search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purattasi Festival"

    • புரட்டாசி பவுணர்மியன்று சிவபெருமானை காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.
    • மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும்.
    • மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழியும்.

    கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி விநாயகரை பல்லாண்டுகள் கடுமையாக தவம் செய்தான். அவனது தவத்தை மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, 'மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்' என்ற வரத்தைக் கொடுத்தார். அது மட்டுமின்றி அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் கொடுத்தார். அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான். விநாயகர் இந்த வரங்களை பலிக்குக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.

    அதாவது அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் அவனது மூன்று பட்டணங்களும் அழிவதோடு, அவனும் சிவபிரானால் அழிவான் எனவும் கூறினார். விநாயகரின் வரத்தைப் பெற்ற பலி நாட்கள் செல்லச் செல்ல உலகங்களையும் ஆட்டிப் படைத்து தேவர்கள் முதலிய எல்லோருக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்தான். இதற்கு நிவாரணம் பெற தேவர்கள் அனைவரும் சிவபிரானை நாடி வேண்டினார்கள்.

    அவர் பலியுடன் போரிட்டு அவரது திரி சூலத்தால் அவனை அழிக்கும்போது அவன் அவரது திருப்பாதங்களைப் பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான். பலியை (திரிபுரன்) சிவபிரான் அழித்ததால் அவருக்கு திரிபுராரி எனப் பெயர் வந்தது. சிவனது பலி வதம் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் கிருஷ்ணரது நரகாசுரவதம் போன்றது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

    வதைபடும் நேரத்தில் வீடு பேறு பெற்றான் பலி. இறையருளால் பலி வீடுபேறு பெற்ற நாள் ஒரு புரட்டாசி பவுர்ணமியாகி தினமாகும்.

    எனவே பவுர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும் நெய் அல்லது எண்ணெய் திருவிளக்கு ஏற்றினாலும் எக்காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம். அன்று விரதமிருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிவதரிசனம் பெற்று வருவதோடு, சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவ பெருமானை தியானித்து வழிபட்டால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

    புரட்டாசி பவுணர்மியன்று சிவபெருமானை காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும். மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும். மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழியும். அது மட்டுமின்றி நாம் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.

    • காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.
    • ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.

    பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள்.நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.

    காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.

    அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம்.

    அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.

    சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.

    நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.

    அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.

    வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

    • திருக்கல்யாண ஏடு வாசிப்பு 14-ந்தேதி நடக்கிறது.
    • திருத்தேர் உற்சவம் 16-ந்தேதி நடக்கிறது.

    மணலிபுதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பிரசித்திப் பெற்றது.

    இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியபடி பதி வலம் வந்தனர். காலை 7 மணியளவில் திருநாம கொடியேற்றப்பட்டது.

    விழாவில் தலைவர் துரைப்பழம், பொருளாளர் ஜெயக்கொடி, சட்ட ஆலோசகர் ஐவென்ஸ், நிர்வாகிகள் சுந்தரேசன், மனுவேல், கிருபாகரன், பாலகிருஷ்ணன், கண்ணன், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இன்று மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருஏடு வாசிப்பு இரவு அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருகிறார்.

    தொடர்ந்து விழா நடக்கும் நாட்களில் அய்யா வைகுண்டர் அன்னம், கருடன், மயில், ஆஞ்ச நேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வருவார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண ஏடு வாசிப்பு, சரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதியும், அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேர் உற்சவம் 16-ந் தேதியும், நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு அய்யா பூப்பல்லக்கில் பதிவலம் வருதல் மற்றும் இரவு திருநாம கொடி அமர்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
    • அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால், கூடுதல் பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது, புரட்டாசி. புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர், மகாவிஷ்ணு. எனவேதான் புதன் கிரகத்தின் அருளைப் பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது. மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுக்குரிய வீடு, கன்னி ராசி.

    இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில்தான். எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன. புதன் கிரகத்திற்கு நட்பானவர், சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

    புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அது முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது, பெருமாளுக்குரிய பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    • பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது.
    • கோவில் பிரசாதம், மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னை :

    தமிழகத்தில் பொதுமக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டு போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பெருவிருப்பமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 'தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை செயல்படுத்தும் வகையில், கடந்த ஆடி மாதம் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் குறைந்த கட்டணத்தில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    அதேபோல், 2-ம் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, கூடுதல் கமிஷனர் சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் பாரதி தேவி, இணை இயக்குனர் பி. புஷ்பராஜ், இணை கமிஷனர்கள் ஆர்.சுதர்சன், ந.தனபால், கே.ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும்.
    • சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சென்னை :

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் விசேஷமானது. இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும்.

    இதையொட்டி சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் துளசி மாலை கொடுத்து வழிபாடு செய்தனர்.

    சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.

    இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான கோவிலில் குவியத்தொடங்கினார்கள். அவர்கள் வரிசையில் நின்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அலங்காரங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றன. இங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டது. சிறப்பு 4 கால பூஜை நடக்கிறது.

    மேலும் கல் பதித்த ரத்னாங்கி சேவையும் நடைபெறுகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், துளசி மாலை, தாமரை மாலை, சம்பங்கி மாலை ஆகியவற்றால் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா என்று பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பியபடியே சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், யதோத்தகாரி பெருமாள் உள்ளிட்ட திவ்ய தேசங்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • 5-ந்தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
    • திருப்புவனம் அருகே உள்ளது தெய்வநாயகப் பெருமாள் கோவில்.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் உபகோவிலான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் தெய்வநாயகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள கிராமமானது மகாபாரத இதிகாசக் கதையில் பாண்டவர்களின் தாயாரான குந்தி தேவி பெயரால் 'குந்தி நகர்' என அழைக்கப்பட்டு உள்ளது.

    பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரால் அருளப்பட்ட திருவாய்மொழி என்னும் திவ்யப்பிரபந்தத்துக்கு உரை செய்தமையால் திருவாய்மொழிப்பிள்ளை என்று பெயர் பெற்ற திருமலையாழ்வாரின் அவதரித்த திருத்தலம் இந்த கொந்தகை ஆகும்.

    தென்கலை வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியார் மணவாள மாமுனிகள் தன் குருவான திருவாய் மொழிப் பிள்ளையிடம் உபதேச சாரங்களைக் கற்று தெளிந்தது இத்திருத்தலத்தில் தான். இதனால் இங்கு எழுந்தருளிய பெருமாளை வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. மேலும் இங்குள்ள பெருமாளை பூர நட்சத்திரத்தன்று வணங்கி வழிபடுவோருக்கு திருமணத்தடைகள் நீங்கும், பதவி உயர்வுகள் கிட்டும் என்பதும் ஐதீகமாகும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் புரட்டாசி கருட சேவை திருவிழா அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) பெரிய திருவோணம் ஜென்ம நட்சத்திரம் அன்று நடக்கிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், 11.30 மணிக்கு தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயகப்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அன்னதானம் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.
    • புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடு.

    பஞ்சமுக ஜெயமாருதி சேவா அறக்கட்டளை தலைவர் மற்றும் அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டிவனம் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடைபெற உள்ளன. வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை தோறும் சுவர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனையும் நடைபெற உள்ளது. உலக நன்மை வேண்டி இந்த பூஜைகள் பஞ்சமுக ஜெயமாருதி சேவா அறக்கட்டளை மூலம் செய்யப்பட உள்ளது.

    மேலும், புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மகா சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். ஆகவே பக்தர்கள் மேற்படி பூஜைகளில் கலந்து கொண்டு இந்தச் சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

    இந்த நிகழ்ச்ஜெயமாருதி சேவா அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், செயலாளர் எஸ்.நரசிம்மன், உபதலைவர் ஆர்.யுவராஜன், அறங்காவலர்கள் எம்.பழனியப்பன், வி.கச்சபேஸ்வரன், ஜி.செல்வம், கே.வெங்கட்டராமன் மற்றும் ஆலய நிர்வாக அலுவலர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
    • காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.

    பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள். நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.

    காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.

    அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம். அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.

    சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.

    நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.

    அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.

    வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

    • திருவிழா 24-ந்தேதி தொடங்கி, 5 வாரங்கள் சனிக்கிழமைதோறும் நடக்கிறது.
    • விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது.

    கண்ணமங்கலம் அருகே படவேடு ஜவ்வாதுமலை ராஜகம்பீரம் என்ற கோட்டை மலையில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ராஜகம்பீர சம்புவராய மன்னரால் 2,160 அடி உயர மலையில் கட்டப்பட்ட வேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி மாத 47-ம் ஆண்டு உற்சவ திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி, 5 வாரங்கள் சனிக்கிழமைதோறும் நடக்கிறது.

    இதை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை, பஜனைகள் நடக்கிறது. மலைப்பாதை வழியாக டிராக்டர் மூலம் பக்தர்கள் செல்கின்றனர். திறமையான மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வசதியும் உள்ளது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மாலையில் உற்சவர் அலங்காரம் செய்து படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடக்கிறது. 24-ந் தேதி சாமிக்கு சீனிவாசர் அலங்காரம், 2-வது சனிக்கிழமை அக்டோபர் 1-ந் தேதி நர்த்தன கிருஷ்ண அலங்காரம், 8-ந் தேதி வைகுண்டநாதன் அலங்காரம், 15-ந் தேதி நாச்சியார் திருக்கோல அலங்காரம், 22-ந் தேதி வெண்ணைத் தாழி அலங்காரம் செய்யப்படுகிறது.

    மேலும் விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை படவேடு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி அய்யாவை வணங்கி சென்றனர்.
    • பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு இனிமமாக வழங்கப்பட்டது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

    இந்தநிலையில் புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவை வணங்கி சென்றனர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது. பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து சாமிதோப்பு தலைமை குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்ன தர்மம் நடைபெற்றது.

    • பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குணசீலம். இங்குள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    பெருமாளை தரிசனம் செய்வதற்காக காலையில் இருந்தே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசைகளில் நின்று பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    ×