search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamul"

    • விஜய நிர்மலா பண்ருட்டி- கடலூர் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
    • வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுச்சேரி கிருஷ்ணா நகர் 11-வது கிராஸ் ரோஜா தெரு வை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி விஜய நிர்மலா (வயது43), இவர், பண்ருட்டி- கடலூர் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இங்கு பண்ருட்டி சாமியார் தர்காவை சேர்ந்த சம்சுதீன் தன்னுடன் ஒருவரை அழைத்து கொண்டு கடைக்கு சென்று குடிப்பதற்கு பணம் கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டி மாமுல் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்துகடையின் உரிமையாளர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் கண்ணன் சம்சுதீன் மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அரங்கநாதன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
    • அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சிறு–தொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அரங்க–நாதன் (வயது 41). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், கொள்ளுகாரன் குட்டையில் கிராமியம் என்ற பெயரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடைக்கு அதே ஊரை சேர்ந்த சக்தி என்ற சாமிநாதன் என்பவர் 7 பேருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து உரிமை யாளர் அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.

    பணம் தர மறுத்த அரங்கநாதனை அபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த இரும்பு பைப், கட்டை போன்ற ஆயுதங்களால் கடை–யின் ஜன்னல் கண்ணாடி, டேபிள், சேர், அடுப்பு ஆகியவற்றை உடைத்து சூறையாடிவிட்டு ஓடி–விட்ட–னர். இது குறித்து அரங்க–நாதன் முத்தாண்டிக் குப்பம் போலீசில் புகார்கொடுத்தார். முத்தாண்டி குப்பம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓட்டலை அடித்து உடைத்த– தாக வடக்குத்து கார்த்தி என்ற ராகவன் தோப்புக் கொல்லை கவியரசன், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
    • மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அப்துல் சுகூர் ( வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு வந்த சில நபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டனர்.

    மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கும்பல் அப்துல் சுகூரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பிஸ்கட், பலகாரங்கள் வைத்திருந்த ஜாடிகளை அவர்கள் எடுத்து உடைத்து கடையை சூறையாடினர். இது குறித்து அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 22), சதீஷ்குமார் (21), ரஞ்சித் குமார் (25) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி ஆவார்.

    இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×