search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிக்குடித்தனம்"

    எடப்பாடி அருகே கணவர் தனிக்குடித்தனம் வரமறுத்ததால் பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.

    எடப்பாடி:

    கரூர் மாவட்டம், தாலியாபட்டி, வெள்ளிஆணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா(29) இவர்களுக்கு யாழினி (4) என்ற பெண் குழந்தை உள்ளது.

    தீபா சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    அவர் எடப்பாடியை அடுத்த மொரப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தார். வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் யாழினி எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    இந்நிலையில் தற்போது கோடைவிடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற தீபா, அங்கு தனது கணவர் ராஜ்குமாரிடம், அடுத்த மாதம் குடும்பத்துடன் மொரப்பட்டி பகுதிக்கு சென்று குடித்தனம் நடத்துவோம் என வற்புறுத்தினார். ஆனால் அதற்கு ராஜ்குமார் சம்மதிக்கவில்லை. பெற்றோருடன் தான் இருப்பேன் என கூறினார். இதனால் தீபா மனவேதனை அடைந்தார். நேற்று அவர் மொரப்பட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி எடப்பாடிக்கு வந்தார்.

    இந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் தீபா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் உடனடியாக தீபா குடியிருக்கும் மொரப்பட்டிக்கு வந்தார். அங்கு தீபா வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தீபாவை மீட்ட ராஜ்குமார், அவரை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    தீபாவிற்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகவில்லை. இதனால் அவர் இறப்பு குறித்து கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இன்று காலை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த சங்ககிரி கோட்டாச்சியர் அமிர்தலிங்கம் தீபாவின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    தீபா இறந்தது குறித்து அவரது மகள் யாழினிக்கு தெரியவில்லை. இதனால் அவள் என் அம்மா எங்கே என்று உறவினர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக கூறினர். அம்மா எப்ப வருவாங்க என அடிக்கடி அப்பாவித்தனமாக கேட்கும் குழந்தையின் பரிதாப நிலை, காண்போரை கண்ணீரில் மிதக்க செய்தது.

    பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஒட்டப் பட்டியைச் சேர்ந்தவர் துரை (வயது 37). இவர் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். 

    இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெர்சின் என்ற மகன் உள்ளார். துரை வேலைக்காக வெளியூருக்கு சென்று விடுவதால் மோனிஷா தனது மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற துரை வீடு திரும்பி வந்ததும், மோனிஷா தனிக்குடித்தனம் செல்லலாம் என்று அவரிடம் கூறினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷா நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை கண்ட மோனிஷாவின் மாமனார், மாமியார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து என்ன காரணத்திற்காக  தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மனைவி தனிக்குடித்தனத்துக்கு வலியுறுத்தியதால் மனமுடைந்த தறிப்பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு இடையன் காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது40).இவரது மனைவி பூமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கார்த்தி ஈரோட்டில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். கார்த்தி- பூமதி கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் பூமதி தனது கணவரிடம் தனிக்குடித்தனம் போகலாம் என்று வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இன்று காலையும் இது சம்பந்தமாக பூமதி கார்த்திக்கிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி அருகே மகன் தனிக்குடித்தனம் சென்றதால் மனவேதனை அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அலகாப்பட்டி கீழப்பள்ளம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 46). இவரது மனைவி மலர்கொடி(41). இவர்களது மகன் சிவா(25). 

    இந்நிலையில் சிவாவிற்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் சிவா தனது மனைவியுடன் தனி குடித்தனம் சென்று விட்டார். 

    இதனால் மனவேதனை அடைந்த  மலர்கொடி மகன் சிவாவிடம் நாம் அனைவரும் ஒன்றாக வாழலாம் என்று கூறினார். ஆனால் அதற்கு சிவா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மலர்கொடி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நெகமம் அருகே தனிக்குடித்தனத்துக்கு கணவர் வர மறுத்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள தேவனாம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரவினா (24). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சண்முகசுந்தரம் தனது தாயுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

    நேற்று சண்முக சுந்தரம் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் பிரவினா தனது அறையில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் அருகில் அழுது கொண்டிருந்தான். இந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த பிரவினாவின் மாமியார் ஓடி வந்தார். அப்போது பிரவினா அறை உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

    இது குறித்து வேலைக்கு சென்று இருந்த தனது மகன் சண்முக சுந்தரத்துக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரவினா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பொள்ளாச் சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீசார் விரைந்து வந்து பிரவினா உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    பிரவினா தனது கணவரிடம் தனிக்குடித்தனம் செல்லலாம் என கூறி அதற்கான பொருட்களையும் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் சண்முக சுந்தரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஏற்பட்ட மன வேதனையில் பிரவினா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 5 வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    ×