என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காலி குடங்களுடன்சாலை மறியல் போராட்டம்
- 3 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நடைபெற்றது
- பெரம்பலூர் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் சாலை கவுல்பாளையத்தில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய(குடிசை மாற்று வாரியம்) குடியிருப்பு உள்ளது. இங்கு 504 வீடுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சப்ளை சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து பல அரசு அலுவலகங்களில் பொது மக்கள் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அங்கு வந்த அரசு அலுவலர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பெரம்பலூரில் இருந்து அரியலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்