search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perumal"

    • மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள்.
    • தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

    பெருமாளை சேவித்த பிறகு பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய தலையில் வைக்கும் சடாரி என்ற மகுடத்தை கவனித்து பார்த்தால் அதன் மேல் இரண்டு பாதச் சுவடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதிப்புக்குரிய திருமுடியின் மீது திருவடிகள் ஏன் இடம் பெற்றிருக்கிறது. அதிலும் பெருமாள் ஆலயங்களில் அதனை பயன்படுத்துவதற்கான காரணத்தை அறிவோம்.

    ஒரு சமயம் தாம் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் முன் தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார்.

    திடீரென தன்னை சந்திக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு பாம்பு படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றவர் வழக்கத்துக்கு மாறாக தனது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளையே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. அவை பாதுகைகளை பார்த்து கோபத்துடன், 'கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் நீ எப்படி இங்கு இருக்கலாம்?' என்று கேட்டன.


    ''இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்'' என்றன பாதுகைகள். அவற்றைக் காதில் வாங்காமல், ''பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும். எனவே, ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்திற்கு போய்விடுங்கள்'' என்று கோபத்துடன் சொன்னது கிரீடம்.

    அதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படி சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள். தவிர, உங்களை தழுவி தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்'' என்று பதிலுக்கு வாதித்தனர்.

    கிரீடத்துடன் சங்கு, சக்கரமும் சேர்ந்து கொண்டதால் தனித்து நின்ற பாதுகைகளால் ஏளனப் பேச்சை தாங்கிக்கொள்ள முடியாமல் பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கிக் காத்து நின்றன. பகவான் வந்ததும் அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி பாதுகைகள் முறையிட்டன. ''இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னிதியில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல் கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு புனிதமான உங்களை தூற்றியதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும்.


    தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரசப்பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழல் ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து சங்கும், சக்கரமும் 14 வருடங்கள் உங்களை பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது'' என்றார்.

    அதன்படியே ஸ்ரீராமாவதாரத்தில் அவரது பாதுகைகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன. திருமுடி ஒருவகையில் உயர்ந்தது எனில், பெருமாளின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே.

    இன்னும் சொல்லப்போனால் பாதம் பற்றி சரணாகதி அடையும் விதமாக நமது பார்வை பெருமாளின் திருப்பாதங்களையே முதலில் நாடும். பாதச்சுவடுகள் தாங்கிய சடாரி எனும் மகுடத்தை நம் தலையில் வைத்துக் கொள்ளும்போது நம்முடைய, 'நான்' என்று ஆணவம், அகங்காரம் அழிய வேண்டும் என்பதே சடாரி சாத்தலின் பின்னணியில் உள்ள காரணம்.

    • வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    திருப்பதியில் நேற்று 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாள் அவர்களை ஒன்று சேர்த்து வைக்க நினைத்தார்.
    • தற்செயலாக ஆழ்வார்கள் மூவரும் இவ்வூருக்கு வர நேரிட்டது. நல்ல இருட்டு நேரம். மழை வேறு.

    பேயார், பொய்கையார், பூதத்தார் என்னும் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே பல தலங்களுக்கும் சென்று இறைவனை பாடி பணிந்து வந்தனர்.

    பெருமாள் அவர்களை ஒன்று சேர்த்து வைக்க நினைத்தார்.

    தற்செயலாக ஆழ்வார்கள் மூவரும் இவ்வூருக்கு வர நேரிட்டது. நல்ல இருட்டு நேரம். மழை வேறு.

    முதலில் வந்த ஆழ்வார் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்டார்.

    ஒற்றை அறை கொண்ட அவ்வீட்டின் முன் புறம் ஒரு தாழ்வாரம் இருந்தது.

    மிக குறுகலான இடம். ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் வந்து விட்டால்...? மூன்று பேரும் நிற்கத்தான் வேண்டும்.

    வீட்டுக்குடையவன் முதலில் வந்தவருக்கு இடம் கொடுத்தான்.

    அவர் படுக்கப்போகும் சமயம் இரண்டாமவர் வந்தார்.

    நாராயணா நாராயணா என்றழைத்துக்கொண்டு...! இருவரும் அமர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் மூன்றாமவர் வந்துவிட்டார்.

    மூவரும் எழுந்து நின்றனர். தாராளமாக நிற்கலாம்.

    இருட்டு வேளையில் இவர்களுக் கிடையே இன்னொருவரும் புகுந்துகொண்டு நெருக்கத் தொடங்கி விட்டார்.

    ஆழ்வார்கள் திகைத்தனர். யார் அது? யார் அது? பெருமாள் பிராட்டியுடன் காட்சியளித்தார்.

    ஆழ்வார்கள் மூவரும் மெய்மறந்து ஆளுக்கொரு அந்தாதி பாடி அரங்கனை பணிந்தனர்.

    ஒருவரை ஒருவர் புரிந்துகொன்டு ஒன்றாக சிறிதுகாலம் தலயாத்திரை செய்தனர்.

    இப்படி ஆழ்வார்களை ஒன்று சேர்த்து வைத்த பெருமாள் இவரே.

    ஸ்ரீவேதாந்த தேசிகன் தேஹாளீஸ்துதியை இத்தலத்திலேயே இயற்றினார்.

    எம்பெருமானார், ஜூயர் பரம்பரைக்குட்பட்ட தலம் இது. இக் கோவிலினுள்ளேயே துர்க்கையம்மன் சந்நிதி ஒன்று உள்ளது.

    இது தேவேந்திரமாக கருதப்படவில்லை.

    இத்தலத்திற்கு விழுப்புரத்தில் இருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன.

    கடலூரில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் கூட பஸ்கள் செல்கின்றன.

    வேலூர் மார்க்கமாக செல்லும் திருச்சி சித்தூர் பஸ்களும் இத்தலத்தின் வழியாக செல்கின்றன.

    விழுப்புரம், காட்பாடி ரெயில் பாதையில் உள்ள திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் இறங்கியும் இரண்டு மைல் தொலைவிலுள்ள ஊரை சென்றடையலாம். சகல வசதிகளும் உள்ள ஊர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆதி திருவரங்கத்துக்கு ஆன்மீக யாத்திரை செல்பவர்கள் அவசியம் திருகோவிலூர் ஆலயத்துக்கும் செல்ல வேண்டும்.
    • கோவில்களில் சிறந்தது திருக்கோவிலூர் என்று சொல்லும்படி சொல்ல வொண்ணா சிறப்புகள் பெற்றது.

    ஆதி திருவரங்கத்துக்கு ஆன்மீக யாத்திரை செல்பவர்கள் அவசியம் திருகோவிலூர் ஆலயத்துக்கும் செல்ல வேண்டும்.

    கோவில்களில் சிறந்தது திருக்கோவிலூர் என்று சொல்லும்படி சொல்ல வொண்ணா சிறப்புகள் பெற்ற தலம் இது.

    மாபலியை வெல்ல வாமனர் திருவிக்கிரமனாக மூவுலகும் ஈரடியால் தாவியளந்த தலம்.

    மூலவர் திருவிக்ரம பெருமாள் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் தாங்கி தனது வலக்காலை உயரத்தூக்கி விண்ணை அளந்தபடி கிழக்கு நோக்கி நிற்கிறார்.

    உற்சவ மூர்த்திக்கு ஆயனர் என்றும் கோபாலன் என்றும் பெயர்.

    தாயார் பூங்கோல் நாச்சியார்.

    தல தீர்த்தங்கள்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம்.

    விமானம்: ஸ்ரீகர விமானம்.

    கிருஷ்ணரின் நித்திய சாந்நித்தியம் பெற்ற பஞ்ச கிருஷ்ணாரண்ய சேத்திரங்களில் இதுவும் ஒன்று.

    இத்தலத்து பெருமாளை பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் ஸ்ரீமணவாள மாமுனிகளும் மங்களா சாசனம் செய்துள்ளனர்.

    • எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று பசுமையை இந்த ஆறு உருவாக்கி இருக்கிறது.
    • இதனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு ரம்மியமான மனநிலை உண்டாகிறது.

    தென்பெண்ணை ஆறு தென் இந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.

    இந்த ஆறு கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறக்கிறது.

    அங்கிருந்து 430 கி.மீ. தூரத்தில் பாய்ந்து இறுதியில் தமிழ்நாட்டில் கடலூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

    தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீ. நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மு. நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கி.மீ. நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி.மீ. நீளத்திற்கும் பாய்கிறது.

    இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ. ஆகும்.

    மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

    ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அணை, எல்லீஸ் அணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள் ஆகும்.

    காவேரிப்பட்டினம், மஞ்சமேடு, இருமத்தூர், ஈச்சம்பாடி, அகரம், நெடுங்கல், தொண்டமானூர் அகரம், அனுமந்தீர்த்தம், பள்ளிட்டு, மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை, திருக்கோவிலூர், பேரங்கியூர், தளவானூர், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், ராம்பாக்கம், சொர்ணாவூர் மற்றும் கடலூர் ஆகிய நகரங்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளன.

    இந்த ஆற்றின் கரையோரத்தில் எத்தனையோ தெய்வீக திருத்தலங்கள் அமைந்து இருந்தாலும் ஆதிதிருவரங்கம் ஆலயம் அமைந்து இருந்து மிக மிக சிறப்பானதாக காணப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தழுவியபடியே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது.

    ஆலயத்துக்கு வருபவர்கள் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தம் ஆடிவிட்டு வருவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆதி திருவரங்கம் ஆலயத்தில் தென்பெண்ணை ஆற்றை பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது.

    ஆதிதிருவரங்கம் ஆலயத்தை சிறப்பிப்பது போல வளைந்து நெளிந்து செல்கிறது.

    எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று பசுமையை இந்த ஆறு உருவாக்கி இருக்கிறது.

    இதனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு ரம்மியமான மனநிலை உண்டாகிறது.

    மிக மிக அரியதாகவே இத்தகைய மனநிலையை உணர முடியும்.

    அதை உருவாக்கி தரும் ஆலயங்களில் ஒன்றாக ஆதிதிருவரங்கம் ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் அரங்கநாதரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
    • முன்னதாக, அதிகாலை அரங்கநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பரமபதவாசல் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் அரங்கநாதரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    முன்னதாக, அதிகாலை அரங்கநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    5 மணிக்கு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர், பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.

    அப்போது, அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா - கோவிந்தா என கோஷம் எழுப்பி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    தொடர்ந்து, மைய மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்த அரங்கநாதர், பின்னர் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    • மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
    • அன்றுதான், அர்ஜூன னுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா.

    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும்.

    மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    அன்றுதான், அர்ஜூன னுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா.

    இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆதிதிருவரங்கம் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைஷ்ணவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும்.

    விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

    மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.

    எனவே வைகுண்ட ஏகாதசி தினத் தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் நீங்காத செல்வம் நிறைந் தேலொ ரெம்பாவை என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை வாழலாம்.

    • அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
    • மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர்.

    சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

    சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில், கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.

    கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.

    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

    திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும்.

    அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

    திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலுக்கோ அல்லது வீட்டிலேயோ திருமாலின் படத்தின் முன் அமர்ந்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.

    பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

    அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.

    மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    • பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.
    • ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது

    ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

    ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன.

    அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.

    பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும்.

    பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.

    ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது. எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    • இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது.
    • அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது.

    அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான்.

    ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.

    இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான்.

    காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.

    தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்க அர்ப்பணம் செய்" என்று ஆலோசனை கூறினார்.

    அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர்.

    அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

    அமாவாசையிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி.

    ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி.

    • பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.
    • தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு “ஏகாதசி” என்று பெயரிட்டார்.

    "முரன்" என்றொரு அசுரன் இருந்தான்.

    தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

    அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான்.

    முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார்.

    அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.

    அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.

    தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

    பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

    பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

    அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான்.

    அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

    முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள்.

    பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு "ஏகாதசி" என்று பெயரிட்டார்.

    மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு "உற்பத்தி ஏகாதசி" என்று அருளினார்.

    • பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம்.
    • பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

    நித்ய கர்மங்களை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

    ஏகாதசியன்று துளசி இலை பறிக்கலாகாது. ஆதலால் முதல் நாளே பூஜிப்பதற்கு அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும்.

    அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    சக்தியில்லாவர் கடைசி வழியை பின்பற்றலாம். அன்று எவருக்கும் அன்னதானம் செய்யக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது.

    இரவில் பகவத் பஜனை அல்லது புண்ய கதாச்ரவணம் முதலியவைகளால் கண்விழிக்க வேண்டும்.

    கோபம், பரநிந்தை, க்ரூரமான வார்த்தை, கலஹம், தாம்பூலம், சந்தனம், மாலை, கண்ணாடி பார்த்தல், ஸ்த்ரீ ஸங்கம் முதலியவைகளை விட வேண்டும்.

    எப்போதும் அவர் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    துவாதசியன்று காலைக்கடனை முடித்து பகவத் பூஜை செய்ய வேண்டும்.

    ஓர் அதிதிக்கு அன்னமளித்து நாம் பூஜிக்க வேண்டும்.

    அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் இவைகளை அவசியம் பூஜிக்க வேண்டும்.

    இங்ஙனம் ஓர் பக்ஷத்திற் கோர்முறை ஏகாதசி உபவாசமிருந்தால் தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    பாபம் அகலும், சந்ததி, செல்வம் பெருகும், சுவர்க்கம் கிட்டும். மனம் நிர்மலமாகும். ஞானம் சுரக்கும். மோட்ச நந்தம் பெறுவர்.

    ஏகாதசி விரதம் அன்று செப்புக் கிண்ணியில் ஜலம் வைத்து அதில் துளசி தளம் போட்டு வைத்து நீர் மட்டும் பருகுவார்கள்.

    ஒரு சிலர் "நிர்ஜலோபவாசம்" அதாவது ஜலமின்றி உமி நீர்க் கூட பருகாமல் இருப்பதுண்டு.

    ஏகாதசி விரதம் எல்லோருக்கும், முக்கியமாக மத்வமதஸ்தர்கள் வெகு சிறப்பாக அனுஷ்டானம் செய்வார்.

    "ஏகாதசி மரணம், துவாதசி தகனம்" என்ற பழமொழிப்படி ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண் ணிய பலமாக கூறுகிறது.

    ஏகாதசி உபவாச மிருந்து, துவாதசி அதிகாலையில் நீராடி இறைவனைப் பூஜித்து ஒருவருக்கு வஸ்திரம், அன்னதானம், தாம்பூலம், தட்சிணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கிறது.

    ×