search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muthumariamman temple"

    • தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
    • 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.

    வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    • கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.
    • விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகர், துர்க்கை நவகிரக மூர்த்திகள், முத்து மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.

    இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம், கோபூஜை, கரி கோலம், அஷ்டாதச கிரியை, தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷேக்னஹோமம், தீபாராதனை முதற்கால யாக பூஜை நடக்கிறது.

    27-ந்தேதி மஹாலஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், யாகசாலை நிர்மாணம்,வேதபாராயணம், தீபாராதனை இரண்டாம் கால பூஜையும் மாலை 6-மணிக்கு விநாயகர் பூஜை, அங்குரார்பணம், ரசாபந்தனம், கும்பாலங்கனம், கலாகர்ஷணம் மூன்றாம் கால பூஜையும் 5000 முறை ஐந்து குண்டங்களில் ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனையும் நடைபெறுகிறது. 28-ந்தேதி காலை நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், தத்துவார்ச்சனை, ஸ்பர்சாநீதி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 10 மணிக்கு முத்து மாரியம்மன் மஹா கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் மற்றும் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை செடல் உற்சவம், காவடி பூஜை, மாட்டு செடல், சவப்பாடைசெடல் நடைபெற்றது. இதில் பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. பாகூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பாகூர், குருவிநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்கா வலர் குழு மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.

    • தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. காப்பு கட்டிய நாள் முதல் காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேகம், பால், தயிர், மஞ்சள் மற்றும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நயினார்வயல் அகத்தீசுவரர் கோவிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு பல வகையான பூக்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    பங்குனி உற்சவ விழா முளைப்பாரி திருவிழாவில் இன்று இரவு அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. நாளை காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

    • திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு பேட் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா காலை நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவில் திருபுவனை தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு பேட் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.

    முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கரிக்கோல நிகழ்ச்சியும், மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பா பிஷேகமும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் திருபுவனை தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    திட்டக்குடி அருகே பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் மகா முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் பழமை வாய்ந்த மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் நாடு நலம் பெற வேண்டியும், நீர்வளம் நிலவளம் வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மகா முத்துமாரியம்மன், காத்தவராயன் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் நாதஸ்வர இசை, மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து மகா முத்துமாரியம்மன் வெளியே கொண்டுவரப்பட்டார். கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் மகாமுத்துமாரியம்மன் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் அங்கு திரண்டிருந்த பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடினர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், 4 வீதிகளில் வந்து மீண்டும் நிலையை வந்தடைந் தது. இதில் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், பரம்பரைபரம்பரையாக மகா முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே தேரை இழுத்துசெல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது என்றார். 
    ×