search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    யாரோ மார்பிங் செய்து விட்டார்கள்.. நடிகர் ரன்வீர் சிங் வாக்குமூலம்..
    X

    ரன்வீர் சிங்

    யாரோ மார்பிங் செய்து விட்டார்கள்.. நடிகர் ரன்வீர் சிங் வாக்குமூலம்..

    • ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
    • தற்போது தான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


    ரன்வீர் சிங்

    இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.

    இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில் தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.


    ரன்வீர் சிங்

    அதில், நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×