search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவர் தற்கொலை முயற்சி
    X

    மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவர் தற்கொலை முயற்சி

    • பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
    • இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், வி.நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் பழனிசாமி மல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை 2- வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது. இதனால் மனமுடைந்த பழனிசாமி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×