search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Court"

    • முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெற்றது.
    • மொத்தம் 4 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெற்றது.

    மாவட்ட நுகர்வோர் நீதிபதி தீபா, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் அமர்வு நீதிபதிகளாக பங்கேற்றனர். கட்டுமானம் சம்பந்தமான ஒப்பந்த வழக்கு, மருத்துவ காப்பீடு கோருதல் சம்பந்தமான வழக்கு, வாகன கடன் சம்பந்தமான வழக்கு உள்பட மொத்தம் 4 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் வாகன கடன் தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பில் எதிர்மனுதாரருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டு நிலுவையில்லா சான்றிதழ் வழங்கி சமரச தீர்வு காணப்பட்டது. இதில் நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாக விரைவாக முடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி இழப்பீட்டுத் தொகைக்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி விழுப்புரம் மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வி. பூர்ணிமா தலைமையில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம்சிறப்பாக நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாக விரைவாக முடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் திண்டிவனம் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை செஞ்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் வானூர் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களில் 16 அமர்வுகள் கொண்டு நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனர். விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விபத்துக்கள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் மேலும் முதல்முறையாக வழக்குகளும் எடுத்துக் கொண்டு தீர்வு காணப்பட்டது. இங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண செய்யப்பட்டிருந்தது.

    மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணும் வழக்குகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப பெரும் வாய்ப்பு, வழக்குகள் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும், மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பாக முதல்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது அதில் ஒரு வழக்கு சமரச முறையில் தீர்வும் காணப்பட்டது மற்றும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர் குடும்பத்திற்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு இந்த மாபெரும் மக்கள் நீதி மன்றத்தின் மூலம் அவர்களுக்கு உடனடியாக விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி இழப்பீட்டுத் தொகைக்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. மக்கள் நீதி மன்றத்தில் 4980 மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2700 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சுமார் ரூபாய் 25 கோடிக்கு மேல் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் ஏற்பாடுகளை நிர்வாக உதவியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வத் தொண்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • அரியலூரில் வருகிற 12-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 12-ம் தேதி தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணைப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

    மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும், வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது, வழக்குகள் தீர்வு கண்டதும் உத்தரவு நகல் உடனே வழங்கப்படும், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது,

    நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும், அதனால் பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம் எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    • கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார்.
    • சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டவி ழிப்புணர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ் வரவேற்றார். கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:- நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கிடவும், பொதுமக்களு க்கிடையேயான பிரச்ச னைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுவதற்காகவும், வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்குகளை நடத்திடவும், சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது. மேலும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள்வழக்குகளை சமரசம் மற்றும் சுமூக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் எற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும், தங்கள் வழக்குகளை சுமூக முறையில்தீ ர்த்துக்கொள்ளலாம்.

    எவ்வித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு விழு ப்புரம் 04146-228000, கள்ளக்குறிச்சி வட்டசட்டப்பணிகள் குழு 04151-226730, உளுந்தூர்பேட்டை சட்டப்ப ணிகள்குழு 04149-220433, திருக்கோவிலூர் வட்ட சட்டப்பணிகள் குழு 04153-253970 மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு04151-235033 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாண்பமை முதன்மை சார்பு வீரணன், உதவி ஆணையர் (கலால்) இராஜவேல், வேளாண்மை இணைஇயக்குநர் வேல்விழி, துணை இயக்குநர் சுகாதா ரப்பணிகள் இராஜா மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழு செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • நிலுவையிலிருந்த 925 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 410 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது
    • அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    ஊட்டி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகன் தொடங்கி வைத்தாா். நீதிபதி ஸ்ரீதரன், மகளிா் நீதிமன்ற நீதிபதி நாராயணன், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நீதித்துறை நடுவா் தமிழினியன், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி வி.மோனிகா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனகிருஷ்ணன் ஆகியோா் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு கண்டனா்.

    கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ராஜ் கணேஷ், குற்றவியல் நீதிபதி வனிதா ஆகியோா் தலைமையிலும், குன்னூா் நீதிமன்றத்தில் சாா்பு நீதிபதி சந்திரசேகரன், குற்றவியல் நீதித் துறை நடுவா் இசக்கி மகேஷ்குமாா், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் ஆகியோா் தலைமையிலும், கூடலூா் நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி பிரகாசம், குற்றவியல் நீதிபதி சசிகுமாா், பந்தலூா் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி சிவகுமாா் ஆகியோா் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன.

    இதில் நிலுவையிலிருந்த 925 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 410 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2 கோடியே 34 லட்சத்து 15,506 ஆகும். வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான 510 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 118 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 1 கோடியே 59 லட்சத்து 82,083 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
    • 86 வழக்குகளுக்கு தீர்வு

    செங்கம்:

    செங்கம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    செங்கம் சார்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.தாமரை இளங்கோ, குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.வித்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அதில் 86 வழக்குகளில் ரூ.66லட்சத்து 89 ஆயிரத்து 397 மதிப்பிலான தாவாக்கள் சமரசம் செய்து முடித்துவைக்கப்பட்டது.

    • ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
    • 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் பொதுவுடமைக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியில் நீண்ட கால தவணை களாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் கட்ட முடியாத நபர்கள் ஆலங்குடி நீதிமன்ற லோக்கல் அதாலத் சமரச கூட்ட தீர்வு மூலமாக 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது. சமரச கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவி தலைமை வகித்தார் வழக்கறிஞர் விஜய, சமூக ஆர்வலர் அழகுசுந்தரம் வங்கி கிளை மேலாளர் அசோக்குமார், அரசு வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நீண்டகால கடன்களான விவசாயம் கல்விக்கடன் சுய உதவிக் குழு சிறு தொழில் வியாபாரம் மற்றும் ஏனைய கடன்கள் பெற்றவர்களு க்கு சமரச கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது. இதில் கடன் பெற்றவர்களுக்கு நீண்ட கால நிலுவையில் இருந்த 15 பேருக்கு 39, லட்சத்து,40, ஆயிரத்து,360 கொடுத்து சமரச கூட்டதீர்வு காணப்பட்டது..

    நிகழ்ச்சியில் வட்ட சட்டப்பணி குழு நிர்வாக உதவியாளர் அருண்கு மார் தன்னார்வ சட்ட பணியாளர் செந்தில்ராஜா மற்றும் வழக்கறிஞ ர்கள் 100க்கும் அதிகமான பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண் டனர். 

    • விபத்து, மோசடி வழக்குகள் விரைந்து முடிக்க ஆலோசனை நடைபெற்றது.
    • ஆகஸ்ட் 13ல் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக வரும் ஆகஸ்ட் 13ல் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி மோசடி வழக்குகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க ஆலோசனை நடைபெற்றது. இதற்கான முன் அமர்வுகள் ஏற்பாடு செய்து வழக்குகளை விரைவாக முடிக்கலாம் என ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வழக்கறிஞர்கள், போலீசார், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது .தீர்வு தொகையாக ரூ.70,88,492 வழங்கப்பட்டது. இதில் பல்லடத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வன்முறை குறித்த வழக்கில் தம்பதியினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் கருத்து வேறுபாடால் பிரிந்த இளம் தம்பதிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்தனர்.

    • சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 316 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் தலைமை தாங்கினார். வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நீதிபதிகள் தாரணி, சக்திவேல், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகன்யாஶ்ரீ மற்றும் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டனர். வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.  மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்து வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு உள்ளிட்ட 316 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு ரூ 3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 121-க்கு தீர்வு காணப்பட்டது.

    • சிவில், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
    • தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.

    திருப்பூர் :

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 20 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில் சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய சிறிய குற்ற வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2,679 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டன. தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.

    திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா்வி.பி.சுகந்தி, மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாய நீதிபதி பி.ஸ்ரீகுமாா், மகளிா் நீதிமன்றநீதிபதி எஸ்.நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் வி.புகழேந்தி மற்றும் வக்கீல்கள் பலா் கலந்துகொண்டனா்.

    • தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.
    • புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி, ஏனாம் நீதி மன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

    புதுச்சேரி:

    தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.

    புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி, ஏனாம் நீதி மன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.மக்கள் நீதிமன்றத்தை, சென்னை ஐகோர்ட்டு நீதி பதி மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் ராஜா தொடங்கி வைத்தார்.

    ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார், தலைமை நீதிபதி செல்வநாதன், முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ் வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், துணை தலைவர் தனலட்சுமி, செயலாளர் கதிர்வேல், அரசு வக்கீல்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் நிலுவை, நேரடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன், மனைவி பிரச்னை சம்பந்தம்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்றம், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில், தொழிலாளர், வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதற்காக புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகள், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வு, காரைக்காலில் 3 அமர்வுகள், மாகியில் 2, ஏனாமில் 1 என மொத்தம் 16 அமர்வுகள் செயல்பட்டது.இதுபற்றி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ராஜா கூறியதாவது:-

    சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். நீதிகேட்டு வருவோருக்கு நியாயப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்கள் நீதிமன்றம் கட்டமைப்பை உருவாக்கி, நீதிமன்றத்தில் பல காலங்களாக தேங்கி கிடக்கும் வழக்குகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

    நீதியை காலதாமதம் இல்லாமல் வழங்கவே மக்கள் நீதிமன்றம் உருவாகியது. மக்கள் நீதிமன்றத்துக்கு வந்து நீதி கேட்பவர்கள் நீதிமன்ற கட்டணம் அளிக்க வேண்டியதில்லை. நீதிமன்றம் கேட்டு வழக்கு போடுபவர்கள் நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும். மக்கள் நீதிமன்றம் முன்பு வந்து நீதிகேட்டால், நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. நீதிமன்றத்தில் தாக்கலாகி மக்கள் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தால் நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம்.

    நீண்ட ஆண்டு களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. நீதிமன்ற கட்டணமே இல்லாமல் விரைவாக நீதி கிடைக்கும்.

    தீர்ப்புகள் மேல்முறை யீட்டுக்கு எடுக்கப்படாது. உடன் பைசல் செய்யப்படு வதால், வீட்டிலும், நாட்டிலும் அமைதி நிலவும். இதன் மூலம் நீதிமன்றத்தில் தாக்கலாகி பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் வழக்குகளை தீர்வு காணலாம்.

    சென்னை உயர்நீதி மன்றத்தின் புதுவை கிளை அமைப்பது தொடர்பாக அரசுதான் நடவடிக்கை எடுக்க இயலும். தமிழகத்தை ஒப்பிடுகையில் புதுவையில் வழக்குகள் எண்ணிக்கை குறைவுதான். கடந்தாண்டு 1300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது 1700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு ராஜா கூறினார்.

    ×