என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்டில் துப்பாக்கிமுனையில் 5 இளம்பெண்கள் கற்பழிப்பு
Byமாலை மலர்23 Jun 2018 3:02 AM GMT (Updated: 23 Jun 2018 3:02 AM GMT)
ஜார்கண்ட் மாநிலம் கோச்சாங் கிராமத்தில் மர்ம கும்பல் ஒன்று 5 இளம்பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி கற்பழித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள கோச்சாங் என்ற கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர், பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 19-ந் தேதி இதுதொடர்பாக சாலையில் விழிப்புணர்வு நாடகம் ஒன்றை அவர்கள் நடத்தினர். இந்த நாடகத்தில் 5 இளம் பெண்களும் பங்கேற்று நடித்தனர். அவர்களில் ஒரு இளம் பெண் சமீபத்தில் திருமணமானவர் என தெரிகிறது.
நாடகம் நடந்துகொண்டிருந்த போது, அங்கு துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் 5 இளம் பெண்களையும் கடத்திச் சென்றது. பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்ற அந்த கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 இளம் பெண்களையும் கற்பழித்தது.
மேலும், அதனை செல்போனில் வீடியோ எடுத்த மர்ம கும்பல், இதுபற்றி போலீசிடம் புகார் அளித்தால் வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தது.
சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு அந்த பெண்களை மர்ம கும்பல் விடுவித்தது. அதன் பின்னர் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பிய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எடுத்துக்கூறினர்.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து அந்த மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள கோச்சாங் என்ற கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர், பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 19-ந் தேதி இதுதொடர்பாக சாலையில் விழிப்புணர்வு நாடகம் ஒன்றை அவர்கள் நடத்தினர். இந்த நாடகத்தில் 5 இளம் பெண்களும் பங்கேற்று நடித்தனர். அவர்களில் ஒரு இளம் பெண் சமீபத்தில் திருமணமானவர் என தெரிகிறது.
நாடகம் நடந்துகொண்டிருந்த போது, அங்கு துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் 5 இளம் பெண்களையும் கடத்திச் சென்றது. பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்ற அந்த கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 இளம் பெண்களையும் கற்பழித்தது.
மேலும், அதனை செல்போனில் வீடியோ எடுத்த மர்ம கும்பல், இதுபற்றி போலீசிடம் புகார் அளித்தால் வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தது.
சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு அந்த பெண்களை மர்ம கும்பல் விடுவித்தது. அதன் பின்னர் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பிய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எடுத்துக்கூறினர்.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து அந்த மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X