search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priya Bhavani Shankar"

    • தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர்.
    • தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், யானை, மாபியா, ஓமணப்பெண்ணே, மான்ஸ்டர், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களையும் பகிர்ந்து வந்தார்.

    இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சென்னையில் தற்போது புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு மாலைபொழுதை கழித்தோம். அதன்படி இப்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். தனது நெற்றியில் காதலர் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவருக்கு வலைத்தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டு வருகின்றன.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

    அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.



    திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள்.
    நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். சமூக கருத்துகளையும் பதிவிடுகிறார்கள். ஆனால் சமீப காலமாக வலைத்தளத்தில் நடிகைகள் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன.

    அதில் குறிப்பிட்ட நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள்.

    இதனால் நடிகைகள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும் அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இப்போது நடிகை பிரியா பவானி சங்கரும் போலி கணக்கு கும்பல் பிடியில் சிக்கி உள்ளார்.



    அவர் பெயரில் டுவிட்டரில் நிறைய போலி கணக்குகளை தொடங்கி உள்ளனர். ஒரு போலி கணக்கில் இருந்து மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு பதில் அளித்துள்ள பிரியா பவானி சங்கர், “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வத்தை என்னால் புரிய முடிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதை உங்கள் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பிரியா பவானி சங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா பவானி சங்கர் பெயரில் முளைத்திருக்கும் போலி ட்விட்டர் கணக்கால் அவர் கோபமடைந்து உள்ளார்.
    `மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக இவர் நடித்த `மான்ஸ்டர்' படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் செயல்படும் போலி கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது.



    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர், அந்த ட்விட்டை குறிப்பிட்டு “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.


    சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் நடிகர், நடிகைகளின் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும், அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் விமர்சனம்.
    இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். 

    இந்த நிலையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஏதோ காரணத்தால் பெண்ணை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்களோ என்று நினைத்து வீடு ஒன்றை வாங்க முடிவு செய்கிறார். இப்படி இருக்க பிரியா பவானி சங்கரிடம் இருந்து போன் வர சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிடுகிறார்.



    பின்னர் அந்த வீட்டில் தங்கும் அவருக்கு எலி ஒன்று பெரும் தொல்லை கொடுக்கிறது. வீட்டில் எது வாங்கி வைத்தாலும் அதனை கடித்து துண்டு துண்டாக்கி தொல்லை கொடுக்கிறது. தினமும் இந்த நிலையே தொடர அதனை கொல்ல விருப்பமில்லாமல், அதை எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிட எண்ணுகிறார்.

    இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.



    கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.

    எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். எலியால் படும் தொல்லைகள், எலிலை கொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம். பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. பெரிதாக காமெடி செய்யவில்லை.



    ஒரு நாள் கூத்து படத்தில் யதார்த்தமான வாழ்க்கை முறையை படமாக்கிய நெல்சன் வெங்கடேசன், இந்த படத்தில் எலியால் ஏற்படும் தொல்லைகளை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஒட்டாமல் இருப்பது போல தோன்றுகிறது. பெரும்பாலான இடங்களில் எலியை கிராபிக்ஸ் மூலம் காட்டி இருக்கிறார்கள். எலியே பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த உலகில் வாழும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.

    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.

    மொத்தத்தில் `மான்ஸ்டர்' சுவாரஸ்யம் குறைவு.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.
    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி. சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம் `மான்ஸ்டர்'.

    எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - கோகுல் பினோய், இசை - ஐஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை இயக்கம் - சிவ சங்கர், இணை எழுத்து - சங்கர் தாஸ், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - சந்தோஷ், பாடல்கள் - யுகபாரதி, கார்த்திக் நேத்தா, சங்கர் தாஸ், தயாரிப்பு மேற்பார்வை - டி.நிர்மல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் - டி.பி.சசிகுமார், ஒலி வடிவமைப்பு - சின்க் சினிமாஸ், ஒலிக்கலவை - கண்ணன் கண்பத், ஆடை வடிவமைப்பு - பி.செல்வம், ஒப்பனை - ஏ.ஜி.மொய்தின், எழுத்து, இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,

    குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

    சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

    `மான்ஸ்டர்' வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    மான்ஸ்டர் டீசர்:

    ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா அஜித் ரசிகராக நடிப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். #KuruthiAttam #Atharvaa
    அதர்வா நடிப்பில் அடுத்ததாக பூமராங் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதில் அஜித்குமார் மீது அன்பு கொண்ட தீவிர ரசிகராக அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:-



    ‘‘ஒரு உச்ச நடிகரின் ரசிகரை பிரதான கதாபாத்திரமாக வைத்து, இதற்கு முன்பு சில படங்கள் வந்துள்ளன. இந்த படத்தின் நாயகன் அஜித்குமார் ரசிகராக வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தை அதர்வாவிடம் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    கதைப்படி, அதர்வா கபடி வீரர். அஜித்குமாரின் தீவிர ரசிகர். அவர் ஆடுகிற ஆட்டம்தான், குருதி ஆட்டம். கதாநாயகி பிரியா பவனி சங்கரின் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. த.முருகானந்தம் தயாரிக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும்.’’ என்றார். #KuruthiAttam #Atharvaa #PriyaBhavaniShankar #AjithKumar

    மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #PriyaBhavaniShankar
    சின்னத்திரையில் பிரபலமான பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படம் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக கவனம் பெற்ற இவர், கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். இவரது நடிப்பில் மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    மேலும் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.



    ரா.கார்த்திக் இயக்க இருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
    நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் நெல்சன் பேசும்போது, குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படமென்பதால் குடும்பம் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படம் இருக்கும்.

    நாயகன் தேர்வில் எந்த யோசனையுமின்றி எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி பிரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கருணாகரன் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar

    மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக இணைய தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #PriyaBhavaniShankar #Bharath #WebSeries
    பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    அந்தப் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது, அவர் கைவசம் எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.



    இந்த நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரத்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். #PriyaBhavaniShankar #Bharath #WebSeries

    மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். #PriyaBhavaniShankar
    டி.வி.யி லிருந்து மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா பவானிசங்கர். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சமீபத்தில் அவர் நடித்திருந்தார்.

    சினிமாவுக்கு வரும் முன்னரே ரசிகர்களை சம்பாதித்த பிரியாவுக்கு சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அதிகம். ரசிகர்களை போலவே பிரியா பெயரில் இயங்கும் போலி ட்விட்டர், முகநூல் பக்கங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கவே சுதாரித்துக் கொண்ட பிரியா இதற்கு முடிவுகட்ட களத்தில் இறங்கினார்.



    இதற்காக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது உண்மையான டுவிட்டர் கணக்கு எது என தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். 
    மேயாத மான் படம் மூலம் புகழ் பெற்ற பிரியா பவானி சங்கர் அடுத்ததாக ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Monster
    இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து இறவாக்காலம், சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

    மேலும் அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அடுத்ததாக ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.



    இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    ×