search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PS Mithran"

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.15 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #KalyaniPriyadharsan
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

    அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி தமிழில் அறிமுகமாகிறார் என்று படக்குழு நேற்று அறிவித்தது.


    கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் `ரா' கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் `வான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 15 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ஒருவரின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran
    ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்போது `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.



    அதேநேரத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படப்பிடிப்பிலும் விரைவில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் கல்யாணி நடிப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கல்யாணி பிரியதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் `ரா' கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் `வான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 15 படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran
    சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் பிசியாக நடித்து வருகிறார், இதில் ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தை கோடையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாதியில் நிற்கும் ரவிக்குமாரின் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தை சிவகார்த்திகேயன் விரைவில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - பி.எஸ்.மித்ரன் இணையும் எஸ்.கே.15 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது பாதியில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran

    அடங்கமறு படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KarthickThangavel #PrincePictures
    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான அடங்கமறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ஜெயம் ரவி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் தொல்லையை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது.

    முன்னதாக சென்னையில் நேற்று அடங்கமறு படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியானது. கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவ் படத்தை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இந்த இரு படங்களில் ஒரு படத்தில் சூர்யா அல்லது கார்த்தி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படம் தவிர்ந்து பி.எஸ்.மித்ரன் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarthickThangavel #PrincePictures #PSMithran

    சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நிறுவனம் இணைந்துள்ளது. #SK15 #Sivakarthikeyan
    `சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் முன்னதாக கூறியிருந்தோம்.

    தற்போது இந்த படத்திற்கு கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இதை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

    கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘ஐரா’ படத்தையும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் இணை தயாரிப்பையும் செய்து வருகிறார்கள்.



    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படம் சமூகத்திற்கு தேவையான அரசியல் திரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் எஸ்.கே 15 படத்தில் அர்ஜுன், யுவன் ஷங்கர் ராஜா என இரும்புத்திரை படத்தில் பணியாற்றிய பலரும் இணைந்துள்ளனர். #SK15 #Sivakarthikeyan #PSMithran
    `சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தின் மூலம் இரும்புத்திரை கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது.

    `இரும்புத்திரை' படத்தில் சமூக கருத்தை முன்வைத்த மித்ரன், இந்த படத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran

    ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sivakarthikeyan #PSMithran
    `சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் முன்னதாக கூறியிருந்தோம்.



    இந்த தகவலை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவன உரிமையாளர் ஆர்.டி.ராஜா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    `24 ஏ.எம்.ஸ்டூடியோஸின் புரொடக்‌ஷன்ஸ் எண் 7-வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி. மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். பி.எஸ்.மித்ரனும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    `இரும்புத்திரை' படத்தில் சமூக கருத்தை முன்வைத்த மித்ரன், சமூகத்திற்கு தேவையான அரசியல் த்ரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran

    ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sivakarthikeyan #PSMithran
    விஷாலின் `இரும்புத்திரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பி.எஸ்.மித்ரன், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார்.

    இந்த நிலையில், பி.எஸ்.மித்ரனின் அடுத்த படத்தில் உதயநிதி நடிப்பதாகவும், அடுத்து கார்த்தி நடிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மித்ரன், அதை மறுத்தார். இந்த நிலையில், மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதிரடி, ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    சிவகார்த்திகேயன் நடிப்பில் `சீமராஜா' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #SK15 #Sivakarthikeyan #PSMithran

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு மித்ரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #PSMithran #Irumbuthiurai
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் இரும்புத்திரை. சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    இந்த நிலையில், பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் குறித்து சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின. பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக கார்த்தியுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. 



    முன்னதாக, மித்ரன் உதயநிதியுடன் இணையவிருப்பதாக தகவலட வெளியாகி இருந்தது. இவ்வாறு அடுத்தடுத்து தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மித்ரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

    அதில், இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தான் எனது முதல் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன். உடனடியாக எனது அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறார். #PSMithran #Irumbuthiurai

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - அர்ஜுன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் விமர்சனம்.
    ராணுவத்தில் உயரிய பொறுப்பில் இருகிறார் நாயகன் விஷால். கிராமத்தில் வசிக்கும் தன் அப்பா டெல்லி கணேஷ், அம்மா, தங்கை என யாரிடமும் அதிக தொடர்பு இல்லாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    டெல்லி கணேஷ் ஊர் முழுவதும் கடன் வாங்கி பல செலவுகள் செய்கிறார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான விஷாலின் அம்மா உயிரிழக்கிறார். 

    இதற்கிடையே சென்னையில் விஷால் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் உள்ளவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துவிடுகிறார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து மனைவி மட்டும் மகளிடம் பணம் கேட்பது போல் தவறாக நடந்துக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் விஷால் அவர்கள் மீது கோபப்பட்டு அடித்து விடுகிறார்.



    இது போலீஸ் நிலையம் வரை சென்று விஷாலின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விஷாலின் உயரதிகாரி, மன அழுத்தம் சரியாக இருக்கிறதா அறிந்துக் கொண்டு சான்றிதழ் பெற்று வரும் படி அனுப்புகிறார்.

    அதன்படி மருத்துவர் சமந்தாவை சந்திக்க செல்கிறார் விஷால். சமந்தாவோ உங்கள் குடும்பம் மீது அக்கறை காட்டுங்கள். அவர்களுடன் பழகுகள் என்று அறிவுரை கூறி அனுப்ப, கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். 

    அங்கு தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக தன் அம்மாவின் சொத்தை விற்று 4 லட்சம் ஏற்பாடு செய்கிறார். மீதமுள்ள 6 லட்சத்திற்கு வங்கி சென்று கடன் வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், ராணுவ வீரர் என்பதால் கடன் கொடுக்க மறுத்து விடுகிறார்கள். 



    பின்னர், புரோக்கர் மூலமாக போலி ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார் விஷால். சொத்தை விற்று 4 லட்சம், லோன் 6 லட்சம் ஆக 10 லட்சம் பணத்தை வங்கி வைத்திருக்கிறார். ஆனால் திடீரென 10 லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதிர்ச்சியடையும் விஷால், எப்படி காணாமல் போனது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதுபோல் பலருடைய வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது என்பதை தெரிந்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று கண்டறிகிறார்.

    இறுதியில் அர்ஜுனை விஷால் எப்படி நெருங்கினார்? பணம் எப்படி காணாமல் போகிறது? பணம் அவருக்கு திரும்ப கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகன் விஷால், அவருக்கே உரிய பாணியில் திறமையாக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், பணம் பறிபோன பிறகு, கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.



    நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. துறுதுறுவென ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. மாடர்ன் வில்லனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

    வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ அசைக்க முடியாது. 

    ×