search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother in law"

    குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் பாண்டி ரோட்டை சேர்ந்தவர் கோபால் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவருக்கும் மயிலம் செந்தூர்சாலையை சேர்ந்த நவநீதம் மகள் தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்குழந்தை உள்ளன.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்பின்பு கோபாலுக்கு பாதிரா புலியூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அந்த பெண்ணுடன் அவர் கோவைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

    இதை அறிந்த தனலட்சுமி மயிலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவை சென்று கோபாலையும் அந்த பெண்ணையும் மீட்டு அழைத்து வந்தனர். அதன்பின்பு போலீசார் கோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கோபாலுக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த தனலட்சுமி 2 குழந்தைகளுடன் தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் கோபால் ஆத்திரம் அடைந்தார். அவர் அடிக்கடி மாமியார்வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு தகராறு செய்து வந்தார்.

    நேற்று மாலையும் கோபால் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்புமாறு நவநீதிடம் கூறினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோபால் மாமியார் நவநீதத்தை தாக்கினார். இதை தட்டிக்கேட்ட தனலட்சுமியையும் கோபால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். பின்பு கோபாலும் அவரது உறவினர் மணிகண்டன் (26) என்பவரும் சேர்ந்து போனில் தனலட்சுமியையும், நவநீதத்தையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து மயிலம் போலீசில் தனலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோபாலை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியர் கொலையில் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
    சிவகிரி:

    சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.

    இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.

    இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.

    அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சுரண்டை அருகே வீடு புகுந்து மாமியார்-மருமகளிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சுரண்டை:

    நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை அணைந்தபெருமாள் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி மின்னல்கொடி (வயது 36). இவருடைய மாமியார் கோமதியம்மாள். சம்பவத்தன்று இரவு 3 பேரும் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது மின்னல்கொடி உள்ளிட்ட 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    உடனே அந்த மர்ம நபர் கோமதியம்மாள் கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை நைசாக பறித்தார். பின்னர் மின்னல்கொடி கழுத்தில் கிடந்த 3¾ பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு கண்விழித்த மின்னல்கொடி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கைகளால் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.

    இதனால் சுதாரித்த மர்மநபர் தங்க சங்கிலியை வேகமாக பிடித்து இழுத்ததில், இரண்டு துண்டாக அறுந்து, 1¼ பவுன் மின்னல்கொடி கையிலும், 2½ பவுன் மர்ம நபர் கையிலும் சிக்கியது. உடனே ஜெயச்சந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் 5 பவுன் நகையுடன் தப்பித்து இருளில் ஓடி மறைந்து விட்டார். பல இடங்களில் தேடியும் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். வீடு புகுந்து மாமியார்-மருமகளிடம் மர்மநபர் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பொதுவாக மாமியாருக்கும், மருமகளுக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் கருத்து வேறுபாடுகளுடன்தான் இருப்பார்கள். இத்தகைய கால கட்டத்தில் மருமகளுக்கு மாமியார் சிறுநீரகம் கொடுத்து உயிர் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. எனவே, சிறுநீரக மாற்று ஆபரேசன் அல்லது டயாலிசிஸ் செய்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாது. சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே சோனிகாவின் தாயாரை தொடர்புகொண்டு சிறுநீரகம் தானம் வழங்கும்படி கேட்டனர்.

    அதற்கு தாயார் மறுத்து விட்டார். பின்னர் அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் சிறுநீரகம் தர மறுத்துவிட்டனர்.

    ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி (60) தனது மருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கமுன்வந்தார். சோனிகாவை தனது மகளாக பார்க்கிறேன் என்றார். பல பரிசோதனைகளுக்கு பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    தற்போது சோனிகா உடல் நலத்துடன் இருக்கிறார். தனக்கு சிறுநீரகம் கொடுத்து உயிர்காத்த மாமியாரை தாயாக பார்க்கிறேன்’’ என்றார்.
    வங்கியில் கடன் வாங்கிய தகராறில் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சுமதி. இவர் பாப்ஸ்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேவி. தேவிக்கும் லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பவருக்கு திருமணம் நடந்தது.

    பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு ஒருவங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இதற்கு அவரது மாமியார் சுமதி சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் கடையையும் மூடிவிட்டு, வாங்கிய கடனையும் கட்டாமல் பன்னீர் செல்வம் நிறுத்தி விட்டார்.

    மேலும் பணம் கட்டாததாலும், கடையை மூடிவிட்டதாலும் வங்கியில் இருந்து மாமியார் சுமதியிடம் சென்று பணம் கட்டுமாறு கூறினர். அதற்கு மாமியார், மருமகன் பன்னீர் செல்வத்தின் செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் மாமியார் சுமதி வேலைபார்க்கும் பாப்ஸ்கோ கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் பன்னீர் செல்வம் மாமியார் சுமதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதுகுறித்து சுமதி லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×