என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
பெருமுளை மகா முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் மகா முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
By
மாலை மலர்25 Jun 2018 4:00 AM GMT (Updated: 25 Jun 2018 4:00 AM GMT)

திட்டக்குடி அருகே பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் மகா முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் பழமை வாய்ந்த மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் நாடு நலம் பெற வேண்டியும், நீர்வளம் நிலவளம் வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மகா முத்துமாரியம்மன், காத்தவராயன் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் நாதஸ்வர இசை, மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து மகா முத்துமாரியம்மன் வெளியே கொண்டுவரப்பட்டார். கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் மகாமுத்துமாரியம்மன் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் அங்கு திரண்டிருந்த பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடினர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், 4 வீதிகளில் வந்து மீண்டும் நிலையை வந்தடைந் தது. இதில் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், பரம்பரைபரம்பரையாக மகா முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே தேரை இழுத்துசெல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது என்றார்.
இதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் நாடு நலம் பெற வேண்டியும், நீர்வளம் நிலவளம் வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மகா முத்துமாரியம்மன், காத்தவராயன் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் நாதஸ்வர இசை, மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து மகா முத்துமாரியம்மன் வெளியே கொண்டுவரப்பட்டார். கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் மகாமுத்துமாரியம்மன் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் அங்கு திரண்டிருந்த பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடினர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், 4 வீதிகளில் வந்து மீண்டும் நிலையை வந்தடைந் தது. இதில் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், பரம்பரைபரம்பரையாக மகா முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே தேரை இழுத்துசெல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
