search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal District News"

    • புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.
    • இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.

    ஆய்வு

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது புறநோநாளிகள் வரும் வாகனங்களை மருத்துவமனை மேற்பகுதிக்கு கொண்டு சென்று விடவும், புறநோயாளி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நுழைவுச்சீட்டு வழங்கவும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து நோயாளிகள் வசதிற்கு ஏற்றவாறு இருக்கை வசதிகள், குடிநீர் வசதி மேற்கொள்ள உத்தரவிட்டார். மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் தேவைகளுக்கு ஏற்ப விரைந்து செயல்படவும் அறிவுறுத்தினார்.

    ஷேர் ஆட்டோ வசதி

    நாமக்கல் மாவட்ட புதிய தலைமை அரசு மருத்துவமனை திறந்ததை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனை முழுவதுமாக அங்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதனால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் இங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் புதிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் ஆட்டோவில் புறநோயாளிகள் செல்ல பயண கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமமின்றி செல்ல நாமக்கல் தாசில்தார் சக்திவேல் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற சிலுவம்பட்டியில் உள்ள புதிய மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    • கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). ‌லாரி டிரைவர்.
    • லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது.

    குமாரபாளையம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). லாரி டிரைவர்.

    டயர் வெடித்தது

    சம்பவத்தன்று இவரும் கிளீனர் பிரபாகரன் என்பவரும் கோவையிலிருந்து லாரியில் அலுமினிய பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டி ருந்தனர். இந்த லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது. இருப்பினும் டிரைவர் முரளி பிரேக் போட்டு லாரியை சமர்த்தியமாக நிறுத்தினார்.

    கண்டெய்னர் லாரி மோதல்

    அப்போது கோவை யிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி, பழுதடைந்து நின்ற லாரியின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி நொறுங்கி டிரைவரும், கிளீனரும் லாரிக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டிரைவர் பலி

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி டிரைவர் மற்றும் கிளீனரை வெளியே எடுத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கண்டெய்னர் லாரியின் டிரைவர் இறந்துவிட்டார். கிளீனர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சங்கரன் குடியிருப்பு வடக்குத் தெருவை சேர்ந்த முத்துராஜ் (50), கிளீனர் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
    • இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், வி.நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் பழனிசாமி மல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை 2- வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது. இதனால் மனமுடைந்த பழனிசாமி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அனிச்சம்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் ஒன்றரை யூனிட் மணல் அள்ளிச்சென்ற பரமத்திவேலூரை சேர்ந்த சிங்காரம் (30) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற சத்யா(37). இவரது மனைவி மாதேஸ்வரி(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    காணவில்லை

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது மனைவி மாதேஸ்வரி பார்த்திபனுக்கு இரவு முழுவதும் போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    கிணற்றில் பிணமாக மீட்பு

    இந்நிலையில் நேற்று பார்த்திபன் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிணற்றுக்குள் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர் மாதேஸ்வரிடம் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற மாதேஸ்வரி கணவன் உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து மோகனூர் போலீசில் மாதேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பார்த்திபன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.
    • ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (41) தேங்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது நண்பரான திருச்செங்கோடு அருகே மொளசியை சேர்ந்தவர் விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.

    ரியஸ் எஸ்டேட் தொழில்

    விஜயகுமார் மற்றும் அவரது மனைவி கவிதா (37) மற்றும் உறவினரான ஆண்டலூர்கேட்டை சேர்ந்த சுரேஷ் (45) ஆகிய 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், ஈஸ்வரனையும் கூட்டாக தொழில் செய்ய அழைத்துள்ளனர்.

    இதையடுத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பல தவணைகளாக ஈஸ்வரன் ரூ.17 லட்சம் பணத்தை விஜயகுமார் உள்ளிட்டவர்களிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டல்

    இதனிடையே ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் மேற்கொண்டு பணம் தராமல் இதுவரை கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு 3 பேரும் பணத்தை திருப்பி தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஈஸ்வரன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் சோழிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் -மனைவியிடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் தனியாக வீட்டில் இருந்த போது மனைவியின் துப்பட்டாவை எடுத்து விட்டத்தில் மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இன்று காலை அவரது உறவினர்கள் பார்த்த போது கோவிந்தராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
      • இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

      இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது. இதற்கான எழுத்துதேர்வு டிசம்பர் மாதம் 24-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பட்டய பயிற்சி தேர்ச்சி ஆகும். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி இணைய முகவரியில் விண்ணப்பித்து, பயிற்சியில் சேர்ந்து உள்ளவர்களும், இப்பணிக்கு உரிய சான்று மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை கொண்டும், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

      இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

      • அர்த்தநாரீசுவரர்‌ கோவில் நிர்வாகத்திடம்‌ திருச்செங்கோடு ஊர்‌ பொதுமக்கள்‌ சார்பாக, தீப கொப்பரையானது காணிக்கையாக வழங்கப்பட்டது.
      • திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில்‌ தீபம்‌ ஏற்ற வேண்டி மேற்படி தீபக்‌ கொப்பரையை பொதுமக்கள்‌ திருக்கோயில்‌ நிர்வாகத்திடம்‌ வழங்கினார்கள்‌.

      திருச்செங்கோடு:

      நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் நிர்வாகத்திடம் திருச்செங்கோடு ஊர் பொதுமக்கள் சார்பாக, தீப கொப்பரையானது காணிக்கையாக வழங்கப்பட்டது.

      இந்த தீபக் கொப்பரையானது தாமிர உலோகத்தால் ஆனது இதனை பல வருடங்களுக்கு முன்பாக திருச்செங்கோடு ஊர் பொதுமக்கள் பலரும் சேர்ந்து நன்கொடை வழங்கி இந்த தீப கொப்பரையை உருவாக்கியுள்ள நிலையில், அவர்களின் ஒரு சிலர் இனி வரும் காலங்களில் அர்த்தநாரீசுவரர் கோவில் நிர்வாகமே கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரியதின் அடிப்படையில் கோவில் நிர்வாகம் முன்னின்று வருடா வருடம் தொடர்ந்து திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டி மேற்படி தீபக் கொப்பரையை பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.

      இந்த நிகழ்வில், ஊர்பொதுமக்கள் சார்பாக குமரவேல், திருநாவுக்கரசு, முருகேசன், மனோகர், சக்திவேல், ஆடிட்டர் நிவேதன், ரஜினிகாந்த், சுரேஷ், சரவணன் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

      கோவில் நிர்வாகம் சார்பாக அர்த்தநாரீசுவரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, செயல் அலுவலர் ரமணிகாந்தன், அறங்காவ லர்கள் கார்த்திகேயன், அர்ஜுனன், அருணா சங்கர், பிரபாகரன் ஆகியோர்கள் தீபக் கொப்பரையை பெற்றுக் கொண்டனர்.

      இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலிருந்து தீபக் கொப்பரையை 4 ரதவீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து சென்று அர்த்தநாரீசுவரர் கோவிலின் மலை உச்சியில் தீபம் ஏற்றினர்.

      • காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது.
      • இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

       பரமத்திவேலூர்:

      பரமத்திவேலூர் பகுதிகளில் காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

      போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பரமத்திவேலூரை சேர்ந்த ராஜலிங்கம் ( 55), இவரது மகன் மணிகண்டன் (24 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார், 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 45 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

      • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
      • இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர் பாண்டமங்கலம் வெங்கரை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங்குறிச்சி, குப்பிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசிராமணி, சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், சின்ன சோளி பாளையம், குமாரசாமி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது.

      இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

      • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
      • இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

      பரமத்திவேலூர்:

      பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

      வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.

      இந்தநிலையில் கார்த்திகை தீபத்திருவிழா, கிருத்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      ×