search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qatar"

    கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது. #Qatar #KeralaFlood #FinancialAid
    துபாய்:

    மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், வெளிநாடுகளும் உதவி செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்குவதற்காக அவசர குழு ஒன்றை அமைத்தது. இதன் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது.

    இதற்கான உத்தரவை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி பிறப்பித்தார். இதையடுத்து, கத்தார் அரசின் அறக்கட்டளை பிரதிநிதிகள் மூலம் இந்தத் தொகை இந்தியாவிடம் அளிக்கப்பட்டது. இத்தொகை கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவி செய்யும்பொருட்டு வழங்கப்படுவதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்து உள்ளது. #Qatar #KeralaFlood #FinancialAid

    அமெரிக்காவுடன் தலீபான் பேச்சு வார்த்தை தொடரும் என ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் கூறியுள்ளார்.
    பெஷாவர்:

    அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின.

    அதைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து அங்கு 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தலீபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதை இப்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் உறுதி செய்து உள்ளார்.

    தற்போது துருக்கியில் உள்ள அவர் இதுபற்றி கூறுகையில், “கத்தார் நாட்டில் தலீபான் அரசியல் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடி பேச்சு நடத்தினார்கள். இதில் வேறு எந்த தரப்பினரும் பங்கேற்கவில்லை. இப்போது இந்த பேச்சு வார்த்தை அடிமட்ட அளவில் உள்ளது. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “பேச்சு வார்த்தை உயர் மட்டத்தில் நடைபெறுகிறபோது, நாங்கள் உடன்பாட்டை எட்ட முடியும். தலீபான்களும், அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்” என்றார்.

    ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்த மறுத்தது பற்றி கேள்வி எழுப்பியபோது, “தலீபான்களின் போர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது அல்ல. அது அமெரிக்காவுக்கு எதிரானது” என பதில் அளித்தார்.

    இந்த தகவல்களை பாகிஸ்தானின் ‘தி டெய்லி டைம்ஸ்” ஏடு வெளியிட்டு உள்ளது. 
    2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்புகளை ரஷிய அதிபர் புதின் கத்தார் அமீரிடம் இன்று ஒப்படைத்தார். #Russia #WorldCupFootball #Qatar
    மாஸ்கோ:

    உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    இன்று நடைபெறும் இறுதி போட்டியுடன் ரஷியாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடையும் நிலையில், வரும் 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று ரஷ்ய அதிபரின் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகக்கோப்பை கால்பந்தை ஃபிபா தலைவர் கியானி இன்பான்ட்டினோவிடம் ஒப்படைக்க அதனை கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் ஒப்படைத்தார்.

    இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தியதும், அடுத்த உலகக்கோப்பைக்கான பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்த அனுபவும் சாதனைக்குரிய நிகழ்வு என தெரிவித்துள்ளார். #Russia #WorldCupFootball #Qatar
    ரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும் ஏவுகணைகளை கத்தார் வாங்கினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #Saudi #Qatar
    ரியாத்:

    சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரைன், எகிப்து உட்பட பல வளைகுடா நாடுகள் கத்தார் உடனான தூதரக மற்றும் வியாபார ரீதியிலான உறவை கடந்தாண்டு துண்டித்தது. இதற்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

    கத்தார் நாட்டு அரசு பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக கூறி வளைகுடா நாடுகள் அந்நாட்டுடனான உறவை துண்டித்தன.
    இந்நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவுடன் கத்தார் அரசு ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரியில், விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மாக்ரோனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியில், கத்தார் நாடு ஏவுகணை வாங்குவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க சவுதி அரசு தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயார் எனவும்
    குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பிரான்ஸ் அதிபர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆயுத பரிமாற்றத்தை தடுத்து அமைதி நிலவ வழிசெய்யுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது.

    ஆனால் இதுவரை இதுகுறித்து பிரான்ஸ் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudi #Qatar 
    கத்தார் நாட்டில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து நாடுகளின் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

    தோகா:

    ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கத்தார் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கத்தாருடன் ஆன அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டன.

    பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யவில்லை என கத்தார் மறுத்தது. இருந்தாலும் அதை ஏற்காமல் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக நடந்து கொண்டன.

    எனவே, தங்களுக்கு வேண்டிய உணவு பொருட்களை துருக்கி, மொராக்கோ, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கத்தார் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி முதல் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளின் பொருட்கள் நேரடியாக இறக்குமதியாகாமல் வேறு நாடுகளின் வழியாக கத்தாருக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதை அறிந்த கத்தார் அரசு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து நாடுகளின் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

    அதிகாரிகள் கடைகள் தோறும் சென்று அந்நாட்டு பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை செய்கின்றனர். மீறி விற்கப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #tamilnews

    ×