என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police investigating"
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது30). பிரபல ரவுடியான இவர் மீது கேரளாவில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் இவரது தலைமையில் ரவுடி கும்பல் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
அருண்குமார் தலைமையிலான ரவுடி கும்பலுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. பல தடவை இரு கும்பல்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த நிலையில் அருண்குமார் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர் கோஷ்டியினர் பயங்கர ஆயுதங்களுடன் அருண்குமாரின் வீட்டிற்குள் புகுந்தனர்.
அவர்கள் நேராக அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியான அருண்குமார் என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த வெடிகுண்டுகளை எடுத்து கொண்டு வெளியில் வந்து எதிர் கோஷ்டியினர் மீது வீச முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு அருண்குமாரின் கையில் இருந்தபோதே வெடித்து விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் அலெக்ஸ் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
வெடிகுண்டு வெடித்ததால் பயந்து போன மற்றொரு ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய அலெக்சை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடிக்கு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது, என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது30). போர்வெல் ஆபரேட்டராக உள்ளார்.
இவரது மனைவி கலைவாணி (27) தனியார் ஆலையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கலைவாணி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதனால் அடிக்கடி கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தறராறு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீசார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது கலைவாணி சேலையில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
கலைவாணியின் சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது கணவரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கலைவாணி வேலைக்கு செல்லும் இடத்தில் வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததால் கண்டித்ததாகவும், ஆனாலும் கேட்காததால் ஆத்திரத்தில் அழகர்சாமி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அழகர்சாமியை பாலமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகள்களும் ஹரிஹர தீபன் (6) என்ற மகனும் உள்ளனர்.
ஹரிஹரதீபன் தனியார் பள்ளியின் 2-ம் வகுப்பு படித்து வந்தான். வித்யா 100 நாள் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய வித்யா தனது மகள்கள் மட்டும் இருந்ததைப் பார்த்து மகனை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
அடிக்கடி வித்யாவின் அக்கா மகன் ராஜேஷ்குமார், உறவினர் பிரியதர்ஷிணி ஆகியோர் வீடுகளுக்கு ஹரிஹரதீபன் விளையாடச் செல்வது வழக்கம் எனவே அவர்களது வீட்டுக்கு சென்று வித்யா தேடிப்பார்த்தார். அங்கும் அவனை காணவில்லை.
எதேச்சையாக பிரியதர்ஷிணியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஹரிஹர தீபன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான் இதை பார்த்ததும் அலறி துடித்த வித்யா அவனை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.
இதனையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 3 மகள்கள் இருந்தபோதும் ஆண் வாரிசுக்காக 4-வதாக ஹரிஹரதீபனை பெற்றெடுத்து ஆசையாக வளர்த்து வந்தனர். ராமகிருஷ்ணன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த போதிலும் வசதியாகவே இருந்து வந்துள்ளார். இவர்களது பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக உறவினர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
மேலும் ராமகிருஷ்ணன் வளர்ச்சியிலும் அவர்கள் பொறாமைபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது உறவினரான அஜய்குமார் (19) என்பவர்தான் கொலை செய்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. எனவே அவரிடம் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அஜய்குமார் தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த கொலை நரபலியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது உறவினர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தில் தான் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளியின் 9 வயது மகன் கோல்டன் நகரில் உள்ள பாரத் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல மாணவன் தயாரானான். அப்போது அவனின் இரு கைகளிலும் தீக்காயம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர். உடனடியாக அவனிடம் விவரம் கேட்டனர்.
அப்போது அவன், பள்ளி ஆசிரியை தன்னை மெழுகுவர்த்தியால் சூடுவைத்ததாக பெற்றோரிடம் கூறினான். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர் தனது மகனுடன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்து புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பள்ளியில் 4-ம் வகுப்பு ஆசிரியையாக உள்ள ரம்யா(வயது 22) அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் மாணவன், வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் நோட்டுகளை வாங்கி பார்த்த ரம்யா, கோபத்தில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து, உருகிய மெழுகை மாணவனின் கைகளில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார், ஆசிரியை ரம்யா மீது சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். ரம்யா அந்த பள்ளி தாளாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சூடுவைத்ததால் காயம் அடைந்த மாணவனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
பெருங்குடி, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்ய சென்ற போது தி.நகரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அடிக்கடி அவரது வீட்டுக்கு பொருட்கள் கொடுக்க சென்றதால் ஹரிக்கும், அந்த பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த பெண்ணின் கணவர், மனைவியையும், ஹரியையும் கண்டித்தார்.
இந்த நிலையில் ஹரியை மர்ம கும்பல் ஆட்டோவில் செங்கல்பட்டு அருகே கடத்தி சென்றனர். பழவேலி அருகே சென்றபோது ஹரியை அவர்கள் அரிவாளால் வெட்டினர்.
பலத்த காயம் அடைந்த ஹரி அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அந்த நேரத்தில் ரோந்து வந்த போலீசார் அவரை மீட்டனர்.
மேலும் ஒருவரை கைது செய்தனர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பலத்த காயம் அடைந்த ஹரி சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை எல்லையான குளாம் தக்கா என்ற இடத்தில் பாஷா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
அங்குள்ள மரத்தின் அடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து எலவனாசூர் கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்த்தனர்.
அவரது உடல் முழுவதும் எரிக்கப்பட்டு, அழுகியநிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. யாரோ மர்ம மனிதர்கள் இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடல் மீது மண் எண்ணை ஊற்றி எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள கோச்சாங் என்ற கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர், பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 19-ந் தேதி இதுதொடர்பாக சாலையில் விழிப்புணர்வு நாடகம் ஒன்றை அவர்கள் நடத்தினர். இந்த நாடகத்தில் 5 இளம் பெண்களும் பங்கேற்று நடித்தனர். அவர்களில் ஒரு இளம் பெண் சமீபத்தில் திருமணமானவர் என தெரிகிறது.
நாடகம் நடந்துகொண்டிருந்த போது, அங்கு துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் 5 இளம் பெண்களையும் கடத்திச் சென்றது. பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்ற அந்த கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 இளம் பெண்களையும் கற்பழித்தது.
மேலும், அதனை செல்போனில் வீடியோ எடுத்த மர்ம கும்பல், இதுபற்றி போலீசிடம் புகார் அளித்தால் வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தது.
சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு அந்த பெண்களை மர்ம கும்பல் விடுவித்தது. அதன் பின்னர் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பிய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எடுத்துக்கூறினர்.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து அந்த மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்