என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "You can apply for Assistant posts"

    • கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது. இதற்கான எழுத்துதேர்வு டிசம்பர் மாதம் 24-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பட்டய பயிற்சி தேர்ச்சி ஆகும். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி இணைய முகவரியில் விண்ணப்பித்து, பயிற்சியில் சேர்ந்து உள்ளவர்களும், இப்பணிக்கு உரிய சான்று மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை கொண்டும், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×