search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railways"

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்றில் சவுராஷ்டிரா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரயில்வேஸ் அணி. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara
    இந்தூர்:

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது.

    சி பிரிவில் இடம் பிடித்துள்ள சவுராஷ்டிரா மற்றும் ரயில்வேஸ் அணிகள் இந்தூரில் மோதின. டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹவிக் தேசாய், புஜாராவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். தேசாய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா 46 ரன்னில் வெளியேறினார்.

    மறுபுறம், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்பட்ட புஜாரா அதிரடியாக ஆடி 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது டி20 போட்டியில் புஜாராவின் முதல் சதமாகும். இறுதியில், சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 188 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் மிருணாள் தேவ்தார் 49 ரன்னும், பிரதம் சிங் 40 ரன்னும் எடுத்தனர். இறுதிவரை போராடிய அபினவ் தீக்சித் 37 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara
    ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகமான சொத்துகளுடன், ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய துறையாக ரெயில்வே துறை இருந்து வருகிறது. இத்துறையில் சுமார் 14 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் புதிதாக பணியமர்த்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம்  புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இனி ரெயில்வே துறை இருக்கும் எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies 
    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். #Diwali
    சென்னை:

    தீபாவளியையொட்டி தமிழக அரசு 5-ந் தேதியை (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்ததால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெளியூர் மக்கள் பெரும்பாலானோர் 2-ந் தேதி (அதாவது, நேற்று) சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும், 5 தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பட தொடங்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

    அதன்படி சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் இருந்தது. நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல், தாம்பரம், ஊரப்பாக்கத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதாலும், மற்ற வாகனங்கள் அதிகளவில் வந்ததாலும் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.



    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக நேற்று ரெயில்களிலும் பலர் பயணம் செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான திருச்செந்தூர், கன்னியா குமரி, தூத்துக்குடி, அனந்தபுரி, ராமேஸ்வரம், நெல்லை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட பல ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று பிற்பகலிலும், இரவிலும் சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து சேலம், கோவை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    ரெயில்கள் நடைமேடைக்கு வந்ததும் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளை தவிர, முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். ரெயில்வே போலீசார், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றினார்கள்.

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடாமல் இருப்பதற்காக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். #Diwali
    பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. #Railway #DigigalAadhaar
    புதுடெல்லி:

    ரெயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள் வழங்கிய அசல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகிறது. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    எனவே இதை தடுப்பதற்காக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இணையபெட்டகம் (டிஜிலாக்கர்) செயலியில் சேமிக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ரெயில்வேத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘டிஜிலாக்கர் கணக்கில் ‘வழங்கப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சின் மென்நகல்களை ஒரு பயணி காட்டினால், அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரம் ‘பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என கூறப்பட்டு உள்ளது.  #Railway #DigigalAadhaar #tamilnews 
    ரெயில்வே துறை தனியார் மயமாக்குவதற்கான சாத்தியமே இல்லை என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #PiyushGoyal #Railways
    கவுகாத்தி :

    அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செய்தியாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று உரையாடினார். 

    அதில், ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால், ரெயில் நிலையங்களின் மேம்பாடு, ரெயிலின் உள்கட்டமைப்பு, ரெயில் என்ஜின் தயாரிப்பு, ரெயில் பயணங்களின் போது வழங்கப்படும் உணவு போன்ற ரெயில்வேயின் முக்கியம் அல்லாத இதர பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், குறைவான செலவில் நிறைவான ரெயில்வே சேவையை வழங்கும் பொருட்டு அதிகளவிலான ரெயில்களை மின்சாரத்தின் மூலம் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். #PiyushGoyal #Railways
    இந்திய ரெயில்வே குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக ரெயில்வேயிடம் பாலிவுட் நடிகை ஷாபனா ஆஸ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். #ShabanaAzmi
    புதுடெல்லி:

    பாலிவுட் நடிகையும், சமூக சேவைகியுமான ஷாபனா ஆஸ்மி நேற்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் மூன்று பேர் மிகவும் அழுக்கான நீரில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தனர். 

    அவர்கள் ரெயில்வே ஊழியர்கள் எனவும், அந்த வீடியோவை ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயல் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'டாக்' செய்திருந்தார். 67 ஆயிரம் பேர் பார்வையிட்டு சுமார் ஆயிரம் பேர் ரீடுவிட் செய்த அந்த வீடியோ வைரலாக பரவியது.

    அந்த வீடியோ பார்த்து அதற்கு விளக்கம் அளித்த ரெயில்வே துறை மந்திரி, 'இந்த வீடியோவில் இருப்பது மலேசியாவில் உள்ள ஒரு உணவகம். அங்குள்ள ஊழியர்கள் அசுத்தமான நீரில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை கண்ட ஆஸ்மி உடனடியாக ரெயில்வே துறையிடம் மன்னிப்பு கேட்டார். அதில், இது குறித்து விளக்கம் அளித்ததற்கு நன்றி. எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என டுவிட் செய்தார்.

    ஷாபனா பாலிவுட் நடிகையாக மட்டுமல்லமால் பல சமூக சேவைகளையும் புரிந்துள்ளார். 1989-ம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், 1998-ம் ஆண்டு இந்தியாவின் நல்லெண்ண தூதராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShabanaAzmi

    ×