search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attacking"

    • போலீசில் புகார் தெரிவித்ததால் ஆத்திரம்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் துறைமுக ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 29). இவர் கப்பலில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.

    தற்போது 5 மாத விடு முறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடன் வேலை செய்யும் ஊழியர் ஞானேஸ்வரனும் விடுமுறையில் வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோவில் குளத்திற்கு அருகே கவுதம்ராஜ் நின்று கொண்டி ருந்த போது அவரை ஞானேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் கையாளும் தடியாலும் தாக்கினர்.

    இது சம்பந்தமாக கவுதம்ராஜ் அரியாங்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர். பிறகு கோர்ட்டு மூலம் தினம்தோறும் கையெழுத்திட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தேரோடும் வீதியில் நின்று கொண்டிருந்த கவுதம்ராஜை ஞானேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், யுனதன் ஆகிய 3 பேர் சேர்ந்து, உன்னை எவ்வளவு அடித்தாலும் போலீசில் புகார் தெரிவித்தாலும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. போலீசில் புகார் தெரிவித்தால் நாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவோம் என கூறி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.

    இது சம்பந்தமாக மீண்டும் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவுதம்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரன், வசந்தகுமார், யுனதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
    • இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.

    இவர் கூலி வேலை செய்து வருகிறார். இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.

    இதனால் இளம்பெண் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவருக்கும் இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் கணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் இளம்பெண் சீட்டுக்கு கட்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுக்ாமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம் பெண்ணை தொடர்பு கொண்ட பெண், நீ கேட்ட சீட்டு பணத்தை தருகிறேன். வீட்டில் வந்து வாங்கி கொள் என கூறி அழைத்தார்.

    பணம் வாங்கும் ஆசையில் இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு சென்றதும், அவர் இளம்பெண்ணிடம் தனது கணவருடனான கள்ளக்கா தலை கைவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பெண், இளம்பெண்ணை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

    பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவ ரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் ஆண்ட னாவை உடைத்து கூச்சலிட்டுள்ளனர்.

    இதை சுகன்யா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 7 அவர்கள் சுகன்யாவை ஆபாசமாக பேசி தாக்கினர்.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் டிஸ் ஆண்டனாவை உடைத்து சுகன்யாவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து யோகேசுவரன் என்ற நாகரத்தினம், ஹரி கிருஷ்ணன்(19), தினேஷ் குமார்(22), ரியாஸ் அகமது (18), முகமது பரீத் (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர். 

    • பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
    • போலீசார் இளம்பெண்ணின் தந்தை ஜெகநாதன், சகோதரர் தங்கபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் குமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர்.

    இவருக்கும், சிவகாசியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் 9 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குமாருக்கு சிவகாசியை சேர்ந்த மற்றொரு பெண்ணு டன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்கா தலாக மாற 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.

    இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வரவே, அவர் கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இள ம்பெண் சிவகாசி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 2 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து குமார் தனது மனைவியுடன் கோவைக்கு வந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமாரின் கள்ளக்காதலி, கோவைக்கு வந்துள்ளார். பின்னர் குமாரை தொடர்பு கொண்டு அழைத்தார். 2 பேரும் சந்தித்து பேசினர்.

    இந்த விவகாரம் குமாரின் மனைவிக்கு தெரியவரவே மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அவர் பெண்ணை தகாத வார்த்தை களால் திட்டியதுடன், தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

    இதுகுறித்து இளம்பெண் தனது மாமனாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மகனுக்கு சாதகமாக பேசினார்.

    இதையடுத்து இளம்பெண் சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குமார் மற்றும் அவரது தந்தை பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணின் கணவர் குமாரை கைது செய்தனர்.

    இதற்கிடையே தனது மகனை, இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் சேர்ந்து தகாத வார்த்தை களால் பேசி தாக்கியதாக குமாரின் தந்தை பரமசிவமும் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இளம்பெண்ணின் தந்தை ஜெகநாதன், சகோதரர் தங்கபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    • வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெட்டப்பாக்கம் அருகே பனையடி குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது34). இவர் வில்லியனூர் அருகே ஒதியம்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.  வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் பூமிநாதன் வேலைக்கு வந்து கொண்டிருந்தார்.

    வில்லியனூர் உத்திர வாணி பேட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் பூமிநாதனை வழிமறித்தது. அவர்கள் கையில் வைத்திருந்த கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பூமிநாதனை சரமாரியாக தாக்கினார்கள்.

    மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூமிநாதன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதனை தாக்கிய 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    • புதுப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகு தமிழரசி. இவருக்கும் செல்வகுமார் என்பவருக்கும் கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.

    செல்வகுமாருக்கு ஏற்கனவே தேன்மொழி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் தேன்மொழி மற்றும் அவரது தந்தை சேகர், தாய் மல்லிகா உள்ளிட்ட 6 பேர் அழகு தமிழரசியுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது செல்வகுமாரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி தனது மனைவி அழகு தமிழரசியை அடித்து அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு மேலும் 10 பவுன் நகை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

    நகை வாங்கி வராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அழகு தமிழரசி அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    அதன் பேரில் போலீசார் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
    • இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளை யம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துராஜ்

    ( வயது20).

    இவர் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு முத்துராஜ் மறுத்துள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்

    டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

    இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் முத்துராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
    • மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அப்துல் சுகூர் ( வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு வந்த சில நபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டனர்.

    மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கும்பல் அப்துல் சுகூரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பிஸ்கட், பலகாரங்கள் வைத்திருந்த ஜாடிகளை அவர்கள் எடுத்து உடைத்து கடையை சூறையாடினர். இது குறித்து அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 22), சதீஷ்குமார் (21), ரஞ்சித் குமார் (25) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி ஆவார்.

    இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் அருகே இடப்பிரச்சினை தகராறில் கட்டிட ஒப்பந்ததாரரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த வி‌ஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக ஊர் பொதுமக்கள் இடம் கேட்டனர். அதற்கு பெருமாள் சம்மதம் தெரிவித்து 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். கோவிலுக்கு மேலும் இடம் தேவை என்று ஊர்பொதுமக்கள் கேட்டதின் பேரில் மீண்டும் 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் தானமாக கொடுத்த 4 சென்ட் இடத்தை விட கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெருமாள் தட்டி கேட்டார் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த சரவணன், பாலசுப் பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேர் பெருமாளை சரமாறியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பெருமாளின் மகன் அண்ணாமலை அமெரிக்காவில் இருந்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து சரவணன், பாலசுப்பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள தெற்கு தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 52). மருமகள் சுசீலா (32). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி (58). இவருக்கும் ஆண்டியப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். 

    இந்நிலையில் சம்பவதன்று வீரம்மாள் மற்றும் சுசிலா, ரெங்கசாமியின் வீட்டின் அருகே நடந்து சென்றனர். அப்போது இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் (20) ஆகியோர் உருட்டு கட்டையால் வீரம்மாளை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து வீரம்மாள் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    லாலாப்பேட்டையில் பணம் கேட்டு மிரட்டி சாலை ஒப்பந்தகாரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    லாலாபேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாபேட்டை அடுத்த பிள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). சாலை ஒப்பந்த பணி செய்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சிலம்பு செல்வன் (57).

    இவர் கடந்த 23-ம் தேதி கொம்பாடிபட்டி சாலையில் பணி செய்து கொண்டு இருந்த செல்வராஜிடம் தனக்கும் கமிசன் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். அதற்குசெல்வராஜ் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பு செல்வன் செல்வராஜை தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குபதிவு செய்து சிலம்பு செல்வனை கைது செய்தனர்.
    மேட்டுப்பாளையத்தில் பணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி புதுநகரை சேர்ந்தவர் மீனாட்சி. (வயது 50). இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மதனகோபாலபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராதாகிருஷ்ணனுக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ராதாகிருஷ்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண் மூலம் அருணகிரி என்ற மகன் உள்ளார்.

    விவாகரத்து பெற்றாலும் ராதாகிருஷ்ணன் அடிக்கடி மீனாட்சியிடம் பணம் கேட்டு மிரட்டி வாங்கி செல்வார். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் லாரியை பழுது பார்ப்பதற்காக மீனாட்சியிடம் ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், மீனாட்சி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் தனது 2-வது மனைவி மகன் அருணகிரியுடன் சேர்ந்து மீனாட்சியை தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த மீனாட்சி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அருணகிரி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.

    ×