search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monster"

    • மோகன்லால் தற்போது வைசாக் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.


    மான்ஸ்டர்

    மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


    மான்ஸ்டர்

    வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    மான்ஸ்டர்

    அதாவது, படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் படக்குழு சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் தணிக்கை குழு கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மோகன்லால் தற்போது வைசாக் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
    • மான்ஸ்டர் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

     

    மான்ஸ்டர்

    மான்ஸ்டர்

    இந்நிலையில் மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    மான்ஸ்டர்

    மான்ஸ்டர்

    வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் உடனடியாக இந்த பணிகளை முடிப்பது சிரமம் என்பதால் மான்ஸ்டர் இந்தியாவில் வெளியாகும் அதேநாளில் வளைகுடா நாடுகளில் வெளியாகாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

    ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா பேசிய எஸ்.ஜே.சூர்யா, என்னை எலி மாமா என்று அழைக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்நிலையில், ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன்.

    அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.



    இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்றார்.


    பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் - அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார்.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மான்ஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எலியை மையமாக கொண்ட படம் என்பதால் குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கின்றனர். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ’உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்புக்கு 50 ரூபாய் கொடுத்து வேடிக்கை பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் பாலைவனமாகத் தெரிகிறது. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு எனக்கு நிறைவேறியிருக்கிறது.



    இந்தப் புது பயணம் தொடரும். என் படத்துக்குக் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதைத் தவறவிட்டோமே என்று குற்ற உணர்வு வருகிறது. எலியால் தொடங்கிய இந்தப் பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

    அஜித் விஜய் இருவரையும் இயக்கியுள்ளீர்கள் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாகச் செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி. இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது, ஆனால், அரசியலுக்கு வருவதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் விமர்சனம்.
    இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். 

    இந்த நிலையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஏதோ காரணத்தால் பெண்ணை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்களோ என்று நினைத்து வீடு ஒன்றை வாங்க முடிவு செய்கிறார். இப்படி இருக்க பிரியா பவானி சங்கரிடம் இருந்து போன் வர சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிடுகிறார்.



    பின்னர் அந்த வீட்டில் தங்கும் அவருக்கு எலி ஒன்று பெரும் தொல்லை கொடுக்கிறது. வீட்டில் எது வாங்கி வைத்தாலும் அதனை கடித்து துண்டு துண்டாக்கி தொல்லை கொடுக்கிறது. தினமும் இந்த நிலையே தொடர அதனை கொல்ல விருப்பமில்லாமல், அதை எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிட எண்ணுகிறார்.

    இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.



    கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.

    எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். எலியால் படும் தொல்லைகள், எலிலை கொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம். பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. பெரிதாக காமெடி செய்யவில்லை.



    ஒரு நாள் கூத்து படத்தில் யதார்த்தமான வாழ்க்கை முறையை படமாக்கிய நெல்சன் வெங்கடேசன், இந்த படத்தில் எலியால் ஏற்படும் தொல்லைகளை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஒட்டாமல் இருப்பது போல தோன்றுகிறது. பெரும்பாலான இடங்களில் எலியை கிராபிக்ஸ் மூலம் காட்டி இருக்கிறார்கள். எலியே பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த உலகில் வாழும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.

    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.

    மொத்தத்தில் `மான்ஸ்டர்' சுவாரஸ்யம் குறைவு.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் முன்னோட்டம்.
    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி. சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம் `மான்ஸ்டர்'.

    எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - கோகுல் பினோய், இசை - ஐஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை இயக்கம் - சிவ சங்கர், இணை எழுத்து - சங்கர் தாஸ், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - சந்தோஷ், பாடல்கள் - யுகபாரதி, கார்த்திக் நேத்தா, சங்கர் தாஸ், தயாரிப்பு மேற்பார்வை - டி.நிர்மல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் - டி.பி.சசிகுமார், ஒலி வடிவமைப்பு - சின்க் சினிமாஸ், ஒலிக்கலவை - கண்ணன் கண்பத், ஆடை வடிவமைப்பு - பி.செல்வம், ஒப்பனை - ஏ.ஜி.மொய்தின், எழுத்து, இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,

    குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

    சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறுவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

    `மான்ஸ்டர்' வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    மான்ஸ்டர் டீசர்:

    மான்ஸ்டர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். #SJSuryah
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் இவருக்கு பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில், ‘மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்கள் வந்தால் மட்டும்தான் வில்லனாக நடிப்பேன். எல்லா படங்களிலும் ஒரே மாதிரி நடிக்க விரும்பவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட வில்லன் வேடங்களை தவிர்த்து இருக்கிறேன். பணத்துக்காக நடிக்கவில்லை. மன திருப்திக்காக நடிக்கிறேன்.



    குஷி 2, வாலி 2 படங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, பார்ட் 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் மான்ஸ்டர் படத்தின் கதையை கேட்டு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிரித்திருக்கிறார்.
    எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் மான்ஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி:

    எலியுடன் போராட்டம் தான் கதையா?

    ஆமாம். ஆனால் இதில் எலி எலியாக தான் இருக்கும். மனிதர்கள் போன்ற குறும்புகளை செய்யாது. எலியை மையப்படுத்திய கதை என்றாலும் கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல் நிஜ எலியை நடிக்க வைத்தே எடுத்தோம். நெல்சன் கதை சொல்ல தொடங்கும்போதே நீங்களும் எலியும் என்றுதான் தொடங்கினார். என் வேடத்தின் பெயர் அஞ்சனம் அழகிய பிள்ளை என்றார். அது எனக்கு பிடித்து இருந்தது. வள்ளலார் பக்தராக ஈ, எறும்புக்கும் பாவம் நினைக்காத ஒரு பொறியாளர். அவனது காதலுக்கு எலி எப்படி வில்லனாகிறது என்பதே படம்.

    உங்களுடன் நடிக்க பயந்ததாக பிரியா பவானி சங்கர் சொன்னாரே?

    அது சுவாரசியத்துக்காக சொன்னது. அவர் மாணவியாக இருந்தபோது என் படங்களை பார்த்திருக்கிறார். எனவே அந்த எண்ணத்திலேயே கூட யோசித்து இருக்கலாம். குடும்பத்து குத்துவிளக்காக நடிக்கும் நாம் எஸ்.ஜே.சூர்யா படத்தில் எப்படி நடிப்பது என்று தயங்கி இருக்கலாம். சிம்ரன், நிலாவுக்கு பிறகு எனக்கு பொருத்தமான ஜோடியாக அமைந்துள்ளார்.



    அமிதாப் பச்சனுக்கு மான்ஸ்டர் கதை தெரியுமா?

    தெரியும். பட ரிலீஸ் தேதி உறுதியானதும் கூறினேன். படத்தின் கதையை கேட்டு நன்றாக சிரித்தார்.

    உங்கள் படங்கள் ரிலீஸ் சிக்கலில் சிக்குகிறதே?

    ஆமாம். மான்ஸ்டர் வந்த பிறகு அவை எல்லாம் பிரச்சினைகள் முடிந்து வெளியில் வந்துவிடும்.

    பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் முதல் யு சான்றிதழ் பெற்ற ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #SJSuryah
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    இவ்விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். கதை சொல்லவந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.

    குழந்தைகளுக்கும்... செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.



    சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

    எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
    மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியா பவானி ஷங்கர், இந்த படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன் என்று கூறியிருக்கிறார். #Monster #PriyaBhavaniShankar
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.



    விழாவில் பிரியா பவானி சங்கர் பேசும்போது,

    இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். சங்கர் கூறியதுபோல் என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.
    நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் நெல்சன் பேசும்போது, குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படமென்பதால் குடும்பம் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படம் இருக்கும்.

    நாயகன் தேர்வில் எந்த யோசனையுமின்றி எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி பிரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கருணாகரன் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar

    மேயாத மான் படம் மூலம் புகழ் பெற்ற பிரியா பவானி சங்கர் அடுத்ததாக ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Monster
    இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து இறவாக்காலம், சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

    மேலும் அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அடுத்ததாக ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.



    இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    ×