என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கான சாத்தியமே இல்லை - பியூஷ் கோயல் உறுதி
Byமாலை மலர்11 Jun 2018 1:50 PM GMT (Updated: 11 Jun 2018 1:50 PM GMT)
ரெயில்வே துறை தனியார் மயமாக்குவதற்கான சாத்தியமே இல்லை என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #PiyushGoyal #Railways
கவுகாத்தி :
அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செய்தியாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று உரையாடினார்.
அதில், ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால், ரெயில் நிலையங்களின் மேம்பாடு, ரெயிலின் உள்கட்டமைப்பு, ரெயில் என்ஜின் தயாரிப்பு, ரெயில் பயணங்களின் போது வழங்கப்படும் உணவு போன்ற ரெயில்வேயின் முக்கியம் அல்லாத இதர பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறைவான செலவில் நிறைவான ரெயில்வே சேவையை வழங்கும் பொருட்டு அதிகளவிலான ரெயில்களை மின்சாரத்தின் மூலம் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். #PiyushGoyal #Railways
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X