search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father son arrested"

    • சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மணிவேல்(வயது 63). இவரது மகன் செல்வமணி(35). தந்தை மகனான இவர்கள் இருவருக்கிடையே சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிவேலின் வீட்டிற்கு வந்த செல்வமணி சொத்தை பிரித்து தரும்படி மணிவேலிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாய்த்தகராறு முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு வந்த மணிவேலின் மனைவி செல்லம்மாள்(55), மகன் செல்வகுமார் (32), உறவினர் சேட்டு (42), மேலும் செல்வமணி மனைவி தேவி(26) ஆகியோரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிவேல் மற்றும் செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார்.
    • கலெக்டர் உத்தரவின்பேரில் தந்தை-மகன் இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்தவர் தெய்வேந்திரன்(49). இவரது மகன் வைஷ்ணவ்குமார்(22). இவர்கள் 2 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 9.8.2022-ந்தேதியன்று காஞ்சிபுரத்தில் இருந்து 10 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து அதில் 5 கிலோ கஞ்சாவை தேனியில் உள்ள ஒரு வியாபாரிக்கு கொடுத்துவிட்டு மீதியிருந்த கஞ்சாவுடன் மயிலாடும்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் தந்தை-மகன் இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆலங்குடி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள தெற்கு தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 52). மருமகள் சுசீலா (32). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி (58). இவருக்கும் ஆண்டியப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். 

    இந்நிலையில் சம்பவதன்று வீரம்மாள் மற்றும் சுசிலா, ரெங்கசாமியின் வீட்டின் அருகே நடந்து சென்றனர். அப்போது இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் (20) ஆகியோர் உருட்டு கட்டையால் வீரம்மாளை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து வீரம்மாள் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×