search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மறியல்
    X

    ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மறியல்

    • ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்
    • ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது

    ஆலங்குடி:

    ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மற்றும் அனைத்து மோட்டார் வாகனங்கள் சார்பில் 15 நிமிடம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்டிஓ அலுவலங்களில் லஞ்சம் வாங்குபதை தடுத்த வேண்டும், ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது. கார்ப்பரேட் ஆதரவாக மோட்டார் வாகன சட்டம் திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டித்து ஆலங்குடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஆலங்குடி அரசமரம் பஸ்ஸ்டாப் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையிலும், சந்தப்பேட்டையில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், வடகாடு முக்கத்தில் பெரியகுமாரவேல் சார்பிலும் ஆட்டோ சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் வம்பன் திருவரங்குளம் ஆகிய இடங்களிலும் ஆட்டோ சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வைத்தியலிங்கம் மற்றும் சிஐடியு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×