search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைகூட்டம்"

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மேயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பிறந்தது முதல், 2 வயது வரை, 13 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. தேசிய அளவில் இந்த திட்டம் அடுத்த மாதம் 7ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், அவர்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் விதமாக இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பகுதியில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உறுப்பினர் செயலர், தடுப்பூசி திட்ட கண்காணிப்பு நல அலுவலர் வேலன், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், ஊட்டச்சத்து துறை, தொழிற்சாலை துறை, தொழிலாளர் நல துறை, குடிசை மாற்று வாரியம், போலீஸ் துறை உள்ளிட்ட துறையினர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

    வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர் குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, இதற்காக துறை வாரியாக வழங்க வேண்டிய ஒத்துழைப்பு, பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, அவற்றை முற்றிலும் சாப்ட்வேர் மூலம் முழுமையாக பதிவேற்றம் செய்து, தினமும் இதன் விவரங்களை குழுவுக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார்.
    • சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டவி ழிப்புணர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ் வரவேற்றார். கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:- நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கிடவும், பொதுமக்களு க்கிடையேயான பிரச்ச னைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுவதற்காகவும், வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்குகளை நடத்திடவும், சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது. மேலும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள்வழக்குகளை சமரசம் மற்றும் சுமூக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் எற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும், தங்கள் வழக்குகளை சுமூக முறையில்தீ ர்த்துக்கொள்ளலாம்.

    எவ்வித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு விழு ப்புரம் 04146-228000, கள்ளக்குறிச்சி வட்டசட்டப்பணிகள் குழு 04151-226730, உளுந்தூர்பேட்டை சட்டப்ப ணிகள்குழு 04149-220433, திருக்கோவிலூர் வட்ட சட்டப்பணிகள் குழு 04153-253970 மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு04151-235033 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாண்பமை முதன்மை சார்பு வீரணன், உதவி ஆணையர் (கலால்) இராஜவேல், வேளாண்மை இணைஇயக்குநர் வேல்விழி, துணை இயக்குநர் சுகாதா ரப்பணிகள் இராஜா மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழு செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    ×