search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறை படுத்த வேண்டும் - ஆசிரியர் கழக மாநில பொதுகுழு வலியுத்தல்
    X

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறை படுத்த வேண்டும் - ஆசிரியர் கழக மாநில பொதுகுழு வலியுத்தல்

    • அனைத்து அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • 6 ம்வகுப்பு முதல் 10 வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவேண்டும்,

    பெரம்பலூர் :

    தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு துலைவர் சுப்பிரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் வரவேற்றார்.

    இதில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தி தேர்வு பெறும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தற்கு நன்றி தெரிவிப்பது, மத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தகுதி திறனாய்வு தேர்வு நடத்தி மாதந்தோறும் உதவி தொகை வழங்குவது போல் மாநில அரசும் வழங்கவேண்டும்,

    தற்போதைய தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளை கல்வியாளர்களை கொண்டு மாற்றிடவேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யவேண்டும். 6 ம்வகுப்பு முதல் 10 வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவேண்டும், அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வ ஆசிரியர் பணியிடம் உருவாக்கவேண்டும்,

    தி.மு.க. கொடுத்த தேர்தல் அறிக்கையின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். மத்திய அரசு போல் தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வழங்காதிருப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக அகவிலைப்படியை வழங்கவேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு செய்ய விதித்துள்ள தடையை உடனடியாக நீக்கவேண்டும். 2004 முதல் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் அவர்களது தொகுப்பூதிய பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக மாற்றி ஆணை பிறப்பிக்கவேண்டும்.

    ஆசிரியர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ளப்படி பெற்றோர்களை எவ்வித நிபந்தனையின்றி சேர்க்கவேண்டும். பணிநிரவல் கலந்தாய்வின்படி மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு 6 மாதகால ஊதியம் கிடைக்கவில்லை, எனவே ஆசிரியர்களின் வாழ்வாதாரமான மாத ஊதியத்தை தாமதம் இல்லாமல் வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுரவத்தலைவர் பாபுவாணன், பொருளாளர் இலங்கைசெழியன், முன்னாள் தலைவர்கள் ராஜ்குமார், ராமமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×