடி செலுத்தி உள்ளார். மும்பையில் சமீபத்தில் பத்திர பதிவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கபீர்கான் இயக்கத்தில் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் 83 படத்திற்காக ஜீவாவுக்கு கபில்தேவ் பயிற்சியளித்து வருகிறார். #83TheMovie #Jiiva #Kabildev
    கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

    இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிர்மானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    கபீர்கான் இயக்கும் இந்த படம் தோனி படத்தைபோல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட வேலைகள் தொடங்கி உள்ளன. லண்டனில் தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.



    நடிகர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கபில்தேவ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

    மும்பையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கபில்தேவ் கலந்துகொண்ட கபில்தேவை நடிகர் ஜீவா சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #83TheMovie #Jiiva #Kabildev

    1983-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை மையப்படுத்தி உருவாகும் ‘1983’ படத்தில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Jiiva #Srikanth
    1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘1983’ என்ற தலைப்பில் இந்தியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

    கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. முதலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின் விஜய் தேவரகொண்டா நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின.



    ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று எண்ணிய இயக்குனர் கபீர் கான் நடிகர் ஜீவாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக ஜீவா தினமும் இரண்டு மணிநேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். #Jiiva #Srikanth

    ×