search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளதா? அறிக்கை தாக்கல் செய்தது ஸ்ரீதர் குழு

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து வல்லுநர் குழு தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது. #NewPensionScheme #SridharCommittee
    சென்னை:

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த குழுவை அமைத்தார்.

    இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. ஆனால் குழுவின் பணி நிறைவடையாததால், அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

    இடையில், வல்லுநர் குழுவின் தலைவர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி புதிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.


    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியங்களை ஆராய்ந்து வந்த இந்த குழு, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

    குழுவின் தலைவர் ஸ்ரீதர் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. #NewPensionScheme #SridharCommittee
    Next Story
    ×