search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pujas"

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானமும்,பால், பன்னீர்,இளநீர், சந்தனம்,குங்குமம், மாப்பொடி ,திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், பூச்சொரிதல் நடைபெற்றது.

    தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி மற்றும் சாமி வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளுக்கு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் கோபிநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் கோவில் தொடர்பான எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் போது அங்குள்ள புதர்களு க்கிடையே கலைநயத்துடன் கூடிய தவ்வை, பிரம்மி, வராஹி உள்ளிட்ட சப்த கன்னிகள் சிலையும், முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள 8 சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

    இந்த சிலைகளை மீட்டெடுத்த கோவில் பணியாளர்கள் சுத்தப்படுத்தி அருகில் இருந்த பகுதியில் சிலைகளை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் கிராம மக்கள் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் சிலைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    • வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி மூலவர், உற்சவர் பாலமுருகனுக்கு நேற்று காலை பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கொண்டு வந்த பாலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    வைகாசி விசாகத்தையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலிலும், வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு அடுத்த மணக்குடியில் உலகநாயகி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹுதி நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, தான்தோன்றீஸ்வரர், உலகநாயகி அம்பாள், விநாயகர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.
    • வாசல் திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை உள்ளே சென்றன.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் சட்டை நாதர் சுவாமி கோவிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது.

    மற்ற கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

    தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

    அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர்.

    40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டி ருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்ப ட்டுள்ளது.

    இதில் தம்பி ரான் சுவாமிகள் மற்றும் கோயில் காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், உபயதாரர் முரளிதரன், வர்த்த த சங்க செயலாளர் துரை, திருமு ல்லை வாசல் கணேஷ், ரவிச்சந்தி ரன், பொறியாளர் செல்வ குமார், முன்னா ள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

    • குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் சாட்சிநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குருபகவான் குடிகொண்டுள்ளார்.

    தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குருபகவான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம் இதுவாகும்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதேபோல், திருவிடைமருதூர் அருகே சூரியனார்கோயிலில் உள்ள உஷா தேவி சாயா தேவி உடனாகிய சிவசூரிய பெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு கட அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

    குருபெயர்ச்சி அடையும் நேரமான 11. 21 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

    • குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.
    • இன்று இரவு 9 மணிக்கு குருபகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்புசாவடி ஆட்டுக்கார தெருவில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் குரு பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.

    இன்று இரவு 10 மணிக்கு மேல் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார் .

    இதை முன்னிட்டு இரவு 9 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மீனம், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் தனுசு ஆகும்.

    பரிகார கட்டணம் ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் யாக அபிஷேக பூஜை பொருட்களை பக்தர்கள் முன்னதாகவே கோவிலில் வந்து சேர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    • மார்ச் 22ஆம் தேதி அன்று காலை கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
    • இரவு இந்திர விமானத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

    சுவாமிமலை:

    தென்னகத்தின் அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த மார்ச் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    இதையொட்டி மார்ச் 22ஆம் தேதி அன்று காலை கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து கோவில் பட்டாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைத்தனர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு ராமர், சீதை, லெட்சுமணன், ஆஞ்சநேயருடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனைத் தொடர்ந்து இரவு இந்திர விமானத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து கடந்த 29-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது இன்று. ராமநவமியை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் சாமி தேரில் எழுந்தருளி, காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    • சிறப்பு பூஜைகள் நடந்து அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
    • சிறப்பு பூஜைகளும், பட்டு சார்த்தும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று சந்திரசேகரரர்- மனோன்மணி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    பின்னர், இரவு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்து அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

    விழாவின் காலையில் நடந்த பந்தல் காட்சி மற்றும் பூஜைகளில் வரணி ஆதீன செவ்வந்திநாத பண்டார சன்னதி, ஸ்தலத்தார்கள் கயிலை மணி வேதரத்னம், கேடிலியப்பன், உபயதா ரர்கள் பி.வி.ஆர். விவேக், கள்ளிமேடு மதியழகன் குடும்பத்தினர்கள், ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    பின்னர், சாமி கடற்கரை அருகே உள்ள நாலுகால் மண்டபத்தில் இறக்கப்பட்டு ஆறுகாட்டுத்துறை கிராமமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், பட்டு சார்த்தும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. 

    • அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.
    • சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக (வரலாற்று) திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் ரிக் யஜூர் சாம அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும் பின்னர் கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்ற தாகவும் பின்பு இங்கு வந்த திருநாவுக்கரச சுவாமிகளும், திருஞானசம்பந்த சுவாமிகளும் தேவார பதிகம் பாடி கதவு திறந்ததாக வரலாறு.

    அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.

    இந்த ஐதீக திருவிழா ஆண்டு தோறும் மாசிமக பெருவிழாவில் தமிழ் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைப்பெற்று வருகிறது.

    இதையெட்டி இந்த ஆண்டு நடைபெற்ற ஐதீக வரலாற்று திருவிழாவில் மகரதோரண வாயிலில் அப்பர் சம்மந்தர் எழுந்தருளினர்.

    பின்பு ஓதுவார் மூர்த்திகள் பரஞ்சோதி ஓதுவார் அப்பராகவும் ஓதுவார் வடுகநாததேசிகர் திருஞான சம்பந்தராகவும் உருவகப்படுத்தப்பட்டு தேவார தமிழ் பதிகம் பாடினர். ராஜேந்திரன் ஓதுவார் திருவிழாவின் வரலாறு பற்றி விளக்கி பேசினார்.

    அப்போது கோவில் கதவு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு, கபாட பூஜை எனப்படும் திருக்கதவுக்கு சிவராஜா சிவச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில்; வேதாரண்யம் விளக்கழகு என்பதற்குகேற்ப வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு அப்பர் சம்மந்தர் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரனிஆதினம் செவ்வந்தநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், குருகுலம் அறங்காவலர்கள் கயிலைமணி வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வேதபாராயணன் ஓதப்பட்டது.

    • சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு சீர்காழி திருஞானசம்பந்தர் இசை பள்ளி வழங்கிய 6ம் ஆண்டு மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

    நாட்டியாஞ்சலி விழாவிற்கு அதன் தலைவர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார்.

    உப தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் நடராஜ. சட்டையப்பன், உபசெயலாளர் மணிகண்டன், பொருளாளர் கடவாசல் சத்துரு ஹன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் தருமை. சிவா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    தொடர்ந்து சீர்காழி, சிதம்பரம் ,சென்னை, பெங்களூர், கோவை, கும்பகோணம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நாட்டிய நிகழ்வு களை நடத்தினர். திரளான பக்தர்கள் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி கண்டு ரசித்தனர்.

    • மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன்.
    • மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன.

    திருவாரூர்:

    மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில், சிவனை வழிபட்டால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதைத்தொடர்ந்து, திருவாரூரில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றன.

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில், விடங்கர், மூலவர் வன்மீகநாதர், அசலேஸ்வரர், விஸ்வகர்மேஸ்வரர், இந்திரன் பூஜீத்த லிங்கம், கமலாம்பாள், சப்தமாதர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷகமும், தீபாரதனையும் நடைப்பெற்றன.

    பிரதோஷம் முடித்தவுடன் முதல் கால பூஜைகள் நடந்தேறின.

    பின்னர், இரவு 11 மணியளவில் 2 ஆம் கால பூஜையும் நடைபெற்றன.

    மேலும், கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீகமல முனி சித்தர் லிங்கத்துக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    திருவாரூர் பகுதியில் உள்ள அனைத்து சிவத்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    ×