என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mother in law"
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பாண்டி ரோட்டை சேர்ந்தவர் கோபால் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவருக்கும் மயிலம் செந்தூர்சாலையை சேர்ந்த நவநீதம் மகள் தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்குழந்தை உள்ளன.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்பின்பு கோபாலுக்கு பாதிரா புலியூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அந்த பெண்ணுடன் அவர் கோவைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
இதை அறிந்த தனலட்சுமி மயிலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவை சென்று கோபாலையும் அந்த பெண்ணையும் மீட்டு அழைத்து வந்தனர். அதன்பின்பு போலீசார் கோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.
சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கோபாலுக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த தனலட்சுமி 2 குழந்தைகளுடன் தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் கோபால் ஆத்திரம் அடைந்தார். அவர் அடிக்கடி மாமியார்வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு தகராறு செய்து வந்தார்.
நேற்று மாலையும் கோபால் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்புமாறு நவநீதிடம் கூறினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோபால் மாமியார் நவநீதத்தை தாக்கினார். இதை தட்டிக்கேட்ட தனலட்சுமியையும் கோபால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். பின்பு கோபாலும் அவரது உறவினர் மணிகண்டன் (26) என்பவரும் சேர்ந்து போனில் தனலட்சுமியையும், நவநீதத்தையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மயிலம் போலீசில் தனலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோபாலை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மணிகண்டனை தேடி வருகின்றனர்.
சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.
தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.
இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.
இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.
அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.
டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. எனவே, சிறுநீரக மாற்று ஆபரேசன் அல்லது டயாலிசிஸ் செய்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாது. சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே சோனிகாவின் தாயாரை தொடர்புகொண்டு சிறுநீரகம் தானம் வழங்கும்படி கேட்டனர்.
அதற்கு தாயார் மறுத்து விட்டார். பின்னர் அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் சிறுநீரகம் தர மறுத்துவிட்டனர்.
ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி (60) தனது மருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கமுன்வந்தார். சோனிகாவை தனது மகளாக பார்க்கிறேன் என்றார். பல பரிசோதனைகளுக்கு பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தற்போது சோனிகா உடல் நலத்துடன் இருக்கிறார். தனக்கு சிறுநீரகம் கொடுத்து உயிர்காத்த மாமியாரை தாயாக பார்க்கிறேன்’’ என்றார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சுமதி. இவர் பாப்ஸ்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேவி. தேவிக்கும் லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பவருக்கு திருமணம் நடந்தது.
பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு ஒருவங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இதற்கு அவரது மாமியார் சுமதி சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் கடையையும் மூடிவிட்டு, வாங்கிய கடனையும் கட்டாமல் பன்னீர் செல்வம் நிறுத்தி விட்டார்.
மேலும் பணம் கட்டாததாலும், கடையை மூடிவிட்டதாலும் வங்கியில் இருந்து மாமியார் சுமதியிடம் சென்று பணம் கட்டுமாறு கூறினர். அதற்கு மாமியார், மருமகன் பன்னீர் செல்வத்தின் செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் மாமியார் சுமதி வேலைபார்க்கும் பாப்ஸ்கோ கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் பன்னீர் செல்வம் மாமியார் சுமதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து சுமதி லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்