search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை
    X

    கிருஷ்ணகிரி அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள பழையபேட்டை முனுசாமிதெருவை சேர்ந்த ஸ்ரீனிவான், இவரது மனைவி லஷ்மி(28), இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாகிறது. மேலும் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    இந்த நிலையில் லஷ்மிக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனையடுத்து கடந்த 21-ந் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த லஷ்மி விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று லஷ்மி இறந்தார். 

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×