search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother Suicide"

    குடும்ப தகராறில் மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெறும்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி 11ம் வகுப்பும், சரவணன் 9-ம்வகுப்பும் படித்து வந்தனர். முருகன் தனது குடும்பத்தினருடன் திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்றிரவு அவர் பணிக்கு சென்று விட்டார். பின்னர் கோமதி, சரவணன் ஒரு அறையிலும், நந்தினி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். இன்று காலை நந்தினி எழுந்து பார்த்த போது சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கோமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த நந்தினி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோமதி, சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது முருகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முருகன் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு முருகன் வேலைக்கு சென்றதும், தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி அருகே விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி:

    பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சிவபிரகாசம். அவரது மனைவி சுகுணா (வயது 42). இவர்களது மகன் அஜித்குமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வாகன விபத்தில் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தை மறக்கமுடியாமல் சுகுணா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    கடந்த 3-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, சுகுணா மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகுணா இறந்தார்.

    இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள பழையபேட்டை முனுசாமிதெருவை சேர்ந்த ஸ்ரீனிவான், இவரது மனைவி லஷ்மி(28), இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாகிறது. மேலும் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    இந்த நிலையில் லஷ்மிக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனையடுத்து கடந்த 21-ந் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த லஷ்மி விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று லஷ்மி இறந்தார். 

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள நரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரதியான்(32). இவருக்கும், ஓசூர் காரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா என்பவர் மகள் நாகவேணி(29) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 

    இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிகிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையெடுத்து கடந்த 20-ம் தேதி காலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த நாகவேணி, பாகலூர்-பேரிகை ரோட்டில் உள்ள சுப்பிரமணி விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார், நாகவேணியின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரையில் மகள் தற்கொலை செய்து கொண்டதால் தாயும் உயிரை மாய்த்துக் கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    மதுரை:

    மதுரை கே.புதூர் லூர்து நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தங்கம் (வயது 36). இவர்களது மகள் ரோகிணி (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ரோகிணி காலையில் அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் தங்கம் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த தங்கம் அதிர்ச்சி அடைந்தார். தான் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்ற எண்ணத்தில் அவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் இருந்த ஆசிட்டில் கண்ணாடி துகள்களை போட்டு குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகள் தற்கொலை செய்து கொண்டதால் தாயும் உயிரை மாய்த்துக் கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருச்சி அருகே மகன் தனிக்குடித்தனம் சென்றதால் மனவேதனை அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அலகாப்பட்டி கீழப்பள்ளம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 46). இவரது மனைவி மலர்கொடி(41). இவர்களது மகன் சிவா(25). 

    இந்நிலையில் சிவாவிற்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் சிவா தனது மனைவியுடன் தனி குடித்தனம் சென்று விட்டார். 

    இதனால் மனவேதனை அடைந்த  மலர்கொடி மகன் சிவாவிடம் நாம் அனைவரும் ஒன்றாக வாழலாம் என்று கூறினார். ஆனால் அதற்கு சிவா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மலர்கொடி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அணைக்கட்டு அருகே மகள்களுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை சம்பவத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த மகள் இறந்தார்.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது35). இவருக்கு சுதா (28) என்ற மனைவியும். கஸ்தூரி (9), காயதிரி (7) என 2 மகள்களும் உள்ளனர். முருகேசன் மைசூரில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுதா, கணவர் முருகேசனை ஊருக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முருகேசன் 2 பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதனால் மாதம் ஒரு முறை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த சுதா கடந்த 25-ந்தேதி 2 மகள்களுக்கும் வி‌ஷத்தை கொடுத்துவிட்டு தானும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மயங்கி கிடந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். கஸ்தூரி, காயத்திரி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கஸ்தூரி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அருகே மகள் இறந்த சோகத்தில் வீட்டில் தனியாக இருந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் இரும்பாலை, பெருமாப்பட்டி அருகே உள்ள வெள்ளையங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 35). இவரின் மகள் கிருத்திகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை நினைத்து மனவேதனையுடன் இருந்த சின்னபொண்ணு நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவல் அறிந்த எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள பட்டமுத்தாம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சின்னபொண்ணுவின் தந்தை தங்கவேல் (58), இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். 

    புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அகத்தியர் வீதியில் வசித்தவர் பேச்சியம்மாள் என்ற நந்தினி (வயது 22). கணவர் பெயர் விஜயன்.

    இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்தோட்டில் வசித்து வந்த இவர்கள் பிரிந்து விட்டனர்.

    பேச்சியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் ஈரோடு அக்த்தியர் வீதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 2 பேரம் பள்ளி முடிந்து திரும்பினர். அப்போது வீட்டின் உள்பக்க கதவு தாழ் போடப்பட்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்த போத உள்ளே மின் விசிறியில் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிணமாக தொங்கினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறினர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தொட்டியம் அருகே கணவர் திட்டியதால் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். டிரைவர். இவரது மனைவி லதா (42). இவர்களுக்கு சூர்யா (12), பிருந்தா (10), சரண்யா (6) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் செல்வம் லதா இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வம் லதாவை திட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். 

    இதில் மனமுடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பக்கத்தில் உள்ள வயலுக்கு சென்று அங்கு அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த  அக்கம் பக்கம் உள்ளவர்கள் லதாவை தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது68) விவசாயி. இவரது மனைவி சரோஜா (65). இவர்களுக்கு மனோகரன் (41) என்ற மகன் உள்ளார்.

    இவர் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கோபி, சின்னத்துரை ஆகியோரிடம் கடன் வாங்கி இருந்தார்.

    தான் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திரும்ப செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு 3 பேரும் மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த மனோகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மனோகரன் இறந்தபிறகும் சின்னச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் கடன் தொகையை தருமாறு 3 பேரும் மிரட்டி வந்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சரோஜா வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சின்னச்சாமி கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கந்து வட்டி கொடுமை சட்டத்தின்கீழ், நாகராஜ், கோபி, சின்னத்துரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
    போதைக்கு கணவர் அடிமையானதால் 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம்  மருவத்தூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருப்புசாமிக்கு தொடர்ந்து குடி பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் அக்கம் பக்கத்தினரின் பழி சொல்லுக்கு ஆளானார். தனது கணவரிடம் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குடிப்பழக்கத்தை கைவிட்டு ஒழுக்கமாக வாழும்படி அறிவுரை செய்து வந்தார்.

    தனது மது பழக்கத்திற்கு மனைவி தடையாக உள்ளாரே என நினைத்த கருப்புசாமி அடிக்கடி போதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவர் எவ்வளவு கூறியும் கேட்காமல் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை தொல்லை செய்து வந்துள்ளார்.

    ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரேவதி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டார். 

    பின்னர் வீட்டிற்கு வந்த கணவர் கருப்பசாமி மனைவி தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறினார். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×