என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mother Suicide"
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி 11ம் வகுப்பும், சரவணன் 9-ம்வகுப்பும் படித்து வந்தனர். முருகன் தனது குடும்பத்தினருடன் திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
நேற்றிரவு அவர் பணிக்கு சென்று விட்டார். பின்னர் கோமதி, சரவணன் ஒரு அறையிலும், நந்தினி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். இன்று காலை நந்தினி எழுந்து பார்த்த போது சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கோமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த நந்தினி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோமதி, சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது முருகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முருகன் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு முருகன் வேலைக்கு சென்றதும், தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சிவபிரகாசம். அவரது மனைவி சுகுணா (வயது 42). இவர்களது மகன் அஜித்குமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வாகன விபத்தில் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தை மறக்கமுடியாமல் சுகுணா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 3-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, சுகுணா மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகுணா இறந்தார்.
இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கே.புதூர் லூர்து நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தங்கம் (வயது 36). இவர்களது மகள் ரோகிணி (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ரோகிணி காலையில் அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் தங்கம் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த தங்கம் அதிர்ச்சி அடைந்தார். தான் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்ற எண்ணத்தில் அவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் இருந்த ஆசிட்டில் கண்ணாடி துகள்களை போட்டு குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கம் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் தற்கொலை செய்து கொண்டதால் தாயும் உயிரை மாய்த்துக் கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது35). இவருக்கு சுதா (28) என்ற மனைவியும். கஸ்தூரி (9), காயதிரி (7) என 2 மகள்களும் உள்ளனர். முருகேசன் மைசூரில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுதா, கணவர் முருகேசனை ஊருக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முருகேசன் 2 பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதனால் மாதம் ஒரு முறை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுதா கடந்த 25-ந்தேதி 2 மகள்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மயங்கி கிடந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். கஸ்தூரி, காயத்திரி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கஸ்தூரி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் இரும்பாலை, பெருமாப்பட்டி அருகே உள்ள வெள்ளையங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 35). இவரின் மகள் கிருத்திகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை நினைத்து மனவேதனையுடன் இருந்த சின்னபொண்ணு நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள பட்டமுத்தாம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சின்னபொண்ணுவின் தந்தை தங்கவேல் (58), இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அகத்தியர் வீதியில் வசித்தவர் பேச்சியம்மாள் என்ற நந்தினி (வயது 22). கணவர் பெயர் விஜயன்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்தோட்டில் வசித்து வந்த இவர்கள் பிரிந்து விட்டனர்.
பேச்சியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் ஈரோடு அக்த்தியர் வீதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 2 பேரம் பள்ளி முடிந்து திரும்பினர். அப்போது வீட்டின் உள்பக்க கதவு தாழ் போடப்பட்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்த போத உள்ளே மின் விசிறியில் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிணமாக தொங்கினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறினர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது68) விவசாயி. இவரது மனைவி சரோஜா (65). இவர்களுக்கு மனோகரன் (41) என்ற மகன் உள்ளார்.
இவர் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கோபி, சின்னத்துரை ஆகியோரிடம் கடன் வாங்கி இருந்தார்.
தான் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திரும்ப செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு 3 பேரும் மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த மனோகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனோகரன் இறந்தபிறகும் சின்னச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் கடன் தொகையை தருமாறு 3 பேரும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சரோஜா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சின்னச்சாமி கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கந்து வட்டி கொடுமை சட்டத்தின்கீழ், நாகராஜ், கோபி, சின்னத்துரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்