search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்டகன்"

    • தைவானின் சுயாட்சியை சீனா அங்கீகரிக்கவில்லை
    • தைவானுக்கு ஆதரவான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றது சீனா

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan).

    சுயாட்சி பெற்ற தனி நாடாக தைவான் தன்னை அறிவித்து கொண்டாலும், சீனா இதை ஏற்க மறுத்து, தைவானை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து உரிமை கொண்டாடி வருகிறது.

    இரு நாடுகளுக்குமிடையே இது பெரும் சச்சரவை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

    சமீப சில மாதங்களாக தைவானின் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில், சீனா, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாக பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தைவானின் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதால், சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை அந்நாடு எடுத்துள்ளது.

    இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. பல கட்டங்களாக சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    ஆனால், 2022ல் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்கு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து சீனா அதன் பிறகு பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது.

    கடந்த வருடம், இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்க சம்மதித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடமான பென்டகனில் (Pentagon) அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையே தைவான் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் புற்று நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ராணுவ துணை தலைமை அதிகாரி மைக்கேல் சேஸ் (Michael Chase) மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் சாங் யான்சாவ் (Major Gen. Song Yanchao) ஆகியோர் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    தைவான் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் சீனா தயார் இல்லை. தைவானுக்கு ராணுவ உதவி அளித்து வலுப்படுத்த முயலும் போக்கை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும்.

    தெற்கு சீன கடல் பகுதியில் ராணுவத்தை நிலைநிறுத்துவதையோ, சச்சரவை தூண்டும்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அமெரிக்கா தொடர கூடாது.

    கடற்சார் பாதுகாப்பு விஷயங்களை அமெரிக்கா முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

    சர்வதேச அளவில் முக்கிய சிக்கல்களில் சீனாவின் அடிப்படை உரிமைகளுக்காக சீனா எடுக்கும் முயற்சிகளயும், சீனாவின் நிலைப்பாட்டையும் அமெரிக்கா புரிந்து கொண்டு ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு சீனா கூறியுள்ளது.

    • 20 இந்திய பணியாளர்களுடன் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிக கப்பலை திடீரென டிரோன் தாக்கியது.
    • இந்த டிரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

    வாஷிங்டன்:

    சவுதி அரேபியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி லைபீரியா நாட்டு கொடியுடன் எம்.வி. செம் புளூட்டோ என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது. இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் வெராவத் நகரில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது அந்தக் கப்பல் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதனால் கப்பலில் தீப்பற்றியது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது. இதில் கப்பலின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. டிரோன் தாக்குதலின் போது கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

    அந்த சரக்கு கப்பலில் 21 இந்திய பணியாளர்கள் மற்றும் ஒரு நேபாளி ஆகியோர் இருந்தனர்.அரபிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதல் இந்தியாவை குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காசா விவகாரத்தில் ஈரான் அளித்து வரும் ஆதரவினால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பாட்டில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று ஈரான் கூறி வந்தாலும் கள நிலவரம் இதுவாகவே உள்ளது. இந்திய பணியாளர்களுடன் வந்த சரக்கு எண்ணெய் கப்பலை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து தான் ஏவப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    செங்கடலுக்கு அப்பால் வணிக கப்பல் போக்குவரத்துக்கு விரிவடைவதை விரும்பாமல் ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்து வருகிறார்கள்.

    செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கிச் செல்லும் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து நடுக்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தக் கடற்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல்மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்த கப்பலை மீட்க இந்திய கடலோர படைக்குச் சொந்தமான விக்ரம் கப்பல் அங்கு விரைந்துள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்டு நாளை மும்பை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • வடகொரியா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
    • தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

    வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவரது சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது.

    இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு "வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமானது. அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுவதாக உள்ளது" என விமர்சித்திருந்தார்.

    மேலும், "எந்தவித நிபந்தனை இல்லாமமல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், நேரத்தையும் பேசக்கூடிய கருத்தையும் வடகொரியாவே முடிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யொ ஜாங் அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ளார்.

    செயற்கைக்கோள் மூலம் மிரட்டல், மற்ற ஆயுதங்களை செயல்படுத்துதல் போன்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், "ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை ஒருபோதும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. எனவே, வடகொரியா அந்த நோக்கத்திற்காக ஒருபோதும் அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது." என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு முறை தோல்வியுற்ற நிலையில், 3-வது முறையாக வடகொரியா வெற்றிகரமாக செலுத்தியது.
    • ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க நாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

    பயாங்யாங், நவ.28-

    வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கை கோள் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட வடகொரி யாவின் முதல் உளவு செயற்கைகோளும் இது தான்.

    இந்த செயற்கை கோள் உளவு பார்த்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக வடகொ ரியா கூறியுள்ளது.

    இந்த உளவு செயற்கை கோளானது அமெரிக்கா வின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற் படை நிலையங்களின் புகை படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

     மேலும் ரோம்நகரம், குவாமில் உள்ள ஆண்டர் சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம், அமெ ரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றை யும் புகைப்படம் எடுத்து உள்ளது.

    இந்த புகைப்படங்களை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் பார்த்துள்ளதாக அம்மாநிலத்தில் இருந்து வெளியாகும் அதிகாரப் பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், "உளவு செயற்கைகோளை நன்றாக சரிபடுத்தும் நடைமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடையும். டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த செயற்கைகோள் உளவுப் பணியை தொடங்கும்" என்று தெரிவித்து உள்ளது.

    ஆனால் வடகொரிய செயற்கைகோள் எடுத்து உள்ள புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோ- சீனா எல்லையில் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது சீனா
    • சாலைகள், ஹெலிபேடுகள் அமைத்துள்ளதாக பென்டகன் தகவல்

    இந்தியா- சீனா இடையில் எல்லை கட்டுபாட்டுக் கோடு தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது சீனா இந்தியா எல்லைக்குள் ஊடுருவது உண்டு. பின்னர், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும் பின்வாங்கிவிடும்.

    கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற சம்பவத்தின்போது இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் இந்தியா எல்லை அருகே பாதுகாப்பை அதிகரித்துள்ளது. என்றபோதிலும், சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

    டோக்லாம், பாங்காங் லேக் போன்ற எல்லைப் பகுதியில் இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்க அரசு இது சம்பந்தமான எல்லா ரகசிய திட்டங்களை குறித்தும் விசாரிக்க ஒரு படையை உருவாக்கியது
    • இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள நான் அனுமதிக்கபடவில்லை

    'பறக்கும் தட்டுகள்' எனும் பெயரில் பல கதைகளிலும், திரைப்படங்களிலும் காட்டப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்களின் (Unidentified Flying Objects) நடமாட்டங்களை குறித்து அமெரிக்கா தகவல்கள் சேகரிக்கிறது.

    முன்னெப்போதும் இல்லாத அளவில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்துடனும், அமெரிக்காவின் எதிரி நாடுகளின் மறைமுக தாக்குதல் முயற்சிகளை கண்டறியவும், இவ்விமானங்கள் குறித்து நடத்தப்பட்ட ராணுவ ஆராய்ச்சிகளின் தகவல்களை வெளியிட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பென்டகன் (Pentagon) எனப்படும் அமெரிக்க ராணுவ தலைமையகத்திடமிருந்து இதற்கான தகவல்கள் பெறப்படுகின்றன.

    இந்நிலையில் அமெரிக்க விமான படையின் உளவுப்பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் இது சம்பந்தமான ஆராய்ச்சி தகவல்களை நெடுங்காலமாக ராணுவம் மறைத்து வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மேஜர் டேவிட் க்ரூஷ் (Major David Grusch) எனும் அந்த அதிகாரி, அமெரிக்க காங்கிரஸ் முன் சாட்சியம் அளித்து கூறியதாவது:-

    அமெரிக்க அரசு இது சம்பந்தமான எல்லா ரகசிய திட்டங்களை குறித்தும் விசாரிக்க ஒரு படையை உருவாக்கியது. இதன் தலைவராக 2019-ல் நான் நியமிக்கப்பட்டேன். அப்போது அமெரிக்க உளவு செயற்கைக்கோள் செயல்படுத்தும் துறையில் பணியாற்றினேன்.

    அப்போது பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த, பூமியில் விழுந்த அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்களை குறித்தும், அவற்றின் பாகங்களை கொண்டு மீண்டும் அவற்றை உருவாக்க முயலும் பொறியியல் குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெறுவது எனக்கு தெரியப்படுத்தப்பட்டது.

    ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள நான் அனுமதிக்கபடவில்லை. இதுகுறித்து எனக்கு தெரிந்திருக்கும் தகவல்களை வெளியில் கூற நான் முன் வந்தபோது என்னை பணி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள். 1930-களிலிருந்து அமெரிக்க அரசுக்கு இதுகுறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபையையும் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த ஆளில்லா விமானங்களை குறித்தும், இதுகுறித்த ஆராய்ச்சிகள் குறித்தும் டேவிட்டிடம் தகவல்கள் கோரியுள்ளனர்.

    கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பல இடங்களிலிருந்து இத்தகைய "விமானங்களை" கண்டதாக செய்திகள் வருவதாகவும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்த பென்டகன், டேவிட்டின் இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ளது.

    • மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.
    • பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    சூரத் :

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும்விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

    இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.

    சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் காதவி, 'பென்டகை முந்துவது எங்கள் நோக்கமல்ல. தேவை அடிப்படையிலேயே இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இதனால், வைரத் தொழிலில் ஈடுபடுவோர் இனி தினமும் மும்பை செல்லவேண்டிய தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

    வருகிற நவம்பர் மாதம் இந்த அலுவலக கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    'இந்த கட்டிடம், சூரத் வைரத் தொழில்துறையின் ஆற்றல், வளர்ச்சியை காட்டுகிறது. இந்திய தொழில்முனைவு ஊக்கத்தின் அத்தாட்சியாகவும் திகழ்கிறது' என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது கூடுதல் தகவல்.

    • அலாஸ்கா கடற்கரை வான்வெளியில் பறந்த மர்ம பொருளை பென்டகன் சுட்டு வீழ்த்தியது.
    • இந்த மர்ம பொருள் சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், இந்த மர்ம பொருள் சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்றும், விமான பயணங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதன் பேரில் ராணுவம் அந்தப் பொருளை சுட்டு வீழ்த்தியது. அந்தப் பொருள் அமெரிக்க கடற்பரப்பில் விழுந்தது.

    ஏற்கனவே கடந்த வாரம் சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×