என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
- ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
- வேலை செய்த வீட்டின் உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே–யுள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திக் (வயது 30). திருமணமாகாத இவர் கழுவந்தோண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் பெயிண் டிங் வேலை செய்து கொண் டிருந்தார். அப்போது வீட் டின் மேலே சென்ற மின் கம்பி உரசி–யதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதா–பமாக உயிரிழந்தார்.இது குறித்து ஜெயங் கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஜெயங்கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற் கிடையே உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட் டதாக கூறப்ப–டுகி–றது.இந்நிலையில் கார்த்திக் கின் உடலை உடற்கூராய்வு செய்து உடனடியாக உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் அவர் பணி செய்த வீட்டு உரிமையாளரிடம் நஷ்டஈடு பெற்று வழங்க வேண்டும். அந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம மக்கள், உறவினர்கள் ஜெயங் கொண்டம் அரசு மருத்து–வமனைக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஜெயங் கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ–குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடு–பட்டவர்களிடம் பேச்சு–வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் உறவினர்கள் கலைந்து சென்ற–னர். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் கழு–வந்தோண்டி கரைமேடு பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்