search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "praise"

    • உண்மையை உரக்க சொன்னதற்காக அவரை மக்கள் பாராட்ட வேண்டும்
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை

    மதுரை பெத்தானியா புரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன் தலைமையில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், மாநகர் மாவட்ட செய லா ளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசிய தாவது:-

    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. இதனால்தான் இப்போது புதிதாக லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஆர்வத்துடன் இணைத்து வருகிறார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது வேற பேச்சு.

    ரஜினிகாந்த் படம் போல் மீசை வச்ச ரஜினி, மீசை இல்லாத ரஜினி என்பது போல் தி.மு.க. செயல்படும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசு வார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது அப்படியே மாறிவிடுவார்கள். முதல்வருக்கு உழைப்பவர் களின் கஷ்டம் தெரியுமா? நோகாமல் முதலமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவருக்கு தொழிலாளு ருடைய வலி எப்படி தெரியும்?

    12 மணி நேர வேலை சட்ட மசோதாவை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்.தி.மு.க. கூட்டணி கட்சிகளே இந்த சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பிறகு அதனை வாபஸ் வாங்கியுள்ளார். நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லிய முதல்வர் இப்போது வாபஸ் பெற்று விட்டதாக கூறியுள்ளார்.

    உழைக்கும் தொழி லாளர் களை ஏமாற்று வதற்காக சிவப்பு சட்டை அணிந்து மே தின கூட்டத்திற்கு வருகிறார். தொழி லாளர் களுக்கு எதுவும் செய்யாமல் கம்யூனிஸ்டுகள் தி.மு.க. வுடன் ஒட்டிக்கொள் கிறார்கள். எதற்கு? எல்லாம் பணத்திற்காகதான். கடந்த தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் பெற்றவர்கள், அடுத்த முறை 50 கோடி ரூபாய் எதிர் பார்த்து தான் தி.மு.க.விடம் அடிபணிந்து சேவகம் செய்கிறார்கள்.

    பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் பேசிய ஊழல் ஆடியோ தான் தற்போது ஹைலைட்டாக உள்ளது.உதயநிதியும்,சபரீசனும் 31ஆயிரம் கோடி ரூபாய் குவித்துள்ளதாக நம்ம நிதியமைச்சர் தெளிவாக பேசியுள்ளார். அவர் மதுரைக்காரர், வீரமானவர், உண்மையை உரக்க சொன்ன நிதி அமைச்சர் தியாக ராஜனை மக்கள் பாராட்ட வேண்டும்.

    மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் கட்டப்பட்டு ள்ளது. வேறெதுவும் மதுரைக்கு செய்ய வில்லை. எந்த திட்டங்களும் கொண்டுவர வில்லை. தி.மு.க. வெட்டக் கூடிய ரிப்பன் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களில் செயல் படுத்தப்பட்டது தான்.

    கோவைக்கு, சிறப்பு நிதி ஒதுக்கிய நிதி அமைச்சர் நம்ம மதுரைக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று தெரிய வில்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஏக்கம் தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவை பாட்டாளி தொழிலாளர் வர்க்கம் வீட்டுக்கு அனுப்பும் பணியை நிச்சயம் செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், அண்ணாதுரை, பரவை ராஜா, அண்ணாநகர் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், மல்லன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு.
    • மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார்.

    விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற பிரித்திப்ராஜ், பீர்ஆரிஸ், நவீனா, துர்க்காதேவி, அன்பரசி, கனிகாஸ்ரீ, பவீனா, தீபதர்ஷினி ஆகிய 8 மாணவ- மாணவிகளுக்கும், மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற புத்தக திருவிழா கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப் பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பட்டதாரி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.

    • கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது.
    • கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளை யாடினார்கள்

    கடலூர்:

    கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது. இதில்   கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராமிடம் சாதனை படைத்த மாணவர்கள் நேரில் சென்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை காண்பித்தனர்.

    அப்போது அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். அப்போது பயிற்சியாளர்கள் தேவதாஸ், வெற்றிச் செல்வன், பாரதிராஜா மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.

    • கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.
    • புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே. ஜே. நகர் பகுதியில் வசித்து வருபவர் பானுமதி. இவர் கணவர் காந்தி. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பானுமதியின் கணவரின் பூர்வீக இடமான 8 சென்ட் வீட்டுமனையை, வேறொரு நபர் பட்டா மாறுதல் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பூர்வீக இடத்தை மீட்டு தர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பானுமதி அவருடைய மகள் பாக்கியலட்சுமி மற்றும் 2 பேத்திகளுடன் விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து முறையிட்டார்  புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், புகார் அளிக்க வந்த அப்பெண்மணியின் ஆதரவற்ற ஏழ்மை நிலையை கண்டு மனம் கலங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், அக்குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், பானுமதி அவருடைய மகள் மற்றும் 2 பேத்திகளுக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்து, 2 பேத்திகளையும் பள்ளியில் சேர்த்து நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் எனவும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என உறுதி அளித்தார். மேலும், ஒரு ஆட்டோவை வரவழைத்து அக்குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். புகார் அளிக்க வந்த பெண்மணியின் ஆதரவற்ற வறுமை நிலையை கண்டு உடனடியாக உணர்ந்து, அரிசி மற்றும் மளிகை பொருட்கள், ஆடைகள் வாங்கித் தந்து ஆட்டோவில் வழியனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

    • நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
    • எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆ.ராசா எம்.பி வழங்கினார்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு சிவன்புரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காமிராக்கள் இயக்கம், ரூ.25 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஒருங்கிணைந்த சமுதாய கூடம் அமைக்கும் பணியை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.தொடர்ந்து 13 வது வார்டு புருசோத்தமன் நகரில் பசுமைப்பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்ட பணிகளையும் , நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்று கொண்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்பவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.கொரோனா காலத்தில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி என சொல்லாததையும் நிறை வேற்றியுள்ளார்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்க வேண்டும் என்பதற்காக பல கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட அவைத்தலைவர் புரு ஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், காரமடை நகரக்கழகச் செயலாளர் வெங்கடேஷ், 2-வது வார்டு உறுப்பினர் குருபி ரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே காரமடை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் நீலகிரி எம்.பி. ஆ.ராசா குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    • இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தொிவித்தனர்.

    இது குறித்த விசாரணைக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டதை அடுத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா மற்றும் உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் துணை தலைவர் சாந்தா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி கணக்கு, வழக்குகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் செல்லதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மூக்கனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 108 தேங்காய் உடைத்தனர். பின்னர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

    • பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஆணையாளர் ராமமூர்த்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வேட்டையன் தலைமை தாங்கி பேசும்போது, தமிழகத்தில் ஏழை பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. ஆட்சி வந்த 2 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    நிலையூர் முருகன் (அ.தி.மு.க.): ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணைப்புகளில் தற்போது வரை தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் பல இடங்களில் அவை தரம்இன்றி பழுதாக உள்ளது.

    தென்பழஞ்சி சுரேஷ் (தி.மு.க.): கிராமப் பகுதிகளில் சேரும் குப்பைகள் கண்மாய்களிலும் பொது இடங்களிலும் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மதுரை மாநகராட்சி வெள்ளக்கல் பகுதியில் குப்பைகளை சேகரிப்பது போல திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் சேரும் குப்பைகளை ஒரே இடத்தில் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆணையாளர் ராமமூர்த்தி பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    • தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் மூலிகை செடி வளர்த்த மாணவர்களை பாராட்டினர்.
    • பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு பள்ளி முழுவதும் பசுமையாக உள்ளது. அதே போல மாணவ, மாணவிகளும் தங்களது வீட்டுத்தோட்டங்கள் மற்றும் மாடித்தோட்டங்களில் மூலிகை செடிகளை வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.

    பலர் ஆர்வத்துடன் செடிகளை வீடுகளில் வளர்த்து வந்தனர். அதன்படி தாங்கள் வளர்த்த செடிகளை பள்ளிக்கு கொண்டுவந்த மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார். வகுப்பு தொடங்கும் முன்பு கடவுள் வாழ்த்து சமயத்தில் செடிகளை நன்கு வளர்த்த மாணவ, மாணவிகளை ஆசிரியைகள் சுபஸ்ரீ, புஷ்பா, அம்சத் ராணி, ரம்யா ஆகியோர் பாராட்டினர்.

    • ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளான ரேனுகா தங்க பதக்கம், தமிழ் அழகி வெள்ளி பதக்கம், பிரீத்தி வெள்ளி பதக்கம், அனிதா வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். மேலும், மாணவர்கள் ரிஃபாயின் கபூர் தங்க பதக்கம், சந்தோஷ் வெள்ளி பதக்கம், சூர்யா வெண்கலம் பதக்கம், ஜீவா வெண்கலம் பதக்கம், ஹரிஹரனன் வெண்கலம் பதக்கம், சஞ்சய் குமார் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர்.

    பயிற்சியாளர் கிருஷ் ரத்தன் தலைமையில் சென்றனர். இவர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலர் ஜெயேந்திரன் வாழ்த்து கூறினர்.

    • இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.
    • மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் சிறந்த குப்பை மேலாண்மை செய்யும் வணிக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமையில் நடைபெற்றது.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சான்று வழங்கி பேசும்போது, நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கபடும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பையிலிருந்து செல்வம் என்ற திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.

    துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் நகரை தூய்மை நகராக பராமரிக்க முடியும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

    நுண்ணுரம் தயாரிப்பு பணியை செய்துவரும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கான பாராட்டு சான்றினை செயலாளர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ஆதேஸ் தலைமையில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர்கள், வீரையன், ஈ ஸ்வரன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் அம்பிகா, சுகாதார பணியாளர்கள், கலந்து க்கொண்டனர்.

    • 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
    • 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.

    இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென் மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.
    • இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான ஜோதி மணி (60), சங்கரபாண்டியன் (65)இருவரும் எம்.டி.ஆர்.நகர் 2-வது தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த 18.7.22 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

    இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத் தலைமையில் சிறப்பு படை நியமிக்கப்பட்டு இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    சம்பவம் நடந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த கொலை வழக்கில் ஜோதி புரம் 7-வது தெருவில் வசிக்கும் தனியார் மில் ஊழியர் சங்கர் (42), அவரது மனைவி பொன்மணி (35) ஆகியோரை கைது செய்தனர்.

    ஆசிரியர் தம்பதிகளை சங்கர் பணத்திற்காக கொலை செய்தார். இதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத், காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் மற்றும் காவலர்களை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    ×