என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கம் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம்
- 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- 86 வழக்குகளுக்கு தீர்வு
செங்கம்:
செங்கம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
செங்கம் சார்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.தாமரை இளங்கோ, குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.வித்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் 86 வழக்குகளில் ரூ.66லட்சத்து 89 ஆயிரத்து 397 மதிப்பிலான தாவாக்கள் சமரசம் செய்து முடித்துவைக்கப்பட்டது.
Next Story






