என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது
- இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அனிச்சம்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் ஒன்றரை யூனிட் மணல் அள்ளிச்சென்ற பரமத்திவேலூரை சேர்ந்த சிங்காரம் (30) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






