search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hotel robbery"

    • திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடை, ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கருப்பையா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று இரவு டாஸ்மாக் ஊழியர் மாயாண்டி வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ஓட்டலும் மூடப்பட்டது.

    இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விலை யுயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் வசூல் பணத்தை திருடி சென்றதாக தெரி கிறது. அங்கு கைவரிசை காட்டிய பின்பு அருகில் இருந்த ஓட்டல் கதவை உடைத்து உள்ளே சென்றது.

    அங்கு நிதானமாக குளிர்சாதன பெட்டியில் இருந்த பானங்களை குடித்த மர்மநபர்கள் பின்னர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை-ஓட்டல் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அரங்கநாதன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
    • அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சிறு–தொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அரங்க–நாதன் (வயது 41). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், கொள்ளுகாரன் குட்டையில் கிராமியம் என்ற பெயரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடைக்கு அதே ஊரை சேர்ந்த சக்தி என்ற சாமிநாதன் என்பவர் 7 பேருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து உரிமை யாளர் அரங்கநாதனிடம் ரூ.5 ஆயிரம் பணம்வேண்டும் என்று கேட்டுள்ளர்.

    பணம் தர மறுத்த அரங்கநாதனை அபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த இரும்பு பைப், கட்டை போன்ற ஆயுதங்களால் கடை–யின் ஜன்னல் கண்ணாடி, டேபிள், சேர், அடுப்பு ஆகியவற்றை உடைத்து சூறையாடிவிட்டு ஓடி–விட்ட–னர். இது குறித்து அரங்க–நாதன் முத்தாண்டிக் குப்பம் போலீசில் புகார்கொடுத்தார். முத்தாண்டி குப்பம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓட்டலை அடித்து உடைத்த– தாக வடக்குத்து கார்த்தி என்ற ராகவன் தோப்புக் கொல்லை கவியரசன், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டி அருகே ஓட்டலை சூறையாடிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • உரிமையாளர் பன்னீரை தாக்கிவிட்டு பொருட்களை தாக்கி சேதப் படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் பகுதியில் காட்டுக்கூடலூர்- விருத்தாசலம் செல்லும் சாலைஅருகே காட்டு கூடலூரைசேர்ந்த பன்னீர்செல்வம் என்ப வர்ஆனந்தாயி அம்மன் என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு கடந்த 9-ந் தேதி மதியம் சாப்பிட வந்த பெரிய காப்பான் குளத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் விலை குறைவாக சிக்கன் ரைஸ் கேட்டு வாக்குவாதம் செய்த னர்.இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    அப்போது காப்பான் குளத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் உள்ள சிலருக்கு போன் செய்து 10-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்து கடையினுள் நுழைந்து உரிமையாளர் பன்னீரை தாக்கிவிட்டு பொருட்களை தாக்கி சேதப் படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பா கமுத்தாண்டி குப்பம் போலீசில் பன்னீர்செல்வம் கொடுத்தபுகாரின் பேரில் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டஇளையராஜா (35),தீனா(20),ஸ்டாலின்(21),ராக்ராஜ்குமார் (26), சுபாஷ் ( 22 ),பரத் (35)சங்கர் (37)ஆகியோரைகைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவு எதிரிகளை தேடி வருகின்றனர்.

    ×