என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் வருகிற 12-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
    X

    அரியலூரில் வருகிற 12-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

    • அரியலூரில் வருகிற 12-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 12-ம் தேதி தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணைப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

    மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும், வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது, வழக்குகள் தீர்வு கண்டதும் உத்தரவு நகல் உடனே வழங்கப்படும், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது,

    நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும், அதனால் பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம் எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×