search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old pension scheme"

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது.
    • இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது. பேரணிக்கு மாநில துணை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம் பேரணியை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சுரேஷ் பேசினார்.

    இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு அரசாணைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல் படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம்.
    • 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம்.

    சிம்லா:

    இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த முறையும் அந்த சரித்திரம் தொடருமா அல்லது மாறுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெறத் தொடங்கினர்.

    இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து இமாசலபிரதேச மாநிலத்தின் 15-வது முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி பதவியேற்றுக்கொண்டார். மந்திரிகள் அடுத்த சில நாட்களில் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது
    • 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் லக்கி லாரன்ஸ் புவியரசு தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைக்கால ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 1.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் முடக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    மாணவர்கள் நலன் கருதி தேவையற்ற இணையவழி பதிவு பதிவேடுகளை நிறுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார அளவிலான நிர்வாகிகள், மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தாராபுரம் :

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் சங்கங்களின் கூட்டியக்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிபிஎஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.நவீன் தலைமை வகித்தாா்.

    இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் லட்சுமி நாராயணன் பேசியதாவது:- இந்தியாவில் ராஜஸ்தான், சட்டீஸ்கா் பிகாா், ஜாா்கண்ட் மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழகத்தில் மட்டும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறாா்.திமுக கட்சிஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்ததால்தான் கடந்த தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆகவே, தோ்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.இந்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

    • 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
    • ஓய்வூதியர்களுக்கு வழங்குகிற குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் இளவரசன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில செயலாளர் மனோகரன் வாழ்த்தி பேசினார்.

    தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளான அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்குகிற குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசும் மாதந்தோறும் மருத்துவ படியாக ரூ.1,000 வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரே நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அனைத்து அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • 6 ம்வகுப்பு முதல் 10 வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவேண்டும்,

    பெரம்பலூர் :

    தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு துலைவர் சுப்பிரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் வரவேற்றார்.

    இதில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தி தேர்வு பெறும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தற்கு நன்றி தெரிவிப்பது, மத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தகுதி திறனாய்வு தேர்வு நடத்தி மாதந்தோறும் உதவி தொகை வழங்குவது போல் மாநில அரசும் வழங்கவேண்டும்,

    தற்போதைய தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை கல்வியாளர்களை கொண்டு மாற்றிடவேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும். 6 ம்வகுப்பு முதல் 10 வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவேண்டும், அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வ ஆசிரியர் பணியிடம் உருவாக்கவேண்டும்,

    தி.மு.க. கொடுத்த தேர்தல் அறிக்கையின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். மத்திய அரசு போல் தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வழங்காதிருப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக அகவிலைப்படியை வழங்கவேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு செய்ய விதித்துள்ள தடையை உடனடியாக நீக்கவேண்டும். 2004 முதல் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் அவர்களது தொகுப்பூதிய பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக மாற்றி ஆணை பிறப்பிக்கவேண்டும்.

    ஆசிரியர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ளப்படி பெற்றோர்களை எவ்வித நிபந்தனையின்றி சேர்க்கவேண்டும். பணிநிரவல் கலந்தாய்வின்படி மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு 6 மாதகால ஊதியம் கிடைக்கவில்லை, எனவே ஆசிரியர்களின் வாழ்வாதாரமான மாத ஊதியத்தை தாமதம் இல்லாமல் வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுரவத்தலைவர் பாபுவாணன், பொருளாளர் இலங்கைசெழியன், முன்னாள் தலைவர்கள் ராஜ்குமார், ராமமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
    • வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    நெல்லை:

    அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை கோட்ட செயலாளர் சண்முக சுந்தரராஜ் விளக்கி பேசினார்.

    இதில் நெல்லை மாவட்ட ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி, விஜயராஜா, செல்லதுரை, கண்ணன், கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அஞ்சல் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளனர்
    • கொடைக்கானலில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாநில பொதுச் செயலாளர் காமராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு போல் அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். அரசாணை 101 மற்றும் 108 ரத்து செய்து தொடக்க கல்வி துறை தனித்து இயங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மருத்துவர்களுக்கு வழங்குவது போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பை வழங்க வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அறவழி போராட்டம் மூலம் எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த நிர்வாகிகள் தேர்தலில் மாநிலத் தலைவராக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் சேவியர், பொதுச்செயலாளராக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், பொருளாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த செல்வம், ஒருங்கிணைப்பாளராக மதுரையைச் சேர்ந்த செல்லபாண்டியன், தேர்தல் ஆணையாளராக அன்பழகன், மதுரை மாவட்ட தலைவராக ராமு, செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக செல்வம், திண்டுக்கல் மாவட்ட தலைவராக ஆல்பர்ட் டென்னிஸ், செயலாளராக கணேஷ் பிரபு, பொருளாளராக சேவியர் ஜோசப் பிரபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, திரு முருகவேல் முன்னிலை வகித்தனர் மாநில பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    அதன் பின்னர் தியோடர் ராபின்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்வும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.அண்ணாவின் மீது ஆணையிட்டு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த தமிழக அரசு தன் பங்கேற்பு திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

    மேலும் 3 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதே போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும் கேட்டு க்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் வலியுறுத்தினார்.

    அதோடு மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போன்றும் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 தொகை வழங்கும் திட்டங்களை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். விடுமுறை நாட்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மன உளைச்சலையும், மன வேதனையைத் தருகிறது.

    விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அரசுப்பள்ளிகளில் எமிஸ் எண் பதிவேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறது. கிராம மற்றும் மலைப் பகுதிகளில் தேவையான அதிக திறன் கொண்ட இணைய வசதி சர்வர் பயன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் வைபை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். இதில் வேல்மணி, பிரபு, செல்வம், வாகீசன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து வல்லுநர் குழு தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது. #NewPensionScheme #SridharCommittee
    சென்னை:

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த குழுவை அமைத்தார்.

    இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. ஆனால் குழுவின் பணி நிறைவடையாததால், அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

    இடையில், வல்லுநர் குழுவின் தலைவர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி புதிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.


    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியங்களை ஆராய்ந்து வந்த இந்த குழு, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

    குழுவின் தலைவர் ஸ்ரீதர் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. #NewPensionScheme #SridharCommittee
    ×