search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picket"

    • பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.
    • இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.

    எடப்பாடி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதி யில், நீண்ட நாள் கோரிக்கை யாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரி யிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதல்-அமைச்சருக்கு அளித்திருந்தார்.

    அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.

    இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.

    முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகு தியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி- மேட்டூர் பிரதான சாலை யில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து அப்பகு திக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது.
    • மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளை யத்தில் பா.ம.க வினர் சார்பில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்ச லிக்காக பேனர் வைக்கப் பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சென்றனர்.

    நேற்று காலை பிளக்ஸ் பேனரை கிழிக்கப்பட்டி ருந்ததை பார்த்த பா.ம.க. வினர் 50-க்கும் மேற்பட் டோர் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலை யில் குப்புச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் பிளக்ஸ் பேனரை கிழித்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    • 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடைய அறிவியல் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் கடந்தும் இதுவரை கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    என உறவினர்கள் குடும்பத்தினர் ஊர் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

    கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலை தென்பாதி மெயின் ரோட்டில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஏ.டி.எஸ்.பி தலைமை யில் ஏராளமான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் குற்றவாளிகளை விரைவில் காவல்துறை கைது செய்யும் என்று தெரிவி த்ததன் அடிப்படையில் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார். தெரிவிக்கின்றனர்.

    • மதுரையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
    • தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் 12 நேர வேலை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் பாவேல்சிந்தன், செயலாளர் செல்வா, நிர்வாகிகள் வேல்தேவா, நிருபனா, நவீன், கவுதம், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த சில நாட்களாக தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதில்லை.
    • 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி- கல்லணை சாலையில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரை களில் கோவிலடி என்ற ஊர் அமைந்துள்ளது.

    கோவிலடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வருவதில்லை. கோடை காலத்தில் குடிநீர் வருவதில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென்று கோவிலடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் பல கிராமங்களுக்கு சென்றாலும், கோவிலடி கிராமத்திற்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை.

    இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்கப்பட்டும், அதிகா ரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று புகார் கூறினர்.

    இதைத் தொடர்ந்து தோகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் இந்த வழித்தடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மதுரை, திருமங்கலத்தில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.மாவட்டத்தலைவர் கார்த்திகேயன், முன்னாள் நியமனக்குழுத்தலைவர் சிலுவை,செய்யது பாபு, பால் ஜோசப் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.



    திருமங்கலத்தில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதில் நகர தலைவர் சவுந்தரபாண்டி, மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், வட்டார தலைவர்கள் காசிநாதன், முருகேசன், மகளிரணி பிரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

    • அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.
    • பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடம் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.

    இதனை கால்வாய் பணிக்காக முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

    பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. உடனே பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    • என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது.
    • உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், வடக்குத்து ஜெகன், செல்வ.மகேஷ், கார்த்திகேயன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைது செய்ததை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கடலூரில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி தலைமையில் மாணவர் அணி கோபிநாத், இளைஞர் அணி சந்திரசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட தலைவர் தடா. தட்சிணாமூர்த்தி உட்பட 25 பேரை கைது செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. 

    • 3 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நடைபெற்றது
    • பெரம்பலூர் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் சாலை கவுல்பாளையத்தில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய(குடிசை மாற்று வாரியம்) குடியிருப்பு உள்ளது. இங்கு 504 வீடுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சப்ளை சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து பல அரசு அலுவலகங்களில் பொது மக்கள் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அங்கு வந்த அரசு அலுவலர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பெரம்பலூரில் இருந்து அரியலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். 

    • ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • வேலை செய்த வீட்டின் உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே–யுள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திக் (வயது 30). திருமணமாகாத இவர் கழுவந்தோண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் பெயிண் டிங் வேலை செய்து கொண் டிருந்தார். அப்போது வீட் டின் மேலே சென்ற மின் கம்பி உரசி–யதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதா–பமாக உயிரிழந்தார்.இது குறித்து ஜெயங் கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஜெயங்கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற் கிடையே உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட் டதாக கூறப்ப–டுகி–றது.இந்நிலையில் கார்த்திக் கின் உடலை உடற்கூராய்வு செய்து உடனடியாக உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் அவர் பணி செய்த வீட்டு உரிமையாளரிடம் நஷ்டஈடு பெற்று வழங்க வேண்டும். அந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம மக்கள், உறவினர்கள் ஜெயங் கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த ஜெயங் கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ–குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடு–பட்டவர்களிடம் பேச்சு–வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் உறவினர்கள் கலைந்து சென்ற–னர். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் கழு–வந்தோண்டி கரைமேடு பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்
    • ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது

    ஆலங்குடி:

    ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மற்றும் அனைத்து மோட்டார் வாகனங்கள் சார்பில் 15 நிமிடம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்டிஓ அலுவலங்களில் லஞ்சம் வாங்குபதை தடுத்த வேண்டும், ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது. கார்ப்பரேட் ஆதரவாக மோட்டார் வாகன சட்டம் திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டித்து ஆலங்குடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஆலங்குடி அரசமரம் பஸ்ஸ்டாப் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையிலும், சந்தப்பேட்டையில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், வடகாடு முக்கத்தில் பெரியகுமாரவேல் சார்பிலும் ஆட்டோ சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் வம்பன் திருவரங்குளம் ஆகிய இடங்களிலும் ஆட்டோ சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வைத்தியலிங்கம் மற்றும் சிஐடியு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தோகைமலை- பாளையம் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
    • சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தினர்

    கரூர்

    தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி பரந்தாடியில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பரந்தாடி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும், நல்லாக்கவுண்டம்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை தோகைமலை- பாளையம் சாலையில் உள்ள பரந்தாடி பிரிவில் காலிக்குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×