என் மலர்
நீங்கள் தேடியது "military action"
- வெனிசுலா அதிபர் நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
- அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. டிரம்பின் இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இதற்கிடையே அமெரிக்கா சமீபகாலமாக கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை குவித்து வருகிறது. மேலும் வெனிசுலாவிற்குள் ராணுவ நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக டிரம்பிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆபரேசன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களையும், 15 ஆயிரம் துருப்புகளையும் கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க ராணுவம் குவித்துள்ளதால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து சிறப்பு அவசர நிலையை வெனிசுலா அதிபர் நிகோலஸ் அறிவித்து நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அது என்னவென்று இப்போது என்னால் சொல்ல முடியாது. அதுபற்றி விரைவில் சொல்வேன் என்றார். இதனால் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக கருதப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழல் கவலை அளிப்பதாகவும், இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர் ஜோசப் வோட்டல் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி (பொறுப்பு) பேட்ரின் ஷானகான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
பதற்றத்தை தணிப்பதில் மந்திரி ஷானகான் கவனம் செலுத்தி வருகிறார். இரு நாடுகளும் மேற்கொண்டு ராணுவ நடவடிக்கை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எல்லையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லை தாண்டிய அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையும் வலியுறுத்தி உள்ளது. பதற்றத்தை தணிப்பதற்கு நேரடி பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதேபோல் இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கனடாவும் கேட்டுக்கொண்டுள்ளது. #IndiaPakistanTensions #Pentagon
சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரைன், எகிப்து உட்பட பல வளைகுடா நாடுகள் கத்தார் உடனான தூதரக மற்றும் வியாபார ரீதியிலான உறவை கடந்தாண்டு துண்டித்தது. இதற்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
கத்தார் நாட்டு அரசு பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக கூறி வளைகுடா நாடுகள் அந்நாட்டுடனான உறவை துண்டித்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவுடன் கத்தார் அரசு ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரியில், விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மாக்ரோனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியில், கத்தார் நாடு ஏவுகணை வாங்குவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க சவுதி அரசு தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயார் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ் அதிபர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆயுத பரிமாற்றத்தை தடுத்து அமைதி நிலவ வழிசெய்யுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது.
ஆனால் இதுவரை இதுகுறித்து பிரான்ஸ் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudi #Qatar






